பதிவர்களுக்கு திரட்டி தரும் பரிசு... பதிவர்களே தயாரா...?



தமிழ் இணைய உலகில் திரட்டிகளுக்கு குறைவில்லை.ஆனாலும் புதிது புதிதாக திரட்டிகள் அறிமுகமாகி கொண்டு இருக்கின்றன.இப்போது புதிதாக அறிமுகமாகியிருக்கும் திரட்டி ஹாட்லிங்ஸ்இன் டாட் காம்.
ஹாட்லிங்ஸ்இன் பற்றி பார்ப்பதற்கு முன் தமிழ் திரட்டிகள் பற்றி ஒரு பார்வை பார்த்து விடலாம்.தமிழ்மண‌த்தில் துவங்கி தமிழிஷ் (இப்போது இன்ட்லி)வலைப்பூக்கள்,உலவு,உடான்ஸ்,தமிழ்10 என பத்துக்கும் மேற்பட்ட திரட்டிகள் உள்ளன.

இவை எல்லாமே பொதுவில் திரட்டி என்று குறிப்பிடப்படாலும் அடிப்படையில் இரண்டு வகை இருக்கின்றன.தமிழ்மணம்,தேன்கூடு போன்றவை பிரதானமாக வலைப்பதிவுகளுக்கானவை.இந்த பிரிவில் முன்னோடியாக கருதப்படும் டெக்னோரெட்டியை பின்பற்றி துவங்கப்பட்டவை.

இன்ட்லி போன்றவை வலைப்பதிவுக்கானவை மட்டும் அல்ல;இணையத்தில் வெளியாகும் எல்லா விதமான செய்திகளுக்கும் ஆனவை.இந்த வகை திரட்டிகள் முன்னோடி தளமான டிக்கை பின்பற்றி உருவானவை என்று கருதலாம்.

டிக் செய்திகளை ஜனநாயகமயமாக்கிய சேவையாக புகழப்படுகிறது.அதாவது செய்தி வெளியீட்டை ஆசிரியர் குழுவிடம் இருந்து விடுவித்து இணையவாசிகள் கைகளில் ஒப்படைத்த சேவையாக கருதப்படுகிறது.டி வருகைக்கு முன்னர் செய்தி தேர்வு என்பது ஆசிரியர்களாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தது.அவர்களால் மட்டுமே இதனை சரியாக செய்ய முடியும் என கருதப்பட்டது.

டிக் தான் இதனை உடைத்து இணையவாசிகளே செய்திகளை சமர்பிக்கலாம் என கொண்டு வந்தது.அந்த செய்தி தகுதியுடையதா என தீர்மானிக்கும் பொறுப்பை சக இணைய‌வாசிகளிடமே வழங்கியது.அதாவது வாக்களிப்பதன் மூலம் ஒரு செய்தியை முன்னுக்கோ பின்னுக்கோ கொண்டு வர முடியும்.
இப்படி இணையவாசிகளே ஒரு சமூகமாக செய‌ல்ப‌டும் போது பலதரப்பட்ட செய்திகளை பாரபட்சமற்ற முறையில் தெரிந்து கொள்ள வழி ஏற்படும் என கருதப்பட்டது.

டிக் செல்வாக்கு பெற்ற விதம் மற்றும் இப்போது தேய்ந்து போயிருக்கும் விதம் குறித்து நிறையவே விவாதிக்கலாம்.விஷ்யம் என்னவென்றால் டிக் செய்திகளை ஜனநாயகமயாமாக்கியது என்பது தான்.டிக் மூலம் இணையத்தில் கண்ணில் படாமலே போய்விடக்கூடிய பல செய்திகளை தெரிந்து கொள்ள முடிந்தது.

டிக்கின் குளோனாகவே தமிழிஷ் அறிமுகமானது என கருதலாம்.தொடர்ந்து பல திரட்டிகள் அறிமுகமாயின.

இப்போது ஹாட்லிங்ஸ்இன் திரட்டிக்கு வருவோம்.வடிவமைப்பிலோ தோற்றத்திலோ இந்த திரட்டியும் மற்ற திரட்டிகள் போலவே உள்ளது.அடிப்படை செயல்பாடும் ஒன்றாகவே உள்ளது.பதிவர்கள் அல்லது இணையவாசிகள் செய்தி அல்லது கட்டுரையை சமர்பிக்கலாம்.இப்படி சம‌ர்பிக்கப்பட்டவை வரிசையாக முகப்பு பக்கத்தில் பட்டியலிடப்படுகின்றன.
இப்படி ஒரே போன்ற திரட்டிகள் தேவையா?மற்ற திரட்டிகளில் இருந்து இது எந்த விதத்தில் மாறுபடுகிறது என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.

இந்த கேள்விகளுக்கு ஹாட்லிங்ஸ்இன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள பதில்கள் அதன் நோக்கத்தை தெளிவாக உணர்த்துகிறது.

முதலில் ஏற்கனவே பல திரட்டிகள் இருப்பதை இது ஒப்புக்கொள்கிறது.ஆனால் தன்னை வேறுபடுத்தி கொள்ள முடியும் என்று நம்புகிறது.

தற்போது தமிழில் துவக்கப்பட்டுள்ள இந்த திரட்டி ஆங்கிலம் மற்றும் தெலுங்கு போன்ற இந்திய மொழிகளிலும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

உண்மையில் இந்த விரிவாக்கம் நலல் யோசனை.பல மொழிகளை பேசும் மாநிலங்களை கொண்ட நம் நாட்டில் ஒரு சேவையை நாடு தழுவிய அளவில் விரிவாக்கம் செய்வது நமக்குள்ள அணுகூலங்களில் முக்கியமானது.

மேலும் தமிழ் சூழலில் முன்னிலை பெற வாரம் ஒரு நட்சத்திர பதிவரை தேர்வு செய்து பரிசளிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே தமிழ் மணம் இப்படி நட்சத்திர பதிவரை அடையாளம் காட்டினாலும் பதிவர்களுக்கு பரிசளிப்பது என்பது வரவேற்கத்தக்கது.தமிழ் சூழலில் பதிவர்கள் எந்த விதமான பலனோ ஊக்கமோ இல்லாமல் தான் செயல்படுகின்றனர்.எனவே பரிசுகள் தேவை தான்.

இந்த திரட்டியை குறைவான நபர்களே பயன்ப்டுத்தி வருகின்றனர்.முகப்பு பக்கத்தில் ஒரு சிலரின் பெயர்களே மீண்டும் மீண்டும் வருகின்றன.ஆனால் திரட்டிக்கு வருகை தரும் வாசக‌ர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக குறிப்பிடுகிறது.அதாவது இணைப்புகளை வெளியிடும் பதிவர்களை விட படிக்கும் வாசகர்கள் அதிகம் என்கிறது.அப்படியிருந்தால் அதுவும் நல்லது தான்.

அதே போல குழு மனப்பான்மைக்கு வித்திடக்கூடிய வாக்களிக்கும் முறைக்கு மாறாக வாசகர்களி அதிகம் படிக்கும் பதிவுகள் தானாக முன்னிலை பெறும் முறை பின்பற்றப்படுவதாக குறிப்பிடுகிறது.

இவையெல்லாம் நல்ல விஷயங்கள் தான்.பார்ப்போம் ஹாட்லிங்ஸ்இன் எப்படி போட்டியை சமாளிக்கிறது என்று.

ஹாட்லிங்ஸ்இன் திரட்டியில் கவனத்தி ஈர்க்கும் ஒரு விஷயம் வலது பக்கத்தில் மேலே உள்ள வண்ண புள்ளிகளை கிளிக் செய்தால் இணைப்புகளின் நிறமும் அதற்கேற்ப மாறுகிறது.சின்ன விஷயம் தான் ஆனால் இணையவாசிகளுக்கு கூடுதல் அதிகாரத்தை தரும் இது போன்ற இன்னும் பிற அம்சங்களை எதிட்பார்க்கிறோம்.

இணையதள முகவரி;http://www.hotlinksin.com/

- நன்றி - மாலைச்சுடர் மாலை நாளிதழ் (27.04.2012)

01:27 by iamvenkatesh · 0

hotlinksin

திணற வைக்கும் திரட்டிகள்...



பதிவை எழுதும் பதிவர்கள் பதிவை எழுதும் நேரத்தை விட திரட்டியில் பதிவை சேர்ப்பதற்கு எடுக்கும் நேரம்தான் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் எனது பிளாக்கில் பதிவை எழுதியதும் சுமார் 10 திரட்டிகளில் இணைக்கிறேன். அவற்றில் குறிப்பிடத்தகுந்த திரட்டிகளின் லிஸ்ட் இதுதான்.


தமிழின் முன்னணி திரட்டியான இன்ட்லியில் ஒரு பதிவைப் போட்டுவிட்டால் பதிவைப் பொறுத்து சுமார் 200 ஹிட்ஸ்கள் கூட வருகின்றன.


இன்ட்லிக்கு அடுத்தபடியான ஹிட்ஸ் அதிகம் தரும் திரட்டி தமிழ்மணம் இந்த திரட்டியில் இருந்து ஹாட்டான பதிவு என்றால் 150 வாசகர்களுக்கு மேலாக கூட வர வாய்ப்பு உள்ளது.


தமிழ்வெளியில் சாதாரண இடுகை முதல் பக்கத்தில் இருக்கும் போதும் சைடு பாரில் இருக்கும் போதும் சுமார் 40 ஹிட்ஸ் வரை வாய்ப்புள்ளது. அதுவே, சூடான இடுகைகளில் முதல் பக்கத்தின் மேலே வந்துவிட்டல் சுமார் 120 ஹிட்ஸ்க்கு மேல் கிடைக்க வாய்ப்புள்ளது.


இந்த திரட்டியில் இணைக்கும் போது ஹாட்டான விசயமென்றால் நிச்சயம் ஒரு இடுகைக்கு 40 இடுகைகள் வந்துவிடும். 


தலைப்புக்கு ஏற்ற மாதிரியே ஹாட்டான லிங்க்ஸை இந்த திரட்டியில் இணைத்துவிட்டால் சுமார் 30 முதல் 50 ஹிட்ஸ் வரை வருகிறது.

இவையெல்லாம் நீங்கள் இணைக்கிற தலைப்பு மற்றும் செய்திகளைப் பொறுத்ததே. இவற்றில் முயற்சித்துப் பாருங்கள். இன்னும் ஐந்து திரட்டிகளை இன்னொரு நாளில் பட்டியலிடுகிறேன்.

02:11 by iamvenkatesh · 0

hotlinksin

பில்லா 2 - ஆண்டியாகப் போவது யார்?




பரபரப்புடன் தயாராகிவரும் பில்லா 2 படத்தின் விற்பனை இமாலய சாதனை படைத்துள்ளது. இந்தப் படத்தின் தமிழக திரையரங்குகளின் உரிமை மட்டுமே கிட்டத்தட்ட 25 கோடிக்கு மேல் விற்பனையாகியுள்ளது. படத்தின் தமிழக விநியோக உரிமையை ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் வாங்கியுள்ளார். ரவிச்சந்திரன் பில்லா 2வை மற்ற விநியோகஸ்தர்களிடம் விற்றுவிடுவார் என்றே தெரிகிறது. நிச்சயம் சொந்தமாக ரிலீஸ் செய்ய மாட்டார். 5 வருடங்களுக்கு முன்பு பில்லா 1 படம் ரிலீஸ் ஆன போது இருந்த டிரென்ட் வேறு இப்போது இருக்கும் ட்ரென்ட் வேறு. அஜித்தின் மாஸ்க்காகவே அவரது படங்கள் முதலில் சில நாட்கள் ஓடிய காலம் அது. ஆனால், இன்றோ எந்த ஒரு பெரிய நடிகரின் படத்திற்கும் இருக்கும் ஓப்பனிங் படம் நல்லா இல்லாவிட்டால் அடுத்த ஓரிரு நாட்களிலேயே படம் ஊத்தி விடுகிறது. இந்நிலையில் பில்லா 2 படத்தைப் பொறுத்தவரை ரவிச்சந்திரனை விட இந்த படத்தை ஒவ்வொரு ஏரியாவுக்கும் வாங்குகிற விநியோகஸ்தர்களே அதிகம் ரிஸ்க் எடுக்கிறார்கள். படம் ஹிட்டானால் இந்த விநியோகஸ்தர்கள் எக்கச்சக்கமாக சம்பாதிப்பார்கள். ஆனால், படம் ப்ளாப்பானால் நிச்சயம் மிகப்பெரும் ஆண்டியாகிறவர்களும் இந்த விநியோகஸ்தர்களாகத்தான் இருப்பார்கள்.

02:19 by iamvenkatesh · 0

hotlinksin

ரோகிணி கேட்ட கேள்வி - ஆடிப்போன இசையமைப்பாளர்



டிவி சேனல் ஒன்றில் திரைவிமர்சனம் நிகழ்ச்சியை வழங்கி வருகிறார் நடிகை ரோகிணி. ஏற்கனவே நடிகை சுகாசினி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது போல் படத்தின் இயக்குநர் நடிகர் போன்றோரையும் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து பேட்டி காண்பதுடன் படத்தையும் விமர்சனம் செய்கிறார் ரோகிணி.



ஒத்தவீடு படத்திற்கான விமர்சன நிகழ்ச்சியின் போது படத்தின் இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர் ஆகியோர் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். படத்தின் இயக்குநர், நடிகர் போன்றோரிடம் வளைத்து வளைத்து கேள்விகள் கேட்டார் ரோகிணி. படத்தின் சில விஷயங்களை குறைகூறுகிறேன் என்கிற ரீதியில் பேசிக் கொண்டிருந்தார். இயக்குநரிடம் இந்த காட்சி ஏன் இப்படி, அந்த காட்சி ஏன் அப்படி...? என குறுக்கு விசாரணை நடத்துவது போன்று  கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்.

கடைசியாக இசையமைப்பாளர் தஷியிடம் கேள்வி கேட்க ஆயத்தமானார் ரோகிணி. அவர் இசையமைப்பாளர் தஷியைப் பார்த்து கேட்ட முதல் கேள்வியே அவரை ஆடிப் போக வைத்துவிட்டது. காரணம், ‘இதுதான் உங்கள் முதல் படமா?’ என்ற கேள்வியை தஷியைப் பார்த்து கேட்டார் ரோகிணி. ஏராளமான படங்களுக்கு இசையமைத்துவிட்ட இசையமப்பாளர் தஷி, கேரள அரசின் விருதையும் பெற்றிருக்கிறார். அதையெல்லாம் தெரிந்து கொள்ளாமலேயே எடுத்த எடுப்பிலேயே தஷியிடம் அப்படி ஒரு கேள்வியைக் கேட்டது அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியதை தஷியின் முகபாவனைகளில் இருந்தே தெரிந்து கொள்ள முடிந்தது.

சன் டிவியில் வீரபாண்டியன் அரசியல் பிரமுகர்களை பேட்டி எடுப்பார். அரசியல் பிரமுகர்கள் யாராக இருந்தாலும் அவர்களைப் பற்றிய விஷயங்களை தேடிப் பிடித்து அறிந்து கொள்வார் அதன் பின்னர்தான் அவரை பேட்டி காண்பார். பெரிய அளவுக்கு பிரபலமாகாதவர்கள் எனில் அவர்கள் வாயாலேயே அவர்கள் செய்த சாதனைகளையெல்லாம் சொல்ல வைத்துவிட்டு அல்லது அவரை பற்றி  வீரபாண்டியனே ஒரு அறிமுகம் கொடுத்துவிட்டு அதன் பிறகே பேட்டியாளரிடம் கேள்விகளைக் கேட்பார். இதுதான் பேட்டி எடுப்பதன் அடிப்படை முறை. ஆனால் இது பற்றி எல்லாம் தெரிந்து கொள்ளாமலே எடுத்த எடுப்பிலேயே  ரோகிணி இந்த மாதிரியான கேள்விகளை கேட்டு பேட்டி கொடுக்க வந்தவர்களை ஆடிப்போக வைப்பது சரியா..?

உங்கள் பதிவுகளை http://www.hotlinksin.com திரட்டியில் இணைத்துவிட்டீர்களா...?

09:33 by iamvenkatesh · 0

hotlinksin

விகடன் - அதிர்ச்சி தந்த விளம்பரமும் கட்டுரையும்...



சென்ற மாதத்தின் பசுமை விகடன் பத்திரிகையை நேற்று மின்சாரம் இல்லாத பகல் நேரத்தில்தான் புரட்ட முடிந்தது. ஐந்தாறு பக்கம் புரட்டியதுமே இரண்டு பக்கத்திற்கு பிரமாண்டமாக ஒரு விளம்பரம் அதாவது ஈமு கோழி வளர்த்து லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம் என்று வெளியாகியிருந்தது.

என்னடா இது... ஊரு முழுக்க ஈமு கோழி வளர்த்து சின்னா பின்னமாகிட்டோம்னு ஒவ்வொருத்தரும் சொல்லிட்டிருக்காங்க. இது என்ன அதிசயமா இப்படி ஒரு விளம்பரத்தை பசுமை விகடன்ல போட்டிருக்காங்க... என்று நினைத்துக் கொண்டே அடுத்த பக்கத்தைப் புரட்டினால், அங்கு ஒரு கட்டுரை. ஈமு கோழி வளர்ப்பது சுத்த வேஸ்ட் என்றும் அதனால் பணம் கொஞ்சம் கூட சம்பாதிக்க முடியாது என்று 2 பக்கத்திற்கு மேல் சொல்லிக் கொண்டு போனது அந்த கட்டுரை.

பசுமை விகடன் என்று இல்லை... பெரும்பாலான பத்திரிகைகள் இதே தவறைத்தான் செய்கின்றன. ஏன் இப்படி முன்னுக்குப் பின் முரணான விஷயங்களைப் போடுகிறார்கள் என்று தெரியவில்லை. புகையிலை பிடிப்பது தவறு என்று சொல்லிக் கொள்ளும் அரசாங்கமே அதை விற்பதற்கு அனுமதியும் கொடுத்திருப்பது போன்றுதான் இருக்கிறது இந்த விளம்பர கம் ஆர்ட்டிகிள் மேட்டர்.

நாங்கள் வெளியிடும் விளம்பரங்களின் உண்மைத் தன்மைக்கு நிர்வாகம் பொறுப்பல்ல என்று சொல்லிக் கொண்டுதான் இப்போது எல்லா பத்திரிகைகளும் விளம்பரத்தை வெளியிடுகின்றன. அதாவது எந்த விளம்பரங்களையும் நாங்கள் பணம் கொடுத்தால் வெளியிட்டு விடுவோம். மற்றபடி அதை தொடர்பு கொள்பவர்கள் ஏமாற்றப்பட்டால் நாங்கள் பொறுப்பல்ல... என்பதுதான் இதன் சாராம்சம்.

இந்த நிலை மாறி உண்மைத் தன்மை உள்ள விளம்பரங்களை வெளியிட்டால் படிப்பவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும். வாசகர்களும் ஏமாற்றப்படாமல் இருப்பார்கள். அதைவிட்டுவிட்டு பணம் வருகிறது என்பதற்காக கண்ட விளம்பரங்களைப் போட்டுவிட்டால் பாதிக்கப்படுவது வாசகர்கள் மட்டுமல்ல சம்பந்தப்பட்ட பத்திரிகையின் சர்க்குலேஷனும்தான்.

நண்பர்களே... பதிவர்களே... www.hotlinksin.com திரட்டியில் இணைந்து விட்டீர்களா...? இல்லையென்றால் உடனே இணைந்திடுங்கள்...

01:25 by iamvenkatesh · 0

hotlinksin

கடலை போட பிகரு வேணுமா...? ஆசை காட்டி மோசம் பண்ணும்... - ஒரு உஷார் ரிப்போர்ட்




கடந்த வாரத்தில் ஒருநாள் அவசரமாக வெளியே போக தயாராகிக் கொண்டிருந்தேன். திடீரென மொபைலுக்கு வந்தது ஒரு மெசேஜ். உங்கள் சந்தோஷமோ சோகமோ எதுவானாலும் பரவாயில்லை உங்கள் தோழி என்னிடம் ஷேர் பண்ணிக்குங்க... என்று போடப்பட்டிருந்தது அந்த மெசேஜில். அதை அனுப்பிருந்தது வோடபோன். இது என்னடா புதுசா இருக்கே... என ஆச்சரியமாக இருந்தது. ஆனாலும் அப்போதைக்கு நேரம் இல்லை அதைப் பற்றி யோசிக்க. அவசரமாக கிளம்பி நண்பரைப் பார்க்க போன இடத்தில் கொஞ்சம் வெயிட் பண்ணு இதோ வந்திடுறேன்... என்று சொல்லிவிட்டார் நண்பர். வேற வழி... அவருக்காக காத்திருந்த போது அந்த வோடவோன் மெசேஜ் நினைவுக்கு வந்தது. மொபைலை எடுத்து பார்த்தேன். ஒரு நிமிடம் தோழியிடம் பேச ரூ. 10 என்று போடப்பட்டிருந்தது. நாம என்னத்தைப் பேச, என்று மனம் சொன்னாலும் அப்படி என்னதான் பேசறாங்க பார்க்கலாம்... எழுதுறதுக்கு ஏதாவது ஒரு விஷயம் தேறுமே என்கிற எண்ணத்தில், நம்பரை அழுத்தினேன்.

எதிரில் போன் எடுத்தார்கள். கேட்டது ஒரு பெண்ணின் குரல்தான். ஆனால் ஆட்டோமேட்டிக்காக பதிவு செய்யப்பட்ட குரல். கால் எடுத்ததும் ஏதோ பெண் பேசுவார் என்று நினைத்த எனக்கு ஆட்டோ மேடிக் ரிப்ளை வந்தது தூக்கி வாரிப் போட்டது. உங்கள் அன்புத் தோழியிடம் பேச வேண்டுமா...? உங்கள் மனதில் என்னவெல்லாம் பேச வேண்டும் என்று தோன்றுகிறதோ அனைத்தையும் பேசுங்கள்... கொஞ்சநேரம் காத்திருங்கள்... என்று சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தது. 5 நிமிடங்கள் ஆகியிருந்தன. சரி 50 ரூபாய் இந்நேரம் உருவிருப்பானுக... ஆனாலும் இதன் க்ளேமேக்ஸ் என்ன என்று பார்த்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து வெயிட் பண்ணிக் கொண்டே இருந்தேன். 10 நிமிடங்களும் கழிந்து விட்ட நிலையில் அதே ஆட்டோமேட்டிக் ரிப்ளைதான் வந்து கொண்டே இருந்தது.

எவ்வளவு நேரம்தான் பேசாமலேயே போனை காதில் வைத்துக் கொண்டிருப்பது... அதற்கு மேலும்  பொறுமை இல்லாமால் அழைப்பை துண்டித்தேன். 100 ரூபாய் துண்டாக போயிருந்தது. இதன் பின்னணி என்ன என்று தெரிந்து கொள்ளும் எண்ணத்தில் போன் செய்த நமக்கே ஒரே நேரத்தில் இவ்வளவு பணம் இழப்பு என்றால் ஒரு வேளை கடலை போட பிகரு கிடைக்குமோ என்ற எண்ணத்தில் எத்தனை பேர் போன் செய்திருப்பார்கள். இப்படி ஏன் இந்த நிறுவனங்கள் ஆசை காட்டி மோசம் செய்வது போல் பண்ணுகின்றன. ஆண்களின் பலவீனத்தை புரிந்து கொண்டு மொபைல் நிறுவனங்கள் நடத்தும் இந்த கூத்து விரைவில் முடிவுக்கு வந்தால் சரி. இல்லையென்றால் என்னைப் போல எத்தனையோ பேர் தினம் தினம் பணத்தை இழந்து கொண்டுதான் இருப்பார்கள்.

tamil.hotlinksin.com திரட்டியில் இணைந்துவிட்டீர்களா நண்பர்களே...

tamil.hotlinksin.com திரட்டிக்கு நண்பர்கள் தந்து வரும் பேராதரவுக்கு மிக்க நன்றி. திரட்டியில் உங்கள் கணக்கை உருவாக்க அல்லது பதிவுகளை இணைக்கும் போது ஏதாவது பிரச்சினை எழுந்தால் தயவு செய்து hotlinksin@gmail.com மெயில் ஐடிக்கு தெரியப்படுத்துங்கள்.

tamil.hotlinksin.com திரட்டியில் ஒவ்வொரு வாரமும் வாசகர் ஒருவரை தேர்வு செய்து அவருக்கு பரிசு வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது எனவே நண்பர்கள் தொடர்ந்து பதிவுகளை இணைத்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் தங்கள் நண்பர்களையும் tamil.hotlinksin.com திரட்டியில் பதிவு செய்து பதிவுகளை பகிரச் சொல்லுங்கள்.

01:50 by iamvenkatesh · 7

hotlinksin

ஊர்வசி... லதா... லலிதா... லாவண்யா - ஊலலலா விமர்சனம்


உனக்கு 20 எனக்கு 18, கேடி போன்ற படங்களை ஜோதி கிருஷ்ணா இயக்கிய போது அடடே... ஷங்கருக்கு அடுத்த பிரமாண்ட இயக்குநர் இடத்தை இவர்தான் பிடிப்பார் என்ற எதிர்பார்க்கப்பட்டது. அந்த அளவுக்கு பிரமாண்டமாக படங்களை இயக்கியவர் ஜோதி கிருஷ்ணா. த்ரிஷா, இலியானா போன்றவர்களை தமிழில் அறிமுகப்படுத்தியவர். இப்போது ஊலலலா படத்தின் மூலம் ஹீரோ கம் இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார்.



சின்ன வயதில் இருந்தே கேர்ள் ப்ரெண்டுக்காக அலையும் சூர்யா கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வெட்டியாக ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கும்போது ப்ரீத்தி கேர்ள் ப்ரண்டாக கிடைக்கிறார். ப்ரீத்தியை பகடைக்காயாக பயன்படுத்தி வேறு பல பெண்களுடன் பழக ஆரம்பிக்கிறார் சூர்யா. ஆனால் சூர்யாவை உண்மையிலேயே காதலிக்க ஆரம்பிக்கிறார் ப்ரீத்தி. ப்ரீத்தியின் காதலை புரிந்து கொள்ளாத சூர்யா கடைசியில் அவள் காதலை புரிந்து கொண்டு வந்த போது அவளோ ஊரைவிட்டு புறப்படுகிறாள். வில்லனும் சூர்யாவை கொல்ல துரத்துகிறான். இந்நிலையில் வில்லனை வெற்றி கொண்டு ப்ரீத்தியுடன் சூர்யா இணைந்தானா இல்லையா என்பது க்ளைமேக்ஸ்.

சூர்யாவாக நடித்திருக்கிறார் ஜோதி கிருஷ்ணா. ப்ளே பாய் ரேஞ்சுக்கு அலையும் இவர் கடைசியில் தன் காதலியின் அன்பைத் தேடி வருகிற இடத்தில் உச்.. கொட்ட வைக்கிறார். படம் துவக்கம் முதல் ஆரம்பிக்கிற கலகலப்பு படம் முழுக்க தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஜோதிகிருஷ்ணாவுக்கு தம்பியாக நடித்திருக்கும் பையன் அடிக்கிற லூட்டியில் தியேட்டரே அதிர்கிறது. ஜோதி கிருஷ்ணாவுக்கு அப்பாவாக நடித்திருக்கும் தலைவாசல் விஜய் ரொம்பவே கண்டிப்பான அப்பாவாக வருகிறார். இவரது கண்டிப்பை ஜோதிகிருஷ்ணாவும் அவர் தம்பியும் அடிக்கடி டேமேஜ் செய்வது வெடி சிரிப்பு. கஞ்சாகருப்பு கிச்சுகிச்சு மூட்டுகிறார். இவரது உதவியாளராக வரும் பக்கோடா பாண்டி அடிக்கடி காதலையும் காதலிப்பவர்களையும் பற்றி அடிக்கிற கமென்ட்டுக்கு ரசிகளிடம் மிகப்பெரிய வரவேற்பு.

ப்ரீத்தியாக நடித்திருக்கும் திவ்யா பண்டாரி ஸ்லீவ்லெஸ் டிரஸ் போட்டுக் கொண்டு அலையும் போது நமது பல்ஸ் ரேட்டையும் எகிற வைக்கிறார். நடிப்பிலும் நன்றாகவே தேறுகிறார் திவ்யா பண்டாரி. இலியானாவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தாலும் பிடிப்பார். குடும்பத்தின் மீது பாசத்தைக் கொட்டும் அம்மாவாக நடித்திருக்கிறார் ராணி.

சேகர் சந்திரா இசையில் இரண்டு பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கின்றன.

ஊலலலா - கலகலப்பு

tamil.hotlinksin.com திரட்டியில் இணைந்துவிட்டீர்களா நண்பர்களே...

tamil.hotlinksin.com திரட்டிக்கு நண்பர்கள் தந்து வரும் பேராதரவுக்கு மிக்க நன்றி. திரட்டியில் உங்கள் கணக்கை உருவாக்க அல்லது பதிவுகளை இணைக்கும் போது ஏதாவது பிரச்சினை எழுந்தால் தயவு செய்து hotlinksin@gmail.com மெயில் ஐடிக்கு தெரியப்படுத்துங்கள்.

tamil.hotlinksin.com திரட்டியில் ஒவ்வொரு வாரமும் வாசகர் ஒருவரை தேர்வு செய்து அவருக்கு பரிசு வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது எனவே நண்பர்கள் தொடர்ந்து பதிவுகளை இணைத்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் தங்கள் நண்பர்களையும் tamil.hotlinksin.com திரட்டியில் பதிவு செய்து பதிவுகளை பகிரச் சொல்லுங்கள்.

01:18 by iamvenkatesh · 0

hotlinksin

தாயையும் மகளையும் ஆடவிட்டு வேடிக்கை பார்க்கும்...



மத்தியானம் டிவி சேனலை மாற்றிக் கொண்டிருந்த போது சிறுவர் சிறுமியர்களை வைத்து சிங்கர் போட்டியை நடத்தி வரும் சேனலை கொஞ்ச நேரம் பார்க்க நேர்ந்தது. அதில் பாடுபவர்களை யாரும் சிறுவர் சிறுமிகள் என்று சொல்ல முடியாது. உருவத்தைப் பார்த்து ஆளை எடை போட வேண்டுமானால் அவர்களை பெரியவர்கள் என்றே சொல்லலாம். அப்படி இருக்கிறது அவர்களின் வளர்ச்சி.


3 படத்தின் டீமினர் சிறப்புவிருந்தினராக இந்த நிகழ்ச்சி வந்திருந்தனர். அப்படி என்னதால் இந்த பசங்க பாடுறாங்க என்று பார்க்கலாம் என்று நினைத்தால் இன்று நிகழ்ச்சி கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. 

அதாவது போட்டியாளரையும் அவரது குடும்பத்தில் ஒருவரையும் பாடவும் ஆடவும் வைத்தார்கள். அப்போதுதான் கொடுமையிலும் கொடுமை நடந்தேறியது. 

போட்டியாளரான ஒரு டீன் ஏஜ் பெண்ணும் அவரது அம்மாவும் வந்து பாட, ஆட வந்தனர். ஒரு பாடலுக்கு செமயாக ஆட்டமும் போட்டனர். டைட்டான டாப்சும் ஜீன்சும் போட்டுக் கொண்டு ஆடிய அந்த பெண்ணின் அம்மா அந்த பெண்ணுக்கு கொஞ்சமும் சளைத்தவரில்லை என்பது போல் ஆட்டம் போட்டார். ஆட்டம் என்றால் ஆட்டம் அப்படி ஒரு ஆட்டம். ஆட்டத்தை விட ஆடியவர்களின் இளமை பார்த்தவர்களை நிச்சயம் உசுப்பேத்தியிருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

இந்த கண்கொள்ளா காட்சியை பார்த்து ரசித்த சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த தனுஷ், அனிருத், சிவகார்த்திகேயன் போன்றோரும் இருவரது ஆட்டத்தை ஆகா ஓகோ என்று புகழ்ந்தனர்.

இவர்களில் தனுஷ் ஒருபடி மேலே போய், ஆடிய அந்த அம்மாவை பார்த்து, ‘நீங்க பார்ப்பதற்கு அம்மா மாதிரியே இல்ல... அவங்க அக்கா மாதிரி இருக்கீங்க... உங்களைப் பார்க்க வயசே தெரியலை...’ என்றார். தாயையும் மகளையும் ஆடவிட்டு வீட்டுக்கு வீடு கொண்டுவந்து காட்டும் அந்த கேடுகெட்ட நிகழ்ச்சியை பார்த்து நொந்து போன நான், சேனலை மாற்றி ‘இசையருவி’ சேனலுக்கு தாவினேன்.

http://tamil.hotlinksin.com/ திரட்டிக்கு நண்பர்கள் தந்து வரும் பேராதரவுக்கு மிக்க நன்றிகள். நண்பர்களே http://tamil.hotlinksin.com/ திரட்டியில் இணைந்து விட்டீர்களா... இன்னும் இல்லையென்றால் உடனே இணைந்து பதிவுகளை இணைத்திடுங்கள். http://tamil.hotlinksin.com/ திரட்டி விரைவில் பதிவர்களுக்கு என பரிசுப் போட்டிகளை அறிவிக்க உள்ளது.

00:03 by iamvenkatesh · 2

hotlinksin

ஓகேஓகே படத்துக்கு தகுதி இல்லையா? - உதயநிதி குமுறல்




தமிழக அரசு தங்கள் படத்திற்கு வரிவிலக்கு அளிக்காமல் வேண்டும் என்றே இழுத்தடிக்கிறது என்று வேதனையில் குமுறுகிறார் உதயநிதி. ஏழாம் அறிவு படத்தை உதயநிதி தயாரித்து வெளியிட்ட போது தமிழக அரசின் வரி விலக்குக்கு விண்ணப்பித்திருந்திருக்கிறார்கள். ஆனால் வரி விலக்கு அளிக்காமல் நாட்களை நகர்த்திய தமிழக அரசு, படம் எந்த தியேட்டரிலும் ஓடவில்லை என்பதை உறுதி செய்த பிறகு, கிட்டத்தட்ட 2 மாதங்களுக்குப் பிறகு வரி விலக்கு கொடுத்திருக்கிறார்கள். அதே நிலையில்தான் இப்போது இருக்கிறது ஓகேஓகே படமும். இந்தப் படத்தை வரி விலக்குக்கு விண்ணப்பித்து நாட்கள் பல ஆன பிறகும் வரிவிலக்குக்கு ஓ.கே. சொல்லும் நிர்வாகத்தினர் படம் பார்ப்பதை தட்டிக் கழித்துக் கொண்டே வந்திருக்கிறார்கள். கடைசியில் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகு உயர்நீதி மன்றத்தின் உத்தரவுபடி படம் பார்க்க நாள் குறிக்கப்பட்டது. படத்தைப் பார்த்த 7 பேர் கொண்ட குழு படம் வரி விலக்குக்கு தகுதியானதல்ல என்று முடிவு செய்து அரசாணையை வெளியிட்டுள்ளார்கள்.

சமீபத்தில் வெளியான 3 படத்தில் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் வரும் பாடல் உள்ளது. அது மட்டுமின்றி பாரில் வைத்து திருமணம் முடிவது போன்றும் காட்சியும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு வரி விலக்கு கொடுத்துள்ள அரசு மக்கள் கொண்டாடும் ஓகேஓகே படத்திற்கு வரி விலக்கு கொடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார் உதயநிதி. ‘என் தந்ததை அரசியலில் இருக்கும் காரணத்தினால் அரசியல் காழ்ப்புணர்ச்சியினாலேதான் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு வரி விலக்கு அளிக்காமல் தமிழக அரசு இருந்து வருகிறது. இதனால் தயாரிப்பாளராககிய எனக்கு மட்டுமின்றி... விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் அனைவருக்குமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது...’ என்று குமுறியிருக்கிறார் உதயநிதி.

20:23 by iamvenkatesh · 0

hotlinksin

என் மனதைக் குத்திக் கிழித்த படம் ‘பச்சை என்கிற காத்து’



தியேட்டரை விட்டு வெளியே வந்த பிறகும் படமோ அதன் காட்சிகளே உங்கள் மனதை விட்டு அகல மறுத்தால் அந்த படத்தில் ஏதோ ஒரு விஷயம் வெயிட்டாக இருந்திருக்கிறது என்றுதான் அர்த்தம். அப்படி ஒரு படமாகத்தான் இருக்கிறது பச்சை என்கிற காத்து. படம் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வந்தாலும் படத்தின் தாக்கம் நம் மனதை விட்டு அகல நாட்கள் சில பிடிக்கும் போலிருக்கிறது.



பள்ளிக்கூடம் போகிற டீன் ஏஜ் வயதில் அரசியல் ஆசையில் அரசியலுக்குள் நுழைகிற ஒரு இளைஞன் பின்நாளில் அந்த அரசியல் காரணமாகவே அவன் வாழ்க்கை எப்படி சின்னாபின்னமாகிறது என்பதை சொல்கிறது பச்சை என்கிற காத்து.

சாவு வீட்டில் ஒரு நீள ஒப்பாரியுடன் படம் ஆரம்பிக்கும் போது, பார்க்கிற நமக்கு என்னடா இது இப்படி ஆரம்பிக்கிறாங்களே... என்று தோன்றுகிறது. அடுத்த சில நிமிடங்களில் கதாநாயகன் அறிமுகமாக, அதன் பிறகு ஒவ்வொரு காட்சியிலும் அவ்வளவு சுவாரஸ்யம். இடைவேளை வரைக்கும் பரபரவென நகரும் திரைக்கதையுடன் பறக்கிறது படம். கதாநாயகன் பச்சை அடிக்கிற ஒவ்வொரு கமென்ட்டும் கலக்கல். வசனம் அவ்வளவு ஷார்ப். கட்சியில் சேர்ந்ததுமே வேஷ்டி கட்டிக் கொண்டு பச்சை அடிக்கிற அலப்பறையில் தியேட்டரே சிரிப்பில் அதிர்க்கிறது. இந்த அதிர்வு இடைவேளை வரை கொஞ்சமும் குறையாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. காதலியை பார்க்க பெண்கள் பள்ளிக்கூடத்தின் உள்ளே காவலாளியையும் மீறி சாதாரணமாக நுழையும் பச்சையிடம் ஆசிரியைகள் ஓடி வந்து பதறியபடி கேட்கும் போது பச்சை சமாளிக்கிற விதம் இருக்கிறதே. அடடா... இது போன்று பச்சை வரும் ஒவ்வொரு காட்சிகளும் எழுந்து நின்று கைத்தட்டத் தோன்றுகிறது.

இடைவேளைக்குப் பிறகு முழுமையான கதைக்குள் பயணப்படுகிறது படம். எந்த பிரச்சினையையும் சர்வசாதாரணமாக எதிர்கொள்ளும் பச்சையை நமக்கு ரொம்பவே பிடித்துப் போய்விடுகிறது. அவன் செய்யும் சில வேலைகள் ஒரு மாதிரியாகவே இருந்தாலும் நம்மை ரொம்பவே ரசிக்க வைத்துவிடுகிறான் பச்சை.

பச்சையாக நடித்திருக்கிறார் ‘வாசகர்’ என்னும் அறிமுக நடிகர். உதவி இயக்குநராக இருந்தவரை பச்சை என்கிற காத்து படத்தின் இயக்குநர் கீரா நடிக்க அழைத்து வந்துவிட்டார். பச்சை கேரக்டரை வேறு யாராலும் இவ்வளவு கச்சிதமாக செய்ய முடியுமா என்பது சந்தேகம்தான். அவ்வளவு அழகாக பண்ணியிருக்கிறார் நடிகர் வாசகர். இவர் நடிப்பைப் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.

இவருக்கு ஜோடியாக செல்வி என்னும் கேரக்டரில் மலையாள நடிகை ‘தேவதை’. பார்ப்பதற்கு கொஞ்சம் குண்டாக இருக்கிறார் இந்த தேவதை. செல்வி கேரக்டரிலும் அவர் தங்கை கேரக்டரிலும் நடித்திருக்கிறார். அதுவும் க்ளைமேக்ஸ் காட்சிகளில் இவர் முகத்தில் இருக்கும் குரூரம்... நம்மை பயப்படவும் வைக்கிறது.

காதாநாயகனின் அப்பா, அம்மா, பாட்டி, கதாநாயகியின் பாட்டி, அப்பா, ஹீரோவின் நண்பன், பெரியவர் என எல்லோரும் நடிப்பில் அக்மார்க் முத்திரை பதிக்கிறார்கள்.

பாடல்களுக்கு இசை ஹரிபாபு. பின்னணி இசையில் மட்டுமல்லாமல் பாடல்களிலும் கலக்கியிருக்கிறார்கள். முதல் பாடலாக வரும் ‘மீசையில்லா சூரப்புலி’ பாடல் நம்மை சீட்டோடு கட்டிப் போட்டுவிடுகிறது. பாடலுக்கான குரல் இன்னும் அருமை. காட்சிகளையும் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்கள். ‘உன்னை நான் பார்த்தேன்...’ தீயே... பாடல்களும் நன்றாகவே இருக்கின்றன.

ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் படத்திற்கு வலு சேர்க்கின்றன. இடைவேளைக்குப் பின்பு வரும் சில காட்சிகளில் எடிட்டர் கொஞ்சம் கை வைத்திருக்கலாம்.

பச்சை என்கிற காத்து படத்தை இயக்கியிருப்பவர் தங்கர்பச்சானின் உதவியாளர் கீரா. படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து செதுக்கியிருக்கிறார். அதனால்தான் படம் பார்ப்பவர்கள் ஒவ்வொருவரும் படத்தை அவ்வளவு தூரம் ரசிக்கிறார்கள் என்பது புரிகிறது. திரைக்கதை, காட்சி வடிவமைப்பில் சிறப்புக் கவனம் செலுத்தியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இப்படி ஒரு கதையை புதுமுகங்களை வைத்து நடிக்க வைக்க அதுவும் தான் எதிர்பார்த்த நடிப்பை திரையில் கொண்டு வர அசாத்திய துணிச்சல் இருக்க வேண்டும். அது இருந்ததால்தான் கீராவால் இப்படி ஒரு காவியத்தை திரையில் எழுத முடிந்திருக்கிறது. பச்சை என்கிற காத்து படத்தின் மூலம் தான் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கப் பட வேண்டிய இயக்குநர் என்பதை நிரூபித்திருக்கிறார் கீரா.

00:46 by iamvenkatesh · 0

hotlinksin

ஓ.கே. ஓ.கே. - விமர்சனம் - வேணாம் மச்சான் வேணாம்...




காதலனுக்கு கல்தா கொடுத்துவிட்டு வேறு ஒருவனை மணக்கத் தயாரான மீரா தன் காதலன் சரவணனுக்கு திருமண அழைப்பிதழை அனுப்பி வைக்கிறாள். அதுவும், தயவு செஞ்சு கல்யாணத்துக்கு வந்திர வேணாம்… என்னும் பின்குறிப்போடு. அழைப்பிதழைப் பார்த்ததும் கடுப்பான மீராவின் காதலன் சரவணன் திருமண மண்டபடத்தில் புகுந்து மீராவை கடத்திக் கொண்டு வந்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் தன் நண்பன் பார்த்தசாரதியை அழைத்துக் கொண்டு திருமணம் நடக்கும் புதுச்சேரிக்கு பயணிக்கிறான். சரவணனுக்கும் மீராவுக்கும் காதல் வந்தது எப்படி… காதல் ஏன் மோதலில் முடிந்தது… அவள் வேறு ஒருவனை மணக்க முடிவெடுத்தது ஏன்? கடைசியில் சரவணன் மீராவுடன் இணைந்தானா என்பதை குலுங்க குலுங்க சிரிக்க வைத்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராஜேஷ்.

தியேட்டருக்கு படம் பார்க்க போகும் ரசிகனை குற்றுயிரும் குலைஉயிருமாய் திருப்பி அனுப்புகிற படங்களே தொடர்ந்து சமீபகாலமாக வந்து கொண்டிருக்க படம் முழுக்க சிரிக்க வைக்கும் ஒரு கல் ஒரு கண்ணாடி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆறுதல். சந்தானம் அறிமுகமாவதில் இருந்து தொடரும் காமெடி படம் க்ளைமேக்ஸ் வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இரண்டு மணிநேரம் 50 நிமிடங்கள் படம் என்றாலும் படம் பரபரப்பாக நகர்வதால் இடைவேளை வருவதும் தெரியவில்லை. படம் முடியும் போது அட… அதுக்குள்ள படம் முடிஞ்சு போச்சா… என்று எண்ண வைக்கிறது.

ஹீரோவாக அறிமுக நாயகன் உதயநிதி. எந்த ஒரு பில்டப்புமே இல்லாமல் திரையில் அறிமுகமாகி ஒவ்வொரு காட்சியிலும் நம்மை ஈர்த்து விடுகிறார். இயல்பாக உதயநிதி நடித்திருப்பது இன்னும் அவருக்கு ப்ளஸாக இருக்கிறது. கீப் இட் அப்… உதயநிதிக்கு எளிதாக இருக்க வேண்டுமே என்கிற எண்ணத்தில் ஒவ்வொரு நடன அசைவுகளும் என்றாலும் அதிலும் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்கள்.

ஹன்ஸிகா இதற்கு முன்பு நடித்த படங்களை விட இந்த படத்தில் நடிப்பில் கொஞ்சம் ஸ்கோர் பண்ணுகிறார் என்றே சொல்லலாம். முகத்தில் கண்களில் காட்டும் எக்ஸ்பிரஷனே ஹன்சிகாவை இன்னும் தமிழ்சினிமாவில் தூரத்திற்கு அழைத்துச் செல்லும்.

சென்டிமென்ட் அம்மாவாக வந்து திரையில் கண்ணைக் கசக்கும் சரண்யா முதன் முதலாக கலகலக்கவும் வைக்கிறார்.

உதயநிதிக்கு அப்பாவாக நடித்திருக்கும் அழகம்பெருமாள் மனைவியை காணாமல் தவிக்கிற தவிப்பு இருக்கிறதே… அந்த இடத்தில் உச் கொட்ட வைக்கிறார்.

ஹன்ஸிகாவின் அப்பாவாக வரும் ஷயாஜி ஷிண்டே காதலுக்கு உதவுகிற கேரக்டரோ என்று நினைத்தால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சராசரி அப்பாவாகவே வந்து போகிறார்.

ராஜேஷின் பிராண்டட் நடிகரான ஆர்யா, ஆன்ட்ரியா, சினேகாவும் வந்து தலைகாட்டிவிட்டுப் போகிறார்கள்.

படத்தில் உதயநிதியை விட அதிகமாக சந்தானமே வருவார் போலும் அந்த அளவுக்கு சந்தானத்திற்கு காட்சிகள். இதனாலேயே காட்சிகள் ஒவ்வொன்றும் ரசிகர்களை சிரிக்க வைத்தபடியே நகர்கிறது. போர் அடிக்கக்கூடிய காட்சிகள், நெளிய வைக்கிற காட்சிகள் என்று எதுவும் இல்லை.

ஹரிஸ்ஜெயராஜ் இசையில் பாடல்கள் அத்தனையும் ரசிக்க வைக்கிற ரகம். வேணாம் மச்சான் வேணாம் இளைஞர்களின் தேசியகீதமாக இருக்கும். அழகே அழகே சூப்பர் மெலடி. அகிலா அகிலா பாடலும் கலக்கல் ரகம்.

ஒளிப்பதிவு பாலசுப்ரமணியெம். பாடல்களில் கலக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். அளவெடுத்து எடிட் பண்ணியது போல் இருக்கிறது எடிட்டிங் வொர்க்.

இயக்குநர் ராஜேஷின் முந்தைய படங்களான சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் படங்களை விட இந்த படத்தில் திரைக்கதை, அழுத்தமான காட்சிகள், காமெடி அனைத்திலுமே பலமடங்கு அதிகமாக பின்னி பெடலெடுத்திருக்கிறார் இயக்குநர் ராஜேஷ்.

00:07 by iamvenkatesh · 0

hotlinksin

பதிவர்கள் செய்யும் தவறுகள்


தமிழ்மணம், இன்ட்லி, தமிழ்வெளி எனும் மூன்று திரட்டிகளும் எப்போதும் என் பயர்பாக்ஸில் திறந்தே இருக்கும். அவ்வப்போது இந்த திரட்டிகளுக்கு சென்று உலவி பிளாக்குகளில் மேய்வது வழக்கம். தினமும் இப்படி குறைந்தது 20லிருந்து 50க்கு மேலான பிளாக்குகளை படித்துவிடுவேன். இதனாலேயே ஒருவரது பிளாக்குக்கு தொடர்ந்து  போய் படிக்கும் பழக்கம் இல்லாமல் போயிற்று. 

இப்படி ஒருநாள் தேடி தேடி படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பிளாக்குக்குப் போனேன் போன அடுத்த வினாடியே ஏண்டா  இந்த பிளாக்குக்கு வந்தோம் என வெறுத்தேப் போய்விட்டது... என்னைப் போல் அந்த பிளாக்குக்குப் போன பலரும் இப்படி நொந்து போயிருப்பார்கள். அப்படி அந்த பிளாக்கில் நான் பட்ட அவஸ்தைதான் பிளாக்கில் எனக்கிருக்கும் சில யோசனைகளையும் சேர்த்து இந்த தலைப்பில் எழுத வைத்தது.

இதை முதலில் ஒரு கட்டுரையாகத்தான் எழுத யோசித்தேன். ஆனால் எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் சேர்ந்து கொண்டே போனதால் இதை ஒரு தொடராக எழுத ஆரம்பித்தால் என்ன? என்ற எண்ணம் என்னுள் தோன்றியது. அதன் விளைவுதான் இந்த தொடர்.

எப்படியோ தேடிப் பிடித்து பிளாக்கில் ஒரு அக்கவுன்ட் ஆரம்பித்து விடுகிறோம். அதன் பிறகு என்ன எழுதலாம்... எப்படி எழுதலாம்... என்று யோசித்து யோசித்தே மண்டை காய்ந்து போய்விடுகிறது. சரி... அதையும் மீறி நல்ல விஷயம் ஒன்றை எழுதிவிட்டால் அதைத் தொடர்ந்து வாசகர்கள் வர வேண்டுமே... அதுவும் பிரபல பதிவராக வேண்டும் என்னும் ஆசை மனதில் வந்துவிடுகிறது. பிளாக்கர்கள் என்ன எல்லாம் செய்தால் பிரபலமாவர்கள்... என்பதை மட்டுமல்ல... என்னவெல்லாம் செய்யாமல் இருந்தாலே பிரபலமாவார்கள் என்பதையும் சொல்லப் போகிறேன்...

அடடே ஒரு இன்ட்ரடக்க்ஷன் கொடுக்கிற ஆர்வத்தில என்ன அந்த பிளாக் ஏன் டென்ஷனாக்கியது என்பதை சொல்லாமல் விட்டுவிட்டேனா... கொஞ்சம் பொறுங்கள்... அதுவும் ஒரு நீண்ட பதிவுதான்... அதனால் நாளை சொல்லிவிடுகிறேன்.

-------------------------
தெரியுமா சேதி...

இன்ட்லி, தமிழ்மணம், தமிழ்வெளி வரிசையில் புதிதாக ஒரு திரட்டி ஒன்று இணைந்திருக்கிறது. ஹாட்லிங்க்ஸ்இன் என்பதுதான் அந்த திரட்டியின் பெயர். நண்பர்கள் ஹாட்லிங்க்ஸ்இன் திரட்டியில் இணைந்து உங்கள் பதிவுகளை இணைக்கலாமே. ஹாட்லிங்க்ஸ்இன் திரட்டியில் இணைப்பதன் மூலம் உங்கள் பிளாக்கிற்கு ஏராளமான வாசகர்கள் வருவார்கள் என்பது மட்டுமில்லை... உங்கள் இணையதளத்தின் அலெக்ஸா ரேங்கிலும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

01:29 by iamvenkatesh · 0

hotlinksin

ஐந்து பேருக்கு மனைவியாக நடிக்கும் நயன்தாரா



நயன்தாரா பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஸ்ரீ ராமராஜ்யம் என்ற படத்தில் நடித்தார். சீதையாக இந்த படத்தில் நயன் நடிப்பதற்கு படத்தின் பூஜையில் இருந்தே எதிர்ப்புகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. எனினும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் படத்தில் நடித்து முடித்தார். தெலுங்கில் மிகப்பெரிய அளவுக்கு வெற்றி பெற்றது இந்த படம். அத்தோடு விருதுகளையும் நயன்தாராவுக்கு பெற்றுத் தந்தது. இந்த படம் வரும் 20 ஆம் தேதி தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பாலகிருஷ்ணா உருவாக்கி வரும் நர்த்தன சாலா என்னும் தெலுங்கு படத்தில் நயன்தாராவை நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார். பஞ்ச பாண்டவர்களின் கதையை மையமாகக் கொண்ட இந்த படத்தில் நயன்தாராவுக்கு பாஞ்சாலி வேடமாம்.

15:52 by iamvenkatesh · 0

hotlinksin

சுயஉதவிக்குழு என்னும் வட்டிக்கடை


நம் நாட்டின் சாமானிய இந்தியனுக்கும் உதவிட விரும்பாத தேசிய வங்கிகள் சிக்கன நிர்வாக நடவடிக்கை என்ற பேரில் 40% மக்களுக்கு வங்கிச் சேவையைத் தர மறுத்தன. இதன் விளைவாக ஆங்காங்கே தொண்டு நிறுவனங்கள் புற்றீசல் போல தோன்றி கிராம அளவில் பெருகியிருக்கும் வறுமையை விரட்டப் போகிறோம் என்று கூறி கிராமப்புறங்களில் நிதியுதவிகளை அளித்து தொழில் செய்ய உதவின. கூடுதலாக நிதி தேவைப்பட்டபோது அவை வங்கிகளை அணுகின.



வங்கிகள் தங்கள் விதிமுறைப்படி முன்னுரிமைக் கடன் வழங்கும் திட்டங்களின் அடிப்படையில் தொண்டு நிறுவனங்களுக்கு உதவின. வங்கி வழங்கிய நிதி எந்த பிசிறுமில்லாமல் முறையாக வங்கிகளுக்குத் திரும்பின. தனியார் பெரிய நிறுவனங்கள் பெறும் கடன்கள் முறையாகத் திரும்பாமல் வாரக் கடன் பட்டியலில் சேர்ந்து வங்கிகளை சங்கடத்தில் ஆழ்த்திய நிலையில் தொண்டு நிறுவனங்களுக்கும் வங்கிகளுக்கும் நடந்த சிறு கடன் பரிவர்த்தனை சிக்கலில்லாமல் நடந்ததால் பல தேசிய வங்கிகளும் முதலீடு செய்ய முன்வந்தன.

பின்னர் அதே தொண்டு நிறுவனங்கள் வங்கிகளிடம் குறைந்த வட்டியில் பணம் பெற்று வட்டியை கூடுதலாக்கி ஏழைகளுக்கு உதவின. தொண்டு நிறுவனங்களின் கூடுதல் வட்டி, முறையான பரிவர்த்தனையால் கணிசமான லாபம் தொண்டு நிறுவனங்களுக்குக் கிடைத்தன.

சுரண்டல் பூதங்கள் எப்போதும் திடீரென்று பாய்ந்து பிடுங்க மாட்டார்கள். சுற்றி நடக்கும் நிகழ்வை கூர்ந்து பார்ப்பார்கள். எதில் உழைப்பு இல்லாமல் சுளையாக லாபம் பார்க்க முடியும் என்பதை நன்கு அறிந்து கொண்டு சமயம் வரும்போது கொக்கு கொழுத்த மீனுக்கு காத்திருப்பது போல் காத்திருந்து அள்ளிக் கொள்வார்கள்.

தொண்டு நிறுவனப் போர்வையில் பல தனியாரும் மக்கள் சேவைக்கு வருவதாகத் தங்களை பதிவு செய்தனர். சேரிகள், ஏழைகள் வசிக்கும் காலனிகள், வங்கிச் சேவை வாசனையே இல்லாத விவசாய கிராமங்கள் என தங்கள் ஆதிக்கத்தைப் பரப்பினர். அரசிடமிருந்து குறைந்த வட்டியில் நிதியைப் பெற்று அதிக வட்டிக்கு ஏழைகள் மீது கடன்களைத் திணித்தனர். தேடித்தேடி கடன் தந்தனர். இனிக்க, இனிக்கப் பேசினர். மக்களும் எந்தவித சிக்கலும் இல்லாமல் சுலபமாக நிதி கிடைத்ததால் திரண்டு நின்று கடன் வாங்கினர். பெண்களை குழுக்களாகத் திரளச் சொன்னார்கள். இதற்கு சுய உதவிக் குழுவென்றும் பெயரிட்டனர். இந்தியாவில் நிதி தொடர்பான பரிவர்த்தனைகள் எதுவானாலும் ரிசர்வ் வங்கி கவனம் செலுத்திட வேண்டும். ஆனால் ரிசர்வ் வங்கி எதனையும் கண்டு கொள்ளவில்லை. வங்கிகளும் தங்களிடம் குறைந்த வட்டிக்கு பணம் பெற்று அதிக வட்டிக்கு தரும் நிறுவனங்களை கண்டிக்கவில்லை.

ஏழைகள் உழைப்பு முழுவதும் வட்டி கட்டவே பயன்பட்டது. வாங்கிய அசல் தீர்ந்த பின்னும் வட்டி கட்ட வேண்டிய கொடுமை ஏழைகளுக்கு ஏற்பட்டது. கடன் கட்ட இயலாதவர்களின் வீட்டுக்கதவுகள் நடு இரவில் தட்டப்பட்டன. ஆடு, மாடு, கலப்பை எந்திரம் பறிமுதலானது. மானத்துக்கு அஞ்சிய சாமானியர்கள் சாவைத் தவிர வேறு வழியில்லை என கொத்துக் கொத்தாக மடிந்தனர். இதை எழுதும் ஐந்து தினங்களுக்கு முன்பு கூட ஆந்திராவில் ஏழைகளான கணவன் மனைவி தங்களின் ஏழு வயது, ஐந்து வயதுள்ள இரு பெண் குழந்தைகளை அநாதையாக்கிவிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
நாட்டில் 24 மாநிலங்களில் கந்துவட்டியை விட மோசமான சுரண்டல் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் தமிழகம் உட்பட இயங்கிச் சுரண்டுகின்றன. இவற்றால் 22,700 கோடி ரூபாய் இத்தொழிலில் புரள்கிறது. மாதந்தோறும் ஆயிரக்கணக்கான கோடிகள் வட்டியாகச் சுரண்டப்படுகின்றன.
மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் 10,000 பணம் தந்தால் அதை 52 தவணைகளில் கூட்டு வட்டியோடு இரக்கமில்லாமல் கறக்கின்றனர். அசல் குறைய குறைய வட்டி குறைய வேண்டும். ஆனால் இங்கே அசல் குறையும். ஆனால் வட்டி மட்டும் நிலையாகப் பெறப்படும்.

10,000-திற்கு 3,500 ரூபாய் முதல் 5,000 வரை தமிழகத்திலேயே வட்டியை சுரண்டுகின்றனர். இதுபோன்ற மோசடி சுரண்டல் திட்டங்களில் பெண்களை சேர்த்து மயக்கிட அரசியல் கட்சிகளும் வரிந்து கட்டி வேலை செய்கின்றனர்.
மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் சுரண்டல் ஆந்திராவில் அதிகரித்ததின் காரணமாக அங்கு ஏராளமான தற்கொலைகள் நிகழ்ந்ததால் இந்த நிதி நிறுவனங்களின் சுரண்டல் வெளி உலகிற்குத் தெரிந்தது. உடனடியாக அங்குள்ள அரசு புரிந்து கொண்டு சுதாரித்து கடந்த 15.10.2010 அன்று மைக்ரோ பைனான்ஸ் அனுமதி பெற்ற நிறுவனங்கள் மற்றும் அனுமதி பெறாமல் நடக்கும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசாணை வெளியிட்டது.

வட்டி விகிதம், வசூலிக்கும் வழிகள், செயல்பாடு, கடன் வழங்கிய விவரங்கள் பலவற்றையும் அனுப்பி உடனடியாக அரசு ஒப்புதல் பெற வேண்டும் எனப் பல நிபந்தனைகள் அந்த அரசாணையில் இருந்தன. சுரண்டல் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் அதிர்ந்து போயின. ஏனென்றால் சென்ற நிதியாண்டு கால அளவில் வெளிநாட்டு நிறுவனங்கள் பலவும் இந்திய ஏழைகளின் உழைப்பை வட்டியாக உறிஞ்சிட எஸ்.கே.எஸ். நிறுவனத்தின் சகோதர நிறுவனமான சான்ட்ஸ்டேன் கேப்பிடல், எஸ்.வி.பி. இந்தியா கேப்பிடல் அண்ட் கிஸ்மத் கேப்பிடல் முதலிய நிறுவனங்களில் மட்டும் 75 மில்லியன் டாலரை போட்டுள்ளன. இதைப் போலவே உஜ்ஜிவன் பைனான்ஸ் சர்வீசில் 18.47 மில்லியன் டாலரையும், ஈக்கிடஸ் மைக்ரோ பைனான்சில் 11.44 மில்லியன் டாலரும் தமிழகத்தில் திருச்சியிலிருந்து இயங்கும் கிராம விடியல்!? நிறுவனத்திற்கு மைக்ரோ வெஸ்ட் எனும் அயல்நாட்டு நிறுவனம் 4.25 மில்லியன் டாலரை முதலீடு செய்துள்ளது. ஹேண்ட் இன் ஹேண்ட், பெல்ஸ்டார் இன்வெஸ்ட்மென்ட் முதலிய சென்னை நிறுவனங்களுக்கு இன்டர்நேஷனல் பைனான்ஸ் கார்ப்பரேஷன் 17.5 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன.

ஆசை ஆசையாக இதுபோல வட்டி சுருட்ட நினைக்கும் நினைப்புக்கு ஆந்திராவின் அரசாணை தடை விதித்துள்ளதால் தற்போது இவைகள் தமிழகத்திற்குள் படையெடுக்கத் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் எட்டாயிரம் டாஸ்மாக் கடைகள் ஆண்களின் ஊதியத்தை உறிஞ்சி விடுவதால் அப்பாவி குடும்பப் பெண்கள் வீட்டைப் பராமரிக்க இதுபோன்ற சுய உதவிக் குழுக்களில் சேர்கின்றனர். ஆனால் பாவம்! தங்கள் வீட்டு ஆண்களை டாஸ்மாக் போலவே சுரண்டும் மைக்ரோ பைனான்ஸ் வலைக்குள் இவர்களும் சிக்குகின்றனர்.

இதுபோல் கூடுதல் வட்டி, கூட்டு வட்டி, மிரட்டல் வட்டி, பொருள் அபகரிப்பு, அவமானம், தற்கொலை, அரசாணை, ஆய்வுக்குழு என நடக்க என்ன காரணம்?
கடைக்கோடி இந்தியனையும் கைதூக்கிவிட வேண்டும் என்ற உணர்வு மரத்துப் போன தேசிய வங்கி நிர்வாகங்கள், அவற்றின் சோம்பல் பிடித்த நிர்வாகிகள், இவர்களுடன் வரும் கேட்டை உன்னிப்பாக கவனித்து நடவடிக்கை எடுக்காமல் தூக்கத்தில் உள்ள ரிசர்வ் வங்கி நிர்வாகம், நாட்டின் நிதிச் செயலகம், மாநிலமெங்கும் உள்ள நிதிச் செயலகங்கள், சமூக நலத்துறைகள் பலவும் உண்மையான கடமை உணர்வுடன் மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் செயல்படுவதால்தான் இந்த நிகழ்வுகள் மக்களை கொடூரமான கந்துவட்டி வலைக்குள் சிக்க வைக்கின்றன. சமூக நோக்கு இல்லாமல் வெறும் வட்டி மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள பிணந்தின்னிகளுக்கு இந்திய சோம்பல் நிர்வாகங்கள் ஊக்க மருந்தாக உள்ளன. மக்களாக தங்கள் சகிப்புத் தன்மையை உதறினால்தான் விடிவு பிறக்கும்.

15:04 by iamvenkatesh · 0

hotlinksin

ஆசைப்பட்ட ஆற்காடு நவாப் அடித்து விரட்டிய வெள்ளைக்காரன்!




தென்னிந்தியாவை ஆண்ட முகமது அலிகான் வாலாஜா நவாப் வாழ்ந்த அரண்மனையின் ஒரு பகுதிதான், எழிலகத்தில் சமீபத்தில் எரிந்துபோன கட்டிடம். இந்த கட்டிடத்தின் வரலாற்று பின்னணியில் தான், இந்தியாவின் தென்பகுதி நிலப்பரப்பு ஆங்கிலேயரின் கைக்கு சென்றது. இந்த அரண்மனை கட்டப்பட்டதில் நடந்த ஊழல். அந்த காலத்தில் உலக அளவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

ஒடிசா முதல் தமிழகம் வரை தென்பகுதியை 17ம் நூற்றாண்டின் போது தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் முகமது அலிகான் வாலாஜா நவாப். இவர் பிரம்மாண்டமான அழகிய அரண்மைனை ஒன்றை கட்ட விரும்பினார். அப்போது, செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் பெரும் பகுதியை கட்டியவர் பால் பென்பீல்ட். அந்த காலத்தில் இவர் கட்டும் கட்டிடம், மிகவும் தரமானதாக  கருதப்பட்டு வந்ததே இதற்கு காரணம்,. அரண்மனையை கட்ட செலவாகும் தொகையை கட்டி முடித்த பிறகு வாலாஜா நவாப் கொடுத்தால் போதும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரண்மனை கட்டிடப் பணிகள் 1760 ல் தொடங்கப்பட்டு 1768 ல் முடிக்கப்பட்டது.

சுமார் 117 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் அரண்மனைக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டன. இதில், சென்னை பல்கலைக்கழகம், செனட் பில்டிங், சென்னை மாநிலக் கல்லூரி, எழிலகத்தில் உள்ள பழைய கட்டிடங்கள் மற்றும் திருவல்லிகேணி காவல் நிலையம் ஆகியவை அடங்கும். அரண்மனையின் அன்றைய சமையல் கூடமாக இருந்ததுதான், இன்றைய திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம்.

அரண்மனையை கட்டி முடிக்க செலவான தொகையைக் காட்டிலும் பல மடங்கு அதிக தொகையை வாலாஜா நவாப்பிடம் பால் பென்பீல்ட் தெரிவித்தார் அதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உறைந்து போன வாலாஜா நவாப். இவ்வளவு தொகையை தன்னால் கட்ட இயலாது என்று அவரிடம் தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர்கள் தீட்டிய திட்டத்தின்படி, வாலாஜா நவாபிடம் இருந்த நிலப்பரப்பை அபகரிக்க, இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமக பயன்படுத்தி, அரண்மனைக்கு செலவான தொகைக்கு ஈடாக, வாலாஜா நவாபின் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்பை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும், பால் பென்பீல்ட் ஊழல் செய்து விட்டதாக அவர் மீது ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டு, 225 மில்லியன் டாலர் தொகைக்கு கட்டப்பட்ட அரண்மனை கட்டிடங்களை 400 மில்லியன் டாலர் என்று கூறியதாக பால் பென்பீல்ட் மீது குற்றச்சாட்டை வைத்து ஒரு நாடகத்தை ஆங்கிலேயர்கள் அரங்கேற்றினர். இதன் பிறகு வாலாஜா நவாப் உயிர் வாழும் வரை அந்த அரண்மனையை பயன்படுத்திக் கொள்ள மட்டுமே ஆங்கிலேயர்கள் அனுமதித்துள்ளனர். பின்னர் அவர்களின் வாரிசுகள் வாழ்வதற்காக கட்டிக் கொடுக்கப்பட்டதுதான் அமீர் மஹால்.

அரண்மனை கட்டிக் கொடுக்கிறோம் என்ற பெயரால் ஆங்கிலேயர்களால் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய ஊழலின் தொடக்கம் தான் இந்தியாவில் ஆங்கிலேயரின் சாம்ராஜ்ஜியம் காலூன்ற காரணமாகி விட்டது. இதற்கு துணைபோன ஊழல் பேர்வழி பால் பென்பீல்ட், தனது இறுதிக் காலத்தில் பிரான்ஸ் நாட்டில் தெருத்தெருவாக பிச்சை எடுத்து வாழ்ந்து செத்துப் போனார் என்பது வரலாறு.

அதைப் போலவே சொகுசாக வாழ ஆசைப்பட்ட ஆற்காடு நவாபுகளும் அங்கிருந்து துரத்தப்பட்டதுதான் பரிதாபம்…

00:54 by iamvenkatesh · 0

hotlinksin

த்ரிஷா, இலியானா வேண்டாம்... - கடுப்பான இளம் இயக்குநர்




த்ரிஷா, இலியானா போன்ற நடிகைகளை தமிழில் அறிமுகப்படுத்திய இயக்குநர் ஜோதிகிருஷ்ணா. பிரமாண்ட செலவில் உருவான உனக்கு 20 எனக்கு 18, கேடி போன்ற படங்களை இவர் இயக்கியிருக்கிறார். இப்போது ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் ஊலலலா. இந்தப் படத்தில் ஹீரோவும் அவரே. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தைப் பற்றி பேசிய அத்தனை பேருமே படத்தைப் பற்றிய செய்திகளை பகிர்ந்து கொண்டார்கள். ‘படம் முழுக்க முழுக்க காமடியாக இருக்கும் என்றும் பேருக்கு சும்மா கொஞ்சமா சென்டிமென்டையும் வெச்சிருக்கோம்... இந்த படம் நிச்சயம் நூறு நாட்களை கடந்து ஓடும்’ என்று பேசினார்கள். இதைத் தொடர்ந்து பேச வந்த ஜோதி கிருஷ்ணா, ‘இன்றைய சூழ்நிலையில் ஒரு படம் 100 நாட்கள் ஓடுவது எல்லாம் சாத்தியமே இல்லை... ரெண்டு வாரம் ஓடுவதே பெரிய விஷயமாக இருக்கிறது. என்னுடைய முதல் படத்தில் கத்துக்கிட்ட நிறைய விஷயங்களை எடுத்துத் தள்ளியிருந்தேன். இதனாலேயே படம் முழுக்க பேன்டஸியாக இருந்தது. ஆனால் இந்த ஊலலலா படத்தைப் பொறுத்தவரை கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் தான் வெச்சிருக்கோம். பார்க்கிற ஒவ்வொரு ரசிகனுக்கும் இந்த படம் பிடிக்கும். அந்த அளவுக்கு படத்தில காமெடி இருக்கிறது...’ என்று மிகவும் எதார்த்தமாக பேசினார் ஜோதி கிருஷ்ணா. அவரது அமைதியான பேச்சே அவரது படத்தில் ஏதோ விஷயம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தியது.

நீங்கள் அறிமுகப்படுத்திய த்ரிஷா, இலியானா போன்றவர்களிடம் கால்ஷீட் கேட்டீர்களா...? என்று கேட்டதற்கு அவர்கள் பிஸியான நடிகைகளாக இருக்கிறார்கள். அவர்களிடம் கேட்டால் ஆளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக கால்ஷீட் கொடுப்பார்கள். படம் முடிய இன்னும் காலதாமதம் ஆகும் என்பதால்தான் அவர்களிடம் கேட்கவில்லை... இந்த படத்தில் ப்ரீத்தி பாண்டாரியை அறிமுகப்படுத்துகிறேன். அவரும் மிகப்பெரிய அளவுக்கு முன்னணி நடிகைகள் இடத்தைப் பிடிப்பார்...’ என்கிறார் ஜோதிகிருஷ்ணா.

00:33 by iamvenkatesh · 0

hotlinksin

தமிழகத்தில் தினந்தோறும் காணாமல் போகும் இளம் பெண்கள் - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!


தமிழகத்தில் நாள்தோறும் 10 முதல் 20 வயதுவரையுள்ள பெண் குழந்தைகள் பருவப் பெண்கள் காணமால் போயுள்ளனர். இத்தகவல் மாநில குற்றப்புலனாய்வுப் புள்ளி விவரம் சென்ற ஆண்டு சேகரித்தது.

2010 ஆம் ஆண்டை விட 2011 ஆம் ஆண்டில் இப்படி காணாமல் போனவர்கள் எண்ணிக்கை கூடுதல் தான்.

சொத்துக்காக, பாலியல் வக்ரங்களுக்காக, விபச்சாரக்  கும்பலிடம் விற்க, கட்டாயத் தாலிகட்ட, குடும்பச் சூழலில் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு ஓடுவது, ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி ஓடுவது, காதல் விவகாரம். போன்ற காரணங்களுக்கு காணாமல் போகின்றனர். குறிப்பாக விபச்சாரத்தை தொழிலாக நடத்தும் கும்பல்கள் வாலிபர்கள் சிலரை வேலைக்கு அமர்த்தியுள்ளது போல் தோன்றுகிறது?! இவர்கள் பலகீனமான சிறுமிகளுக்கு காதல்வலைவீசி அவர்களைக் கடத்தி இந்த கும்பலுக்கு விற்றுவிடுவதும் சில இடங்களில் நடப்பதாக தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன.

பெண் குழந்தைகள் பருவப் பெண்கள் மட்டுமல்லாமல் பையன்களும் பெருமளவு காணமால் போவதும் நடக்கிறது. இவர்கள் தொழிலகங்களில் வேலை செய்யவும், எடுபிடி வேலை பார்க்கவும் அமர்த்தப்படுகின்றனர்.

ஓர் இடத்திலிருந்து இதுபோன்ற வயதுள்ளவர்கள் ஆண்டுதோறும் காணாமல் போவது சமூகப் பிரச்சனையாகும். காவல்துறை, தொண்டு நிறுவனங்கள், இதர சமூக நல அமைப்புகள் விழிப்போடு கண்காணிப்பை அதிகப்படுத்தினால் தவிர இது போன்றவை கூடுதலாக நிகழ்வதை தடுக்க இயலாது. “தனக்கு உடன்பாடான ஒன்று இல்லாத நிலையில்தான் இதுபோன்ற காணாமல் போகும் மனநிலை உருவாகிறது. சிலர் தாமாகவே திரும்புவதும் உண்டு சிலர் திரும்பச் சென்றால் எண்ணாகுமோ என்ற அச்சத்தில் வேறு நிலைக்கு தங்களை உட்படுத்திக் கொள்கின்றனர். இதில் பெரும்பாலும் உரிய விழிப்புணர்வு இல்லாமல் அப்பாவிகளாக இருப்போர், உரிய குடும்பப் பராமரிப்பு குறைவானவர்கள், உறவுகளின் உதாசீனம், புறக்கணிப்பு, அவமரியாதை, அடி – உதைகள் போன்றவைகளால்  ஓடிப் போகும் மனநிலைக்கு ஆளாகின்றனர்.

பல சமயங்களில் மக்கள் அதிகம் கூடும் இடமான ரயில்நிலையம், பேருந்து நிலையங்களில் காவல் துறையினர் சந்தேகம் வரும் இந்த வயதுள்ளவர்களைக் கண்டறிந்து ஒப்படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இது எதனால் நிகழ்கிறது ஏன் நடக்கிறது. இடம் விட்டு இடம் பெயரும் இந்த சம்பவங்கள் எதற்காக தொடர்ந்து அதிகரிக்கிறது என்பதெல்லாம். தீவிரமாக ஆராய வேண்டிய சமூகப் பிரச்சணையாகும்.

முன்பெல்லாம் பெரியவர்கள் புதிதாக தங்கள் பகுதியில் புதிய நபர்கள் தென்பட்டால் யார் இவர் என விசாரிப்பார்கள். இன்று சென்னை போன்ற பெருநகருக்கு மக்கள் அதிக எண்ணிக்கையில் வருவதால். விசாரிப்பு குறைந்து விட்டது. அத்துடன் நமக்கேன் வம்பு, தலைக்கு மேல் வேலை உள்ளது என்ற அவசர கதியில் நகரமும் நகரத்தின் மக்கள் போக்கும் மாறிவிட்டதால் அண்டை  அயலில் கூட நட்பு கொள்வது குறைந்து விட்டது. பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் பற்றிய விவரங்கள் கூட தெரிவதில்லை. இன்னும்  இது போன்ற சமூக காரணிகள் காணாமல் போகிற சம்பவங்களுக்குக் காரணமாகிறது.

14:28 by iamvenkatesh · 0

hotlinksin

இந்த அரசு பள்ளியிடம் தனியார் பள்ளிகள் பிச்சைதான் எடுக்கணும்...



"அரசுப் பள்ளி ஒன்று தமிழ்நாட்டில் இருக்கும் மற்ற தனியார் பள்ளிகளுக்கே சவால் விடும் பள்ளியாக இருந்து வருகிறது..." - கேட்பதற்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. அந்த பள்ளிக்கூடத்திற்கு நேரடியாக விசிட் அடித்த போது இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருந்தன.



 கோவை மாவட்டம், காரமடை ஒன்றியம், ஜடையம் பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் இந்த பள்ளி இயங்கி வருகிறது.  இந்த ஆரம்ப பள்ளி 1930 ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.  இராமபாளையம் மட்டுமில்லாமல் சுற்றுபுற பகுதிகளை சேர்ந்த  34 குழந்தைகள் இப்பள்ளியில் படித்து வருகிறார்கள்.  இந்த பள்ளியானது ஒரு தரம் வாய்ந்த ஆங்கில பள்ளிக்கு இணையாக இருக்கிறது.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு ஏற்ற இயல்பான கிராம சூழல், போதுமான கட்டிட அமைப்பு, நவீன பளிங்கு கல்லால் ஆன மாதிரி வகுப்பறைகள்.  இன்றைய வாழ்க்கைக்கு தேவையான அவசியமான கணினி பயிற்சி வகுப்புகள்.  குழந்தைகள் குழுவாக அமர்ந்து உரையாட வட்ட மேஜை வசதிகள்.  குழந்தைகள் நாட்டு நடப்பை தெரிந்து கொள்ள ஆங்கில, தமிழ் நாளிதழின் தினசரி வாசிப்புகள்.  மாணவ மாணவியரை பராமரிக்கும் சிறப்பு பதிவேடுகள், வண்ண சீருடைகள், கழுத்தணி அடையாள அட்டை என எதை எடுத்தாலும் பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம் வியப்பான சங்கதிகளே !
நூலகத்தில் ஆரம்ப பள்ளி கல்வியிலிருந்தே கற்ற நவீன மின்னணு வசதியுடன் கூடிய நூலக வசதி, கணினி தொலைக்காட்சி, அறிவியல் ஆய்வு உபகரணங்கள், செய்வழி கற்றல், அட்டைகளை சிறப்பாக வைக்க வடிவமைக்கப்பட்ட பலகைகள் என பார்த்தாலே பரவசமூட்டுகிறது.

இப்பள்ளியில் சுத்தமான சுத்திகரிக்கப்பட்ட வெந்நீர், குடிநீர், காற்று, மாசுக்களை தடுத்து குழந்தை நோயிலிருந்து காக்கும் பொருட்டு தடுப்பு கண்ணாடி ஜன்னல்கள்.  இந்தபள்ளியில் படிக்கும் குழந்தைகள் ஆரோக்கியமான சூழலில், சிறந்த கல்வியினை கற்கின்றனர்.  விரும்பி வந்தும் சேருகிறார்கள்.  சென்ற ஆண்டு மெட்ரிக் பள்ளியிலிருந்து 4 குழந்தைகள் இந்தப் பள்ளிக்கு வந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

    
குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் கல்வியினை வரமாய், தவமாய் போதித்து கொண்டிருக்கிறார்கள்.  இந்தப் பள்ளி சிறந்து வளர்ச்சியடைய பொதுமக்கள் தாராளமாய் நன்கொடைகளை அளித்து வருகிறார்கள்.  அந்த நன்கொடைகளை ஆசிரியர்கள் சரியாய் பயன்படுத்தி கொள்கிறார்கள். இந்த பள்ளியின் ஆசிரியர் கூறும்போது "தமிழகத்தில் இதுபோன்ற பள்ளி இது மட்டுமே என்று சொல்லலாம் சார்.  தமிழ்நாட்டில் இருக்கிற ஒவ்வொரு அரசுப் பள்ளியும் பிறர் உதவியை நம்பாமல் மக்கள் உதவியை மட்டுமே நம்பினால் சிறப்பாய் வளரும்" என்கிறார்.

னியார் பள்ளிகளை நோக்கி ஓடும் பெற்றோர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும். நம் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளையும் இது போன்று தத்தெடுத்து மேம்படுத்தினால் எல்லா அரசு பள்ளிகளும் இந்த பள்ளி போன்று சிறப்புடன் விளங்கும் என்பதில் ஐயமில்லை. தனியார் பள்ளிகளுக்கு வாரி வழங்கும் பணத்தில் பாதியையாவது இது போன்ற அரசு பள்ளிகளுக்கு கொடுத்து அந்த பள்ளிகளில் கவனம் செலுத்தினோமால் அரசு பள்ளி தனியார் பள்ளியை விட பல மடங்கு மேம்பட்டதாக விளங்கும்...

19:56 by iamvenkatesh · 0

hotlinksin

மழைக்காலம் - விமர்சனம் (ரசிகர்களுக்கு இது போராத காலம்...)




இயக்குநர்கள் ஹீரோவை நம்பி படம் எடுப்பார்கள்... கதையை நம்புவார்கள்... இல்ல திரைக்கதையை நம்பி... அதுவும் இல்லன்னா படத்தில் ஏதோ ஒன்றை கண்டிப்பாக நம்பி படம் எடுப்பார்கள். மழைக்காலம் படத்தின் இயக்குநர் க்ளைமேக்ஸை நம்பி படம் எடுத்திருக்கிறார். ஒருத்தனை ரூம் போட்டு 2 மணி நேரம் அடிச்சு துவச்சிட்டு அப்புறமா கையில ஒரு சாக்லேட்டைக் கொடுத்து அனுப்புறது மாதிரிதான் இருக்கிறது இந்த மழைக்காலம் ட்ரீட்மென்ட்.

விஜய், கவின் கலைக் கல்லூரி மாணவியான ஷோபியாவை (சரண்யா) எதேச்சையாக சாலையில் பார்க்கிறான். அது பின்னர் ஆழமான நட்பாக உருவெடுக்கிறது. அவள் தன் அப்பாவையும் அண்ணனையும் ஒரு விபத்தில் இழந்ததை விஜய்யிடம் சொல்ல, அவள் மீது அவனுக்கு அனுதாபம் பிறக்கிறது. அவளுடன் வாழ வேண்டும் என்று ஆசைப்படும் விஜய் தன் அண்ணன் அண்ணியிடம் சொல்லி அவளை பொண்ணு கேட்க சொல்கிறான். அண்ணனும் அண்ணியும் ஷோபியா வீட்டில் போய் பெண் கேட்க, அவர்களிடம் தனக்கு திருமணமே தேவையில்லை... என்று கத்திவிடுகிறாள் ஷோபியா. இதன் காரணத்தையும் அவனிடம் சொல்ல மறுக்கிறாள் சோபியா. காரணத்தை சொல்லாவிட்டால் செத்து விடுவேன் என்று சொல்கிற விஜய்யிடம், திருமணத்தை மறுப்பதற்கான காரணத்தை சொல்லாமல் செய்தே காட்டுகிறாள் ஷோபியா. அதன் பிறகு அவன் காதல் என்னவாகிறது என்பது க்ளைமேக்ஸ்.

என்ன படிக்கும் போதே சப் என்று இருக்கிறதா...? பார்க்கும் போதும் அப்படித்தான் இருக்கிறது. படத்தில் க்ளைமேக்ஸ் ஸ்ட்ராங்கா இருக்கிறது என்ற காரணத்தால் மற்ற விஷயங்கள் எல்லாவற்றிலும் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குநர். திரைக்கதை என்றால் என்ன என்று கேட்கிற மாதிரி இருக்கிறது படம் துவக்கத்தில் இருந்து க்ளைமேக்ஸ் வரை. ஒவ்வொரு காட்சியும் பிட் பிட்டாக வந்து போகிறது. பிட்டு படத்தில கூட இதைவிட நல்லா சீன் சீக்வென்ஸ் வெச்சிருப்பாங்க... சொதப்பலான காட்சிகள் நம்மை வசப்படுத்துவற்கு பதிலாக எரிச்சலையும் சலிப்பையும் வர வைக்கின்றன.

காதாநாயகனாக புதுமுகம். இவருக்கு ஜோடியாக காதல் சரண்யா. இரண்டு பேரையும் பார்க்கும் போது சரண்யாவை அக்கா என்றும் ஹீரோவை தம்பி என்றும் சொல்லலாம் அந்த அளவுக்கு சரண்யா முகத்தில் முதிர்ச்சி ஓங்கி ஒலிக்கிறது. அதே நேரத்தில் தம்பி நடிகரை... சாரி... ஹீரோவைப் பார்க்கும் போது நடுநிலைப் பள்ளி மாணவன் போல இருக்கிறார். நடிப்பதற்கு பெரிய அளவுக்கு ஸ்கோப் இல்லாத கேரக்டர் என்பதால் யாருமே மெனக்கெடாமல் நடித்துவிட்டுப் போகிறார். அந்த அண்ணி கேரக்டரில் வருகிற நடிகை மட்டும் அண்ணியாக நடிக்கச் சொன்னால் அம்மாவாகவே நடித்துவிடுவார் போலிருக்கிறது. அந்த அளவுக்கு நடிப்பை அள்ளித் தெளிக்கிறார்.

பின்னணி இசை தேவையே இல்லை என்று நினைத்துவிட்டார் இசையமைப்பாளர். சண்டைக்காட்சி, பாடல்கள் தவிர மற்ற இடங்களில் பெரும்பாலும் மியூட்தான். சர்ச்சில் ஹீரோவும்  ஹீரோயினும் போகிற போது, காரில் போகும் போது என அவ்வப்போது வந்து போகும் ஒரு மெல்லிய இசை மனதை வருடிவிட்டுப் போகிறது. காமெடிக்கு என கஞ்சா கருப்பு வந்து ரசிகர்களை சாகடிக்கிறார். காமெடி என்றால் பார்க்கிறவங்க சிரிக்கணும்... ஆனால் கஞ்சா கருப்புவோட காமெடியைப் பார்த்தால்... அழுகையே வருகிறது.

நல்ல காதல் கதை... ஸ்ட்ராங்கான க்ளைமேக்சுடன்... கைவசம் இருந்தால் அதை எப்படி திரைக்கதை அமைத்து பின்னி பெடலெடுக்கலாம்... ஆனால், மழைக்காலம் படத்தின் இயக்குநர் ரசிகர்களை பின்னி பெடல் எடுக்கிறார்.

16:02 by iamvenkatesh · 0

hotlinksin

கேபிள்சங்கர் சொன்ன கதை... ஆடிப்போன தயாரிப்பாளர்...





கேபிள்சங்கர் பற்றி ‘கேபிள்சங்கருக்கு வலை வீசும் இயக்குநர்கள்’ என்னும் தலைப்பில் சமீபத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தோம். அந்த செய்திக்குப் பிறகு சுந்தர் சி படத்திற்கு வசனம் எழுதி முடித்த கையோடு மேலும் இரண்டு படங்களுக்கு வசனம் எழுதிக் கொண்டிருக்கிறார் கேபிள்சங்கர். திரைக்கதை, வசனம் எழுதும் போது, கைவசம் இருக்கும் எக்கச்சக்க ஐடியாக்களை எடுத்துக் கொடுக்கும் திறமை கேபிள் சங்கரின் ஸ்பெஷல். நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வந்த போதிலும் அவற்றை மென்மையாக மறுத்தே வருகிறார் இவர். இதற்கு காரணம் அடுத்து இவர் படம் இயக்கப் போவதால்தான். கனா காணும் காலங்கள் தொடரில் இயக்குநர் அதில் நடிக்கும் நடிகர்களின் வற்புறுத்தலின் பேரில் நடித்து வருகிறார். இதெல்லாம் சராசரி செய்தி என்றாலும் இனி சொல்லப் போவதுதான் முக்கிய செய்தி. முன்னணி தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஒருவரை சமீபத்தில் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்திருக்கிறார் கேபிள். தன் பட இயக்கம் பற்றி அவரிடம் பேச உங்கள் கதையின் ஒன்லைன் சொல்ல முடியுமா என்று தயாரிப்பாளர் கேட்டிருக்கிறார். ஒருவரியில் கேபிள் கதையைச் சொல்லி முடிக்க, முழுக்கதையை கேட்காவிட்டால் தலையே வெடித்துவிடும் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் தயாரிப்பாளர். ‘நெக்ஸ்ட் வீக்ல டைம் ஃப்ரீ பண்ணிட்டு சொல்றேன்... அப்போ வந்து முழுக் கதையையும் சொல்லுங்க... ஓ.கே.னா உடனே ஸ்டார்ட் பண்ணிடலாம்...’ என்று சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர். அந்த கதை படமாக உருவாகும் பட்சத்தில் என்ன தலைப்பு வைத்தால் கமர்ஷியலாக செட் ஆகும் என்று கேபிள்சங்கர் தீவிரமாக ஆலோசித்து வருகிறாராம்.

02:10 by iamvenkatesh · 0

hotlinksin

IPL 5 கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு LIVE


20:16 by iamvenkatesh · 0

hotlinksin

துள்ளுவதோ இளமை + மயக்கம் என்ன = '3' - விமர்சனம்






இரண்டு படங்களிலிருந்து கதைகளை எடுத்து ஒரு படம்தானே பண்ண முடியும்; ஆனால் 3 படம் பண்ண  முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். துள்ளுவதோ இளமை, மயக்கம் என்ன இந்த இரண்டு படங்களையும் நீங்கள் பார்த்திருந்தால், துள்ளுவதோ இளமை படத்தின் முதல் பாதியையும் மயக்கம் என்ன படத்தின் இரண்டாவது பாதியையும் சேர்த்துப் பாருங்கள்... அடடே... அதுதான் 3 படத்தின் கதை... 3 படத்தை இயக்குவதற்கு முன்பு செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார் சவுந்தர்யா. அந்த நேரத்தில் பேசாமல் செல்வராகவனின் மற்ற படங்களையும் பார்த்திருந்தால் இன்னும் கொஞ்சம் கலவையாக கிடைத்திருக்கும் 3.

இனி 3 படத்தின் கதையைப் பார்ப்போம். ராம், +2 படிக்கும் வசதியான வீட்டுப் பையன். ஒருநாள் மழையில் நனைந்து கொண்டே பைக்கில் பள்ளிக்கூடம் போகும் போது, கதாநாயகி ஜனனியைப் பார்க்கிறான். சைக்கிள் செயின் மாட்டிக் கொள்ள அதை சரி செய்ய அவள் படாத பாடுபடுகிறாள். இதைப் பார்க்கும் ராம், ஹீரோவாச்சே... உடனே ஓடிப்போய் உதவி பண்ணுகிறார். அதன்பிறகு அவள் பள்ளி சீருடையை வைத்தே எந்த பள்ளிக்கூடம் என்பதை கண்டறிந்து அங்கிருந்து அவள் ட்டியூசன் போகும் வழியில் மட்டுமின்றி வீடு வரும் வரை காவல்காரன் வேலை பார்க்கிறார் ராம். தான் காதலிப்பதை ராம் ஜனனியிடம் சொல்ல, அப்புறம் அவளும் காதலை ஏற்றுக் கொள்கிறாள். கல்யாணம்... தனிக்குடித்தனம் என்று போகும் ராம் - ஜனனி, வாழ்க்கையில் ராமிடம் திடீரென வந்து குடி கொள்கிறது மனவியாதி. அதன்பிறகு அவர்கள் வாழ்க்கையில் எப்படியெல்லாம் சூறாவளி வீசுகிறது என்பது கதை.

இப்ப புரிஞ்சிருக்குமே... ஏன் துள்ளுவதோ இளமை படத்தையும் மயக்கம் என்ன படத்தையும் வம்புக்கு இழுத்தோம் என்று. 

இயக்குநர் ஐஸ்வர்யாவை ஒரு விஷயத்தில் கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். படத்தின் க்ளைமேக்ஸை முதலிலேயே வைத்துவிட்டார். அதாவது தனுஷ் தற்கொலை செய்து கொள்வதை. இதற்கு என்ன காரணம் என்றால், படத்தின் முற்பகுதி கலகலப்பாக போனாலும் அடுத்த பாதியில் படம் அடித்து தூக்கி நிறுத்தினாலும், படுத்துவிடுகிறது. இந்த மாதிரி போர் அடிக்கிற நேரத்தில் வெறுப்பில் சிலர் தியேட்டரை விட்டு வெளியேறி விடுவார்கள். ஒருவேளை அப்படி யாராவது போய்விட்டால் படம் பார்க்கும் யாருக்கும் க்ளைமேக்ஸ் பார்க்கவில்லையே என்ற எண்ணம் வரக்கூடாது அல்லவா... அதனால் முன்னெச்சரிக்கையாக ஐஸ்வர்யா க்ளைமேக்ஸை முதலிலேயே வைத்துவிட்டார்.

பள்ளி மாணவனாக வரும் தனுஷ் அவருடன் நண்பனாக வரும் சிவகார்த்திகேயன் இருவருமே படத்தின் இடைவேளை வரை செம கலாட்டா பண்ணுகிறார்கள். சிவகார்த்திகேயன் அவ்வப்போது அடிக்கும் டைமிங் காமெடிக்கு திரையரங்கமே அதிருகிறது. இதனால் இடைவேளை வரை படம் நகர்வதே தெரியவில்லை. ஆனால், இடைவேளைக்கு அப்புறம்தான் சனி தியேட்டர் திரையில் வந்து உட்கார்ந்து விடுகிறது. மனவியாதியால் பாதிக்கப்பட்ட தனுஷை அவர் நண்பர் மருத்துவமனைக்கு அழைப்பதும், தனுஷ் மறுப்பதும், பின்பு மருத்துவமனைக்கு போவதும் இப்படியே காட்சிகள் கடந்து கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட டிராமா மாதிரி. இதைவிட்டால் ஸ்ருதி அழுவதை காட்டுகிறார்கள். அதுவும் க்ளோஸ் ஷாட்டில் அழுகை அழுகை... ஒரே அழுகையாக அழுகிறது பொண்ணு. நிஜ வாழ்க்கையில் புருஷன் செத்தா கூட இப்படி அழமாட்டங்க. அதை விட ஓவராக அழுகிறார். படம் முடியும் போது இவர் அழும் காட்சிகளில் தியேட்டரில் ரசிகர்கள் பீல் பண்ணுவதற்கு பதிலாக சிரிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

ஸ்ருதி நடிப்பில் நன்றாகவே இம்ப்ரஸ் பண்ணுகிறார். இவர் ராம் ராம் என்று தனுஷை கூப்பிடும் காட்சிகள் அவ்வளவு அழகு. தியேட்டரை விட்டு வெளியே வந்தாலும் இவர் கூப்பிடும் ராம் ராம்... என்பது மட்டும் மனதுக்குள்ளே கேட்டுக் கொண்டே இருப்பது போல் ஒரு ஃபீல். என்ன... ஸ்ருதியை கொஞ்சம் கண்ணீர் குறைச்சலா சிந்த விட்டிருக்கலாம்.

தனுஷின் அப்பாவாக வரும் பிரபு. எப்போது பார்த்தாலும் ஃபைலில் ஏதோ எழுதியபடியே இருக்கிறார். அம்மாவாக வருகிறார் பானுப்ரியா. 


மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிய கொலைவெறி பாடலை கடற்கரையில் தனுஷ் டீமை ஆடவிட்டு ஒப்பேத்தியிருக்கிறார்கள்.

படத்தின் இடைவேளை வரைக்கும் கொஞ்சம் வேலை பார்த்திருக்கிறார் எடிட்டார். இடைவேளைக்கு பிறகு அவருக்கு தெரியாமல் வேறு யாரோ எடிட்டிங் வேலை பார்த்துவிட்டார்கள் போலும்.

கார் பார்க்கிங் ஏரியாவில் வைத்து நடைபெறும் அந்த சண்டை காட்சி பலே ரகம். சபாஷ் போட வைக்கிறது. அதுவும் தனுஷின் தலையை ஒருவன் பிடித்து கார் பேனட்டில் அடிக்க திருப்பி தனுஷே அதை போன்று அடித்துக் காட்டும் போது... சூப்பர் சீன். இது போன்று சின்ன சின்ன ஆனால் ரசிக்கிற மாதிரியான காட்சிகள் எக்கச்சக்கமாக இருந்த போதிலும் இடைவேளைக்கு பின்னர் வரும் தனுஷின் மனவியாதி சம்பந்தப்பட்ட வழ வழ காட்சிகள் படத்தை ஒரு திருப்தியில்லாமல் செய்துவிடுகின்றன.


படத்தை ஒரு தடவை பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வருகிற நமக்கே தனுசுக்கு வந்தது போன்ற மனவியாதி வந்துவிடும் போல் இருக்கிறது... அப்படி இருக்கும் போது, இந்த படத்தை வெளியிடுவதற்கு முன்பு படத்தின் இயக்குநர், எடிட்டர், இசையமைப்பாளர் இவர்கள் எல்லாம் படத்தை எத்தனை தடவை பார்த்திருப்பார்கள்... அவர்கள் நிலைமை... நினைக்கும் போதே... கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கிறது.

17:37 by iamvenkatesh · 0

hotlinksin

கோபிநாத்... நாங்க... நீயா நானா பார்க்கணுமா? வேண்டாமா?



கடந்த ஞாயிற்றுக்கிழமை நீயா நானா பார்ப்பதற்காக ஆர்வமுடன் வந்து பார்த்தால் பேரதிர்ச்சி காத்திருந்தது. டிவியில் கொஞ்சம் விரும்பிப் பார்க்கிற நிகழ்ச்சியே இது ஒன்றுதான். அதையும் இனிமேல் நீ பார்ப்பியா...? என்பது போல் அன்றைய நிகழ்ச்சி அமைந்திருந்தது. முதலில் டாப்பிக்கின் டைட்டிலை கேளுங்க... அப்புறம் உங்களுக்கே கோபம் வரும்... அதிகமாக சீன் போடுவது யார்...? ஆண்களா? பெண்களா? என்பதுதான் டைட்டில். நாலு பேரு நாலு விஷயங்களைப் பத்திப் பேசுவாங்க... கொஞ்சம் ஆவர்மாக பார்க்கலாம் என்று பார்த்தால்... கொஞ்சம் ஆண்கள் இந்த பக்கமும் கொஞ்சம் பெண்கள் அந்த பக்கமும் உட்கார்ந்து கொண்டு நீயா நானாவில் சீன் போடுவது பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

அதுவும் கோபிநாத் அவர்களிடம் வளைத்து வளைத்து கேள்வி கேட்கிறார். நீங்க எப்படி சீன் போடுவீங்க என்று... ஒவ்வொருவரும் அவரவருக்கு தோன்றியதை சொல்லி ஒப்பேத்துகிறார்கள். ஐந்து நிமிடம் பார்ப்பதற்குள் கடுப்பாகிவிட்டது.

வாரத்தில் ஒரு நாள் வருகிற நிகழ்ச்சி இந்த நீயா நானா. அதுவும் இந்த நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே டான் என நீயா நானா துவங்கும் நேரத்திற்கு ஆஜராகவிடுவார்கள். இது போன்ற டைட்டில்களை வைத்துக் கொண்டு விவாதிப்பது அவர்கள் அத்தனை பேருக்கும் ஏமாற்றத்தை அளிப்பதோடு மட்டுமில்லாமல் அவர்களது நேரங்களையும் திருடுவதற்கு சமமாகும். 
விவாதிப்பதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்க, இது போன்ற மொக்கையான விஷயங்களை ஏன் நீயா நானா டீம் எடுத்துக் கொள்கிறது என்று தெரியவில்லை. உங்களுக்கு ஐடியா இல்லை என்றால் ஒரு சிறிய விளம்பரம் ஒன்றை நிகழ்ச்சின் இடைவெளியில் கொடுங்கள். வந்து குவியும் ஆயிரம் டைட்டில்கள். அதைவிட்டுவிட்டு இது போன்று சப்பை கட்டு கட்டும் விவாதங்களை கண்டிப்பாக தவிருங்கள். இவை நீயா நானா நிகழ்ச்சியைப் பார்க்க வைப்பதற்கு பதிலாக... நிரந்தரமாக பார்க்க விடாமல் செய்துவிடும்...

03:50 by iamvenkatesh · 0

hotlinksin

வெங்காயம் தந்த மவுசு... - சந்தோஷத்தில் நடிகை



வெங்காயம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் பவினா. முதல் தடவை வெங்காயம் ரீலீஸ் ஆன போது வந்த வேகத்திலேயே படம் ரிட்டன் ஆனால் தவித்துப் போய்விட்டார் பவினா. இத்தனைக்கும் நடிப்பில் தூள் கிளப்பியிருந்தார் பவினா.  படம் ஓடாவிட்டால் சாதாரண ரசிகனே திரும்பிப் பார்க்க மாட்டான். அப்படி இருக்கும்போது இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் மட்டும் திரும்பிப் பார்த்துவிடுவார்களா என்ன? ஆனாலும் இவருக்கு சிறிய படங்கள் சில கமிட் ஆகின. அத்தனையும் கிளாமரான வேடங்கள். வந்தவரைக்கும் என்று அதிலும் நடித்துத் தொலைத்தார் பவினா. அதுவும் ‘ஒரு சந்திப்பில்’ படத்தில் இவரை அப்படியே வெங்காயத்தை உரிப்பது போல் உரித்துக் காட்டிவிட்டார்களாம். ஏறக்குறைய சூழ்நிலை படத்திலும் இப்படிப் பட்ட கேரக்டர்தானாம். ஆனால் சமீபத்தில் சேரன் வெங்காயம் படத்தை ரிலீஸ் செய்ய படத்திற்கு ஏகப்பட்ட மவுசு கூடியிருக்கிறது. படத்திற்கு மட்டுமல்ல படத்தில் நடித்த நடிகை பவினாவுக்கும்தான். பொண்ணு நல்லா நடிக்குதேப்பா என்று கோடம்பாக்க இயக்குநர்களே வாய்விட்டு சொல்லியிருக்கிறார்களாம். இதைக் கேட்ட சந்தோஷத்தில் பவினாவுக்கு கண்ணீரே வந்துவிட்டதாம். இதைத் தொடர்ந்து வேறு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் இப்போதைக்கு பவினாவின் வீட்டுக் கதவைத் தட்ட ஆரம்பித்திருக்கிறது.

03:11 by iamvenkatesh · 0

hotlinksin

இளம் நடிகை தலையில் நரைமுடி - டென்ஷனில் இயக்குநர்




நெடுஞ்சாலை படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் ஷிவதா. மலையாள கரையேரத்தில் இருந்து தமிழ் சினிமாவில் நடிப்பதற்காக அழைத்து வந்திருக்கிறார்கள் அம்மணியை. கேரள நடிகைகள் என்றாலே கொஞ்சம் கொழுக் மொழுக் என்று இருப்பார்கள். ஷிவதா அதற்கு கொஞ்சம் நேர் மாறாக இருக்கிறார். நெடுஞ்சாலை படத்தில் இவரை நடிக்க வைக்க முதலில் போட்டோ செஷன் படங்களை எடுத்திருக்கிறார்கள். படங்களை எடுத்து முடித்ததும் மீடியாக்களுக்கு செய்திகளையும் படங்களையும் கொடுத்திருக்கிறார்கள். அதுவரையிலும் ஏதும் தெரியவில்லை. அவர்கள் கொடுத்த படங்களை இணையதளங்கள் வெளியிட்டிருக்கின்றன. அதைப் பார்த்த நெடுஞ்சலை படத்தைச் சேர்ந்தவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. காரணம் நடிகை ஷிவதாவின் தலையில் நரை முடிகள் ஆங்காங்கே தலைகாட்டிக் கொண்டிருந்தன. போட்டோ செஷன் எடுத்து முடியும் வரை இதை கவனிக்காமலே இருந்திருக்கிறோமே என்று மேக்அப் மேன்களிடம் டென்ஷனாகியிருக்கிறார் இயக்குநர். ஆனாலும், ஒட்டு மொத்த மீடியாவுக்கும் கொடுத்து அவர்களும் வெளியிட்டுவிட்டார்கள். சரி... இருந்துவிட்டு போகட்டும் என்று படப்பிடிப்பு வேலைகளில் இறங்கிவிட்டாகளாம் நெடுஞ்சாலை டீமினர்.

00:59 by iamvenkatesh · 0

hotlinksin