கேபிள் சங்கர் இயக்கும் படம்




கேபிள் சங்கர் எழுதிய சினிமா என் சினிமா புத்தகத்தின் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. புத்தக வெளியீட்டு விழாவிற்கு வீரசேகரன், கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, பார்க்கணும் போல இருக்கு படங்களின் தயாரிப்பாளர் துவார் சந்திரசேகர் தலைமை தாங்கினார். நடிகர் நாசர் புத்தகத்தை வெளியிட்டார்.

விழாவில் தயாரிப்பாளர் துவார் சந்திரசேகர் பேசியதுதான் ஹைலைட். “நான் இப்போது “இருவர் உள்ளம்” என்னும் படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். இதன் படப்பிடிப்புகள் வெளிநாடுகளில் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப் படத்தின் வேலைகள் முடிந்ததும் அடுத்தப் படத்தைத் தயாரிக்கப் போகிறேன். அந்த படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா...? கேபிள் சங்கர்தான் அந்த படத்தை இயக்கப் போகிறார். அவர் என்னிடம் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஓ.கே. சொல்லிவிட்டேன்...” என்று தயாரிப்பாளர் தமது படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு கேபிள்சங்கரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டார்.

01:32 by iamvenkatesh · 0

hotlinksin

கேபிள் சங்கரின் ‘சினிமா என் சினிமா’ புத்தக வெளியீடு படங்கள்




















21:21 by iamvenkatesh · 0

hotlinksin

‘மல்லிகை’ நடிகை எடுத்த அதிர்ச்சி முடிவு…



கதாநாயகியாக பல படங்களில் நடித்தவர் ‘மல்லிகை’ நடிகை. சமீபகாலமாக இவருக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. புதிது புதிதாக பல நடிகைகள் அவரது சொந்த ஊரிலிருந்தே களம் இறக்கப்பட மெல்ல மெல்ல ஓரம் கட்டப்பட்டுவிட்டார் மல்லிகை. தனக்குத் தெரிந்த இயக்குநர்களிடம் எல்லாம் வாய்ப்பும் கேட்டுப் பார்த்துவிட்டார். ஆனால் போனில் இவரது அழைப்பு வந்துவிட்டாலே தப்பித்தால் போதும் என்று ஓடுகிறார்களாம் இயக்குநர்கள். பொறுத்திருந்து பார்த்தவர், இப்போது ஒத்தைப் பாடலுக்கு குத்தாட்டம் போடுவது என்று முடிவெடுத்துவிட்டாராம். பொருளாதார சிக்கல்களை சமாளிக்க தான் இப்படி ஒரு முடிவெடுத்துவிட்டதாக தன் காதலரிடம் சொல்ல அவரும் ‘ஓ.கே. தாராளமாக ஆடு…’ என்று சொல்லிவிட்டாராம். விரைவில் கச்சையுடன் களம் இறங்கவிருக்கிறார் மல்லிகை.

08:20 by iamvenkatesh · 0

hotlinksin

இளம் இயக்குநர்களை வியக்க வைத்த ஆன்டி நடிகை!




படத்தில் ஹீரோ ஹீரோயினாக நடிப்பவர்களே ஏதோ நடித்தோமா பணத்தை வாங்கி வேறு எதிலாவது முதலீடு செய்தோமா என்றுதான் இருக்கிறார்கள். இவர்களே இப்படி என்றால் குணசித்திர வேடத்தில் நடிப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும். நடித்தோமா எஸ்கேப் ஆனோமா என்றுதானே இருப்பார்கள்? ஆனால் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கிறார் லஷ்மி ராமகிருஷ்ணன். பல படங்களில் அழகான அம்மாவாக நடித்தவர். யுத்தம் செய் படத்துக்காக மொட்டையும் போட்டு நடித்தார். லஷ்மி ராமகிருஷ்ணன் இப்போது இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார். இவர் இயக்கியிருக்கும் படத்தின் பெயர் ஆரோகணம். இந்தப் படத்தைப் பார்த்த இயக்குநர் வசந்த், மிஸ்கின் ஆகியோர் படத்தைப் பார்த்து அசந்து போயிருக்கிறார்கள். ‘லஷ்மியால இப்படியும் படம் எடுக்க முடியுமா?’ என்று வியந்து போய் இரண்டுபேருமே ஆரோகணத்தை இயக்கிய ஆன்டி நடிகை லஷ்மி ராமகிருஷ்ணனை பாராட்டிக் கொண்டிருக்கிறார்களாம்.

00:25 by iamvenkatesh · 0

hotlinksin

நடிகையை கண்டபடி திட்டிய தயாரிப்பாளர்




நடிகை ரேஷ்மா, சில படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 3 வருடங்களுக்கு மேலாக படங்களில் நடிக்காமல் சும்மாவே இருந்தார். சுவராஞ்சலி என்னும் கன்னடப் படத்தில் நடிப்பதற்கு இவரை தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் ஒப்பந்தம் செய்தார். படம் முடிந்து ரிலீசுக்கு தயாரான நிலையில் தனது சம்பளப் பாக்கியைத் தருமாறு ரேஷ்மா தயாரிப்பாளரிடம் கேட்டிருக்கிறார். பணம் கேட்டதும் கடுப்பான தயாரிப்பாளர் ரேஷ்மாவை ஆபாச வார்த்தைகளால் அசிங்கமாக திட்டியிருக்கிறார். இது குறித்து நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார் ரேஷ்மா.

11:38 by iamvenkatesh · 0

hotlinksin

பவர் ஸ்டாரை பஞ்சராக்கிய இயக்குநர் பாலா




விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் பவர் ஸ்டாரை குத்தி வலுக்கட்டாயமாக பஞ்சராக்கினார் கோபிநாத். இதைத் தொடர்ந்து பவர் ஸ்டாருக்கு ஏகப்பட்ட அனுதாபங்களும், கோபிநாத்துக்கு கண்டனங்களும் வந்து குவிந்தன. இது ஒருபுறமிருக்க இப்போது இயக்குநர் பாலா பவர் ஸ்டாரை பஞ்சராக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பரதேசி என்னும் படத்தை பிஸியாக இயக்கிவருகிறார் பாலா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதில் எக்குதப்பான ஒரு கேரக்டர். இதில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்த பாலாவிடம் யாரோ இந்த கேரக்டரில் பவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து பவர் ஸ்டாரையே அந்த கேரக்டருக்கு கமிட் செய்திருக்கிறார் பாலா.

சந்தோஷமாக தனது பரிவாங்களுடனே படப்பிடிப்புக்கு போய் இறங்கியிருக்கிறார் பவர் ஸ்டார். பவரின் இந்த மாஸ் கிரியேட்டிங் சீன்ஸ் பாலாவுக்கு பிடிக்காது என்பதால் பவர் ஸ்டாரை பக்கத்தில் வைத்துக் கொண்டே பக்கத்தில் ஒருவரைத் திட்டுவது போல பவர் ஸ்டாரை சாடை மாடையாக திட்டித் தீர்த்துவிட்டாராம். பாலா திட்ட திட்ட பஞ்சரான பவர் ஸ்டார், தப்பித்தால் போதும் என்று அங்கிருந்து எஸ்கேப் ஆகியிருக்கிறார்.

21:22 by iamvenkatesh · 0

hotlinksin

ஹன்ஸிகாவுக்கு ஆப்பு வைத்தது யார்?



சமீபத்தில்தான் பிஎம்டபிள்யு கார் வாங்கியிருந்தார் ஹன்ஸிகா. வாங்கினவர் கார்ல வந்தோமா போனோமா என்று இருக்கணும். அதை விட்டுவிட்டு கார் வாங்கிய விஷயத்தை ஊர் முழுக்க தம்பட்டம் அடித்திருக்கிறார். இந்த செய்தி அரசல் புரசலாக வருமான வரித்துறையினரையும் எட்டியிருக்கிறது. கும்பலாக கிளம்பி வந்துவிட்டார்கள் அவர்கள். 60 லட்ச ரூபாய்க்கு கார் வாங்கியிருக்கிறார் என்றால் நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்று கேள்வி மேல் கேள்வியாக கேட்டுத் தள்ளிவிட்டார்களாம். அவர்களின் கேள்விக்கு பதில் சொல்லி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டதாம். சொந்தக் காசிலேயே சூனியம் வைத்தது போல் ஆகிவிட்டதே என்ற வேதனையில் இருக்கிறாராம் ஹன்ஸிகா.

09:07 by iamvenkatesh · 0

hotlinksin

மணிரத்னத்தை கடுப்பாக்கிய இளம் நடிகை




மணிரத்னம் இயக்கிவரும் படம் ‘கடல்’. இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் சமந்தா. படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருந்த நிலையில் படத்தில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்டிருக்கிறார் சமந்தா. இதற்கான காரணத்தை விசாரித்த போது, சமந்தா ஏற்கனவே பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கும் நிலையில் கடல் படத்திற்கும் அதே தேதிகளை பிரித்துக் கொடுத்திருக்கிறார். இதனால் கடல் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருந்து கொண்டேயிருந்திருக்கின்றன. இதை சரி செய்துவிடுவார் என்று மணி எதிர்பார்த்திருக்கிறார். ஆனால் நாளுக்கு நாள் கால்ஷீட் பிரச்சினை அதிகரித்துக் கொண்டே போகவே, செமையாக கடுப்பாகியிருக்கிறார் மணிரத்னம். இதற்கு மேலும் தாமதிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்ட மணிரத்னம் அதிரடியாக சமந்தாவுக்கு கெட்அவுட்டும் குட்பையும் சேர்த்தே சொல்லியிருக்கிறார்.

23:31 by iamvenkatesh · 0

hotlinksin

இவளுங்க எல்லாம் நாசமாத்தான் போவளுங்க...



ஒரு மெல்லிய காதல் என்னுள் எட்டிப் பார்த்து முளையிலேயே கருகிப் போனது.

ஏற்கனவே ஒரு காதல் என்னுள் உருவாகி அது முழுவதும் கருகிப் போனதனால் ஏற்பட்ட என் மனதின் கவலைகள் மறக்கப்பட கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆகிப் போயின. மீண்டும் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு என்னுள் ஒரு காதல் துளிர்விட்டது.

என் உறவுக்கார பெண்ணின் திருமணத்திற்காக ஊருக்குப் போயிருந்தேன். அப்போது குறிப்பிட்ட ஒரு பெண்ணின் பேச்சைத்தான் எப்போதும் பேசிக் கொண்டேயிருந்தார்கள் என் அம்மாவும் சகோதரியும். தெரிந்த பெண்தான் அவள். என் அம்மாவிடம் அவள், ‘நான் இன்ஜினியரிங் 3 ஆம் வருடம் படிக்கிறேன். இன்னும் ஒரு வருடத்தில் படிப்பு முடிஞ்சிரும்... அப்புறம் என்னை உங்க மகனுக்கு கட்டிக் கொடுங்க’ என்று சொல்லியிருக்கிறாள். என் சகோதரியிடம், ‘உங்க தம்பிக்கு என்னை கல்யாணம் பண்ணிக்குங்க...’ என்று சொல்லியிருக்கிறாள். இப்போது நான் ஊருக்கு போன போது என் சகோதரிக்கு போன் செய்த அவள் என்னிடமும் பேசினாள். ‘உங்களை ரொம்ப நல்லா பாத்துப்பேன்...’ என்று அவள் சந்தோஷமாய் சொன்னாள். அதைக் கேட்ட நேரத்தில் இருந்தே என் மனதில் சந்தோஷ பட்டாம்பூச்சிகள் சிறகு முளைத்து பறந்தன. ஒவ்வொரு கணத்தையும் ஒருயுகமாக நான் உணர்ந்தேன். அவளிடம் நான் பேசமாட்டேனா... என ஏங்கினேன். என் அம்மாவும் சகோதரியும் அவளைப் பற்றி அடிக்கடி பேசிக் கொண்டே இருக்க என்மனதில் அவள் இன்னும் அடி ஆழத்தில் இறங்கினாள். என் மனைவியாகவே அவளை நினைத்துக் கொண்டு இரண்டு நாட்கள் தூங்கினேன்.

என் சகோதரியின் மொபைலில் இருந்து அவள் எண்ணை தேடி எடுத்து அவளிடம் பேசினேன். ‘சொல்லுங்க...’ என்று அன்பாக துவங்கினாள் பேச்சை. கிட்டத்தட்ட அரை மணிநேரம் அவளிடம் பேசிய போதும் அது அரை நிமிடமாகவே எனக்கு தோன்றியது. அவள் அப்போது என் வேலை, அவள் படிப்பு எல்லாவற்றையும் பற்றி நிறைய பேசினாள். நான் படிக்கிற படிப்பு பொண்ணுதான் வேணும்னு சொன்னீங்களாமே... நான் அந்த படிப்புதான் படிக்கிறேன்... என்ற போது அவள் எனக்கு உதவியாக இருப்பாள் என்று எண்ணத் தோன்றியது.

அவள் வேறு சாதி நாங்கள் வேறு சாதி என்று வீட்டில் சொன்னார்கள். ஆனால், ‘எந்த சாதியாக இருந்தால் என்ன... எல்லாரும் மனுஷங்கதானே...’ என்று தத்துவத்தைப் பேசினேன் அவளுக்கு ஆதரவாக. அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தேன்.

இன்று அவளை சந்திப்பது என முடிவு செய்தேன். அதற்காக கிளம்பினேன். அவள் இருக்குமிடம் போவதற்கு இரண்டு பேருந்துகளைப் பிடித்துப் போக வேண்டும். அவள் அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டேன். பிஸியாக இருந்தது. கிட்டத்தட்ட 3 மணி நேரங்களுக்கு மேல் பிஸி. ஒருவழியாக அவளை தொடர்பு கொண்ட போது, ‘தன் தோழி ஒருத்தி ஒரு பையனை லவ்வுகிறாள் என்றும்... அந்த காதல் அவள் வீட்டுக்கு தெரிந்து விட்டது. எனவே அதிலிருந்து தப்பிக்க தன் தோழியுடன் சேர்ந்து ஐடியா பண்ணுகிறோம்...’ என்று சொன்னாள். எனக்கு அதை நம்புவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. பேருந்தைப் பிடித்து முதல் பேருந்து நிலையத்தை அடைந்தேன்.

அதன் பிறகு அவள் மொபைலுக்கு கால் பண்ணினேன். எடுக்கவில்லை. மதிய நேரமாயிற்றே சாப்பிட்டுக் கொண்டிருப்பாள் என்று நினைத்தேன். மீண்டும் சிறிது நேரம் கழித்து மொபைலுக்கு முயற்சிக்கலாம் என்று நினைத்தேன். அப்போது பார்த்து ஒரு மெசேஜ் வந்தது. ‘சாப்பிட்டுக் கொண்டு இருந்தேன்... என்ன விஷயம்... சொல்லுங்க அண்ணா...’ என்று ஒரு மெசேஜ் வந்தது. எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. ‘என்னது... அண்ணாவா...?’ அதிர்ச்சியில் உடனே போனைப் போட்டேன்.

‘என்னம்மா எப்படி இருக்கே... அண்ணான்னு மெசேஜ் அனுப்பியிருக்கே...’ என்றேன் அதிர்ச்சியுடனே. ‘ஆமா... வயசுல பெரியவங்களை அண்ணான்னு கூப்பிடணும்... இல்ல... சார்ன்னு கூப்பிடணும்... நீங்க ரொம்ப நல்லா பேசுறதால உங்களை அண்ணான்னு கூப்பிடுறேன்... சொல்லுங்க அண்ணா’ என்று சொன்னாள். என் அதிர்ச்சி இன்னும் அதிகமாக அப்படியே கீழே சரிந்து விடுவேனோ என்று பயந்து போனேன். அவள் தந்த வேதனையைத் தாங்க முடியாமல் போனை கட் செய்தேன்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொண்டேன். ‘இதுக்கு முன்னால யாருகிட்டயாவது இப்படி உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லியிருக்கியா...?’ என்று கேட்டேன். ‘இல்லை ஏன் கேக்கீறீங்க...’ என்றாள். ‘நீ என்கிட்ட என் அம்மா சகோரிகிட்ட பேசினதை எல்லாம் உண்மைன்னு நெனச்சி நம்பிட்டேன்... என் மனசை ஹர்ட் பண்ணின மாதிரி வேற யாருகிட்டயும் இப்படி பேசி அவங்க மனசை இனிமே விளையாட்டுக்குக்கூட ஹர்ட் பண்ணிடாத...’ என்றேன். ‘எக்ஸ்ட்ரீம்லி சாரி...’ என்றாள்.

இதற்கு மேலும் அவளைப் போய் பார்ப்பது சரி என்று என் மனதுக்கு தோன்றவில்லை. ஊருக்கு செல்லும் பேருந்தை தேடிப்பிடித்து உட்கார்ந்தேன்.

யார் இந்த பெண்...? ஏன் என் வாழ்வில் வந்தாள்... ஓரிரு நாட்களிலேயே என் மனதை முழுவதுமாக வசீகரித்தவள் இப்படி விளையாட்டுக்காய் சொல்வாள் என்று என் கனவில் கூட நான் நினைத்திருக்கவில்லை. ஏற்கனவே முதல் காதலில் என் உறவுக்கார பெண் 6 மாதங்கள் பழகிய பின்பு என்னை தூக்கி எறிந்துவிட்டுப் போனாள். இதோ அடுத்தவள் ஆறு நாட்களில் விளையாட்டுக்கு சொன்னேன் என்று சொல்லிவிட்டுப் போகிறாள். என் வாழ்வில் நான் சந்தித்த என் மனதைத் தொலைத்த பெண்கள் எல்லாருமே என் மனதில் நீங்காத வடுவை ஏற்படுத்திச் செல்கிறார்கள். இதோ இவள் இப்போது பெரும் வேதனையை ஏற்படுத்திச் செல்கிறாள். அடுத்தவள் எப்போது வருவாளோ என் இதயத்தைத் திருடி அதை ஈட்டியால் குத்தி ரத்தத்தைக் குடிப்பதற்கு, நினைக்கும் போதே பயமாக இருக்கிறது.

மினி பஸ் உறுமிக் கொண்டு கிளம்பத் தயாரானது. டிரைவர் ஸ்பீக்கரில் பாட்டைப் போட்டார். ‘பொம்பளைங்க காதலைத்தான் நம்பிவிடாதே... நம்பி விடாதே...’ என்று பாடியது பாடல்.

15:52 by iamvenkatesh · 2

hotlinksin

என்னை விட்ருங்க... - இயக்குநரிடம் கெஞ்சிய அசின்




மாதவன்-ஆர்யா-சமீராரெட்டி-அமலாபால் ஆகியோரை வைத்து லிங்குசாமி இயக்கிய வேட்டை படம் இங்கு ஓடிச்சோ ஓடலையோ தெரியலை... ஆனால் இப்போது இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் வேலைகளில் இறங்கியிருக்கிறார் லிங்குசாமி. இதில் அமலாபால் நடித்த வேடத்திற்கு சமீராரெட்டியை புக் பண்ணிவிட்டார் லிங்கு. சமீராரெட்டி தமிழில் நடித்த அக்கா கேரக்டரில் நடிக்க அசினிடம் கேட்டிருக்கிறார்.

முதலில் லிங்குசாமி படம் என்றதும் ஒத்துக் கொண்டுள்ளார் அசின். பின்னர் சமீராரெட்டிக்கு அக்காவாக நடிக்கும் கேரக்டர் என்பது தெரிந்ததும், ‘இரண்டு ஹீரோயின் கேரக்டரில் நான் நடிப்பதாக இல்லை... என்னை விட்ருங்க... வேறு நடிகையை ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள்...’ என்று லிங்குசாமியிடம் சொல்லி அனுப்பிவிட்டாராம் அசின். இதுதான் நல்ல வாய்ப்பு என்று நினைத்த அமலாபால், ‘தமிழில் நடித்தது போலவே என்னையும், சமீராவையும் இந்தியிலும் நடிக்க வையுங்கள்’ என்று லிங்குசாமியிடம் கோரிக்கை வைத்திருக்கிறாராம் அமலாபால்.

23:49 by iamvenkatesh · 0

hotlinksin

தனியார் பள்ளிகளின் நாறப் பொழப்பு...




தனியார் பள்ளிகளுக்கு மத்தியில் உருவாகியிருக்கும் பலத்த போட்டிகள் காரணமாக ஒவ்வொரு பள்ளியும் ஏராளமான விளம்பரங்களை செய்து வருகிறது. சில பள்ளிகள் தங்கள் விளம்பரங்களில் கவர்ச்சிகரமான பெண்களின் படங்களையும் இடம் பெறச் செய்கின்றன. அவற்றில் ஒன்றுதான் இந்த விளம்பரம். நீங்களும் பார்த்து காறித் துப்பிட்டு போங்க சாமிகளா..


18:39 by iamvenkatesh · 0

hotlinksin

இந்த நடிகை பீல் பண்ணியிருப்பாரா? மாட்டாரா?



படத்தைப் பாருங்க... க்யூட்டான நடிகை... அட்டு மாதிரி ஒரு நடிகர்... இந்த மாதிரி ஒரு அப்பாடக்கர் நடிகர் கூட ஜோடியாக நடிப்பதற்கு கூட நடிக்கிற நடிகைகள் பீல் பண்ணுவார்களா மாட்டார்களா? ஆனா... என்னால சகிக்க முடியலப்பா...

02:23 by iamvenkatesh · 0

hotlinksin

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?


நெட்டில் மேய்ந்து கொண்டிருந்த போது, கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...? என்ற தலைப்பில் வெளியாகியிருந்த விஷயங்கள் என்னைக் கவர்ந்தன. அதை அப்படியே இங்கு எழுதியிருக்கிறேன். 


1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.


2. மனது புண்படும்படி பேசக்கூடாது.


3. கோபப்படக்கூடாது.


4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.


5. பலர் முன் திட்டக்கூடாது.


6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.


7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.


8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.


9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.


10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.


11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.


12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.


13. வாரம் ஒரு முறையாவது மனம் விட்டுப் பேச வேண்டும்.


14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.


15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.


16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.


17. ஒளிவு, மறைவு கூடாது.


18. மனைவியை நம்ப வேண்டும்.


19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.


20. மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது.


21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்படவேண்டும்.


22. தனக்கு இருக்கும் கஷ்டம், தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.


23. உடல் நலமில்லாத போது, உடனிருந்து கவனிக்க வேண்டும்.


24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.


25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.


26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் “இது உன் குழந்தை” என்று ஒதுங்கக்கூடாது.


27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.


28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.


29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.


30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டு, சொல்ல வேண்டும்.


31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.


32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.


33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.


34. மனைவிக்குப் பிடித்தவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.


35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.


36. மனைவி வீட்டாரை குறை சொல்லக்கூடாது.


37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்  

02:10 by iamvenkatesh · 0

hotlinksin

மனம் கொத்திப் பறவை - விமர்சனம்




சின்ன விஷயத்துக்கு கூட பத்து பேரை வெட்டி சாய்க்கிற அப்பா, சித்தப்பா, அண்ணன் களைக் கொண்ட வசதியான வீட்டுப் பொண்ணு ஆத்மியா. அவங்க வீட்டு நேர் எதிர் வீட்டு பையன் சிவகார்த்திகேயன். அவங்க அப்பா (இளவரசு) ஆத்மியாவின் அப்பா கட்டும் புதிய பள்ளிக்கூடத்தின் கட்டிட கான்ட்ராக்டை எடுத்து செய்து கொண்டிருக்கிறார். மகன் சிவாவோ படிச்சுட்டு சில நேரங்களில் அப்பாவுக்கு உதவியா பல நேரங்களில் நண்பர்களுடன் வெட்டியா ஊரை சுத்தி வருகிறான். ஆத்மியாவும் சிவகார்த்திகேயனும் அன்புடன் பழகுகிறார்கள். திடீரென ஒரு வீச்சரிவா மீசை மாப்பிள்ளை வருகிறார். அவருக்கு ஆத்மியாவை நிச்சயம் பண்ணுகிறார்கள். இதைக் கேள்விப்பட்ட சிவா துடிதுடித்துப் போகிறான். தன் மனதில் இருக்கும் காதலை அவளிடம் சொல்கிறான். தனக்கு நிச்சயம் ஆனதை காரணம் காட்டி விலகிப் போகிறாள் அவள். அவளையே நினைத்து குடி மயக்கத்தில் புலம்பும் சிவாவை ஆத்மியாவுடன் சேர்த்து வைக்க முடிவு செய்யும் நண்பர்கள் ஆத்மியாவை மயக்கமடையச் செய்து இருவரையும் கடத்திக் கொண்டு போகிறார்கள். கண்விழித்த ஆத்மியாவோ தனக்கு சிவா மீது காதல் இல்லை என்கிறாள். அவனோ அவள் தனக்கு வேண்டாம்... என்கிறான். இந்நிலையில் ஆத்மியா வீட்டில் அவர்களை வலைவீசி தேடுகிறார்கள். தொடர்ந்து வரும் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் முடிவு என்ன என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள்.

மெரினா படத்திற்கு பிறகு முழு நீள கதாநாயகனாக வருகிறார் சிவகார்த்திகேயன். முதல் பாதியில் இவரை கலங்க விட்டிருக்கிறார்கள். அடுத்த பாதியில் இவர் களைகட்ட வைக்கிறார். இவருக்கு ஜோடியாக ஆத்மியா. பெரும்பாலும் சேலைகளிலேயே வருவதால் அம்மனாக ஜொலிக்கிறார். முதல் பாதியில் கேர் பண்ணாத இவருடைய நடிப்பு அடுத்த பாதியில்  ரொம்பவே ஸ்கோர் பண்ணுகிறார் ஆத்மியா.

சிவகார்த்திகேயனுக்கு நண்பர்களாக வருகிறார்கள் சூரி, சிங்கம்புலி வகையறா. சூரியும் சிங்கம் புலியும் கம்பெனி போட்டு அடிக்கிற லூட்டியில் தியேட்டர் அதிர்கிறது. இடைவேளையில் என்ட்ரி கொடுக்கும் சாம்சும் அவர் நண்பரும் வந்த பிறகு படம் விறுவிறுப்பாகவும் செம காமடியாகவும் நகர்கிறது. ஆத்மியாவையும் சிவகார்த்திகேயனையும் ஆத்மியாவின் அண்ணன் டீம் தேடும் போது சிங்கம் புலியையும் சூரியையும் அழைத்துக் கொண்டே போகும் இடமெல்லாம் செல்கிறார்கள். அவர்களிடம் வம்படியாக மாட்டிக் கொள்ளும் சாம்ஸ்... இந்த காட்சிகள் அரை நிமிடங்களுக்கு தொடர்ந்து வரும் காமெடியாக இருக்கிறது. டிங் டிங்... குத்துப்பாட்டு ஆட்டம் போட வைக்கிறது.

படத்தை இயக்கியிருக்கிறார் எழில். துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதைத் தொட்டு போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய எழில் இந்தப் படத்தின் மூலம் இணைத் தயாரிப்பாளராகவும் உருவெடுத்திருக்கிறார். காதல், காமெடி, கலாட்டா என வழக்கமான ஸ்டைல் கதை என்றாலும் இடைவேளை ட்விஸ்ட், மாறுபட்ட திரைக்கதை யுக்தியில் படத்தை வேறு பாதையில் பயணிக்க வைத்திருக்கிறார் எழில்.

01:55 by iamvenkatesh · 0

hotlinksin

குமுதத்திற்கு எதிராக வாசகர் வீசிய சாட்டை!




நாமக்கல் பள்ளிகளை பற்றி இந்த இதழ் குமுதத்தில் வந்துள்ள கட்டுரை பற்றி பேஸ்புக்கில் நண்பர் ஒருவர் சட்டையை வீசும் விதமாக தன் உள்ளத்தில் தோன்றியதை பகிர்ந்து இருந்தார். அதை உங்கள் பார்வைக்காக அறியத் தருகிறேன். 

Saravanan Poongavanam பூ.கொ.சரவணன்

நாமக்கல் பள்ளிகளை பற்றி இந்த இதழ் குமுதத்தில் வந்துள்ள கட்டுரை மனதை என்னவோ செய்கிறது !அதில் அவர்களின் ஆசிரியர்கள் உடன் தங்கி இருப்பத்தால் அவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுகிறார்கள் என்கிற மாதிரியான தோற்றம் ஏற்ப்பட்டு இருக்கிறது !ஆனால் உண்மை நிலை என்ன தெரியுமா ?இதன் வரலாறு என்ன தெரியுமா ?முதன்முதலில் வெறும் பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பள்ளியில் தொடங்குகிறது இதற்கான விதை !பதினோராம் வகுப்பை அரக்கபரக்க முடித்து விட்டு பிளஸ் டூ வகுப்பை ஆரம்பித்து அதில் பக்கம் பக்கமாக வரிக்கு வரி தேர்வெழுத வைத்து அதை மீண்டும் நான்கு முதல் ஐந்து திருப்புதல் தேர்வுகள் வைத்து ,நான்கு மணிநேரம் எழுத வேண்டிய வினாத்தாளை மூன்று மணி நேரத்தில் எழுத வைப்பது ,விடுமுறைகள் தராமல் இருப்பது,விளையாட விடாமல் இருப்பது என பல்வேறு வகையான கூறுகளோடு உச்சபட்சமாக அரசு நிர்ணயிக்கும் விலையை விட அதிகமான கட்டண வசூல் செய்தல் இவை அனைத்தையும் செய்து பப்ளிக்குக்கு பிள்ளைகளை அனுப்பி அவர்களை மாநில இடம் பெற்றவர்களாக ஆக்கி விட்டதாக கொக்கரிக்கும் இந்த அவலத்தை என்னவென்று சொல்வது !ரேசில் அரை நாள் முன்னமே ஓடி ஜெயிக்கிறார்கள் என்பது முதல் வருத்தம் !அடுத்தது இதைப்பற்றி பேச வேண்டிய பல படைப்பாளிகள் பேசுவதில்லை !இப்படிப்பட்ட முறையில் பிள்ளைகளை மிகப்பெரிய மன மட்டும் உடல் ரீதியான மன அழுத்ததிற்கு ஆளாகும் சூழலை ,ஒரு மிகப்பெரும் பொருளாதார சுரண்டலை நடுத்தர வர்க்கத்தின் மீது செலுத்தும் பள்ளிகளின் செயலை கண்டிக்க வேண்டிய பிரபலமான பதிப்பாளர்கள்,பத்திரிக்கையாளர்கள் ,எழுத்தாளர்கள்,பேச்சாளர்கள்,விமர்சகர்கள் ,படைப்பாளிகள் -பல பேர் இந்த பள்ளிகளின் விழாக்களில் பணம் வாங்கிக்கொண்டோ அல்லது விருது பெற்றோ கலந்துகொள்வது வருத்தத்தை தருகிறது !ஒரு வார்த்தை கூட இதைப்பற்றி பேசவே எழுதவோ இவர்கள் செய்வது இல்லை !தெரியாது எங்களுக்கு இதெல்லாம் என்றால் நல்ல நகைமுரண் தான் !இதைப்பற்றி தைரியமாக எழுதுங்கள் அய்யா !காரணம் இதோ வருகிற திங்கள் கிழமை ஒவ்வொரு பெற்றோரும் லட்சங்களை கட்டிக்கொண்டு கனவுகளோடு இந்தப்பள்ளிகளின் வாசலில் நிற்க நீங்கள் மறைமுக உதவி செய்து இருகிறீர்கள் !நல்ல வருவீங்க !

00:35 by iamvenkatesh · 0

hotlinksin