அவங்களுக்கு மட்டும் என்ன கொம்பா முளைச்சிருக்கு?



கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை கடற்கரை சாலையில் ஒரு ஆட்டோ டிரைவரும் பேருந்து ஓட்டுநரும் மோதிக் கொண்ட செய்தியை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஒருவேளை நீங்கள் அந்த செய்தியை அறிந்திருக்காவிட்டால் அதுக்காக ஒரு சின்ன இன்ட்ரொ.

சென்னை கடற்கரை சாலையில் ஆட்டோவில் தனது குடும்பத்துடன் போய்க்கொண்டிருக்கிறார் ஆட்டோ டிரைவர் ஒருவர். சென்னை மாநகர பேருந்து ஒன்று அந்த ஆட்டோவை முந்த முயற்சிக்கும் போது ஆட்டோவை உரசுவது போன்று வேகமாக வர, கடுப்பான ஆட்டோ ஓட்டுனர் ஆத்திரத்தில் பஸ் டிரைவரை திட்டுகிறார். இதனால் கோபமான பஸ் டிரைவர் பேருந்தை விட்டு கீழே இறங்கி வர இருவரும் திட்டி சண்டை போட்டுக் கொள்கிறார்கள். விஷயம் கேள்விப்பட்ட அந்த வழியாக வந்த மற்ற பேருந்து ஓட்டுநர்களும் பேருந்தை நிறுத்திவிட்டு களத்தில் குதிக்க ஒரு வழியாக ஸ்டிரைக் ஆரம்பமாகிறது. சற்று நேரத்தில் போலீஸ் வந்து ஆட்டோ டிரைவரை கைது செய்ய ஓட்டுநர்கள் கலைந்து சென்று வண்டியை எடுத்துக் கொண்டு போகிறார்கள்.

இது எப்போதாவது சென்னையில் நடந்து கொண்டே இருக்கும் சம்பவம்தான். ஆனால் இந்த ஓட்டுநர்கள் என்ற பூனைக்கு யார்தான் மணிகட்டுவது என்று தெரியவில்லை. ஆ... ஊ... என்றால் இவர்கள் வரிந்து கட்டிக் கொண்டு ஸ்டிரைக்கில் குதித்துவிடுகிறார்கள். அப்போது அந்த ஏரியாவே டிராபிக்கினால் ஸ்தம்பித்துப் போய்விடுகிறது. பேருந்தில் பயணம் செய்பவர்கள் ஆட்டோ, டூவீலர், கார் என எந்த வாகனத்தில் பயணம் செய்பவர்களாக இருந்தாலும் அந்த நேரத்தில் காத்திருக்க வேண்டியது கட்டாயமாகிறது.

சண்டை போட்டது ஆட்டோ டிரைவரும் பேருந்து ஓட்டுனரும். ஆனால், தண்டனை என்னவோ மற்ற மக்களுக்குதான். அந்த நேரத்தில் காத்திருக்கும் போது ஏற்படும் டென்ஷனில் முக்கால் வாசிபேருக்கு ஊரு உலகத்தில இல்லாத நோய் எல்லாம் வந்து சேர்ந்து விடும்.

இனிமேலும் இது போன்று கொம்பு முளைத்த பஸ் டிரைவர்கள் இப்படி ஏதாவது பிரச்சனை என்றால் வண்டியை ஓரம் கட்டிக் கொண்டு பேசித் தீர்த்துக் கொள்வதோ அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சியில் இறங்குவது நல்லது. அதைவிட்டு விட்டு எங்களுக்குத்தான் கொம்பு இருக்கே என்கிற பாணியில் பொது மக்களுக்கு இடையூறு செய்தால் எல்லா நேரமும் எல்லாரும் இது போன்று அமைதியாக போய்க்கொண்டிருப்பார்கள் என்று சொல்ல முடியாது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது வழக்கு தொடர்ந்தால் ஸ்டிரைக்கில் குதித்த அத்தனைபேருக்குமே ஆப்புதாண்டியோய்....
hotlinksin

4 comments:

  1. we the common people always suffer.we are afraid of these rowdies and hooligans. who will put an end to all these bad practices?

    ReplyDelete
  2. these people are irresponsible, someone should take action against these kind of people, the someone might be you or myself or anyone. this will be happen soon.

    ReplyDelete
  3. மிகவும் கண்டிக்க வேண்டிய ஒன்று...
    பேருந்து ஓட்டுனர்களுக்கு சங்கத்தில் இருக்கிறேகம் சங்கம் நம்மை காப்பாற்றும் என்ற திமிர்..

    வேறன்ன சொல்ல...

    ReplyDelete
  4. மனிதாபிமானத்தோடு சிந்திக்க மறக்கும் மனிதர்கள் எப்போது திருந்துவார்கள் .

    ReplyDelete