விஜயகாந்த் நீங்களா இப்படி? நம்பவே முடியலை...


பேரும் புகழும் கிடைத்துவிட்டாலே கடந்து வந்த பாதையை நம்மில் பலரும் ரொம்பவே எளிதாக மறந்து போய்விடுகிறோம். விஜயகாந்த் இதற்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருந்திருக்கிறார் என்றால் கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. விஜயகாந்தை வைத்து சூப்பர் டூப்பர் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனை. இவர் படங்களாலேயே திரையுலகில் விஜயகாந்த் பெரிதும் வளர்ந்தார் என்பது ஊரறிஞ்ச விஷயம். அப்படிப்பட்ட ஆர். சுந்தர்ராஜனையே மறந்து போனார் விஜயகாந்த்.

 ஆர். சுந்தர்ராஜனின் மகன் சமீபத்தில் சாலை விபத்து ஒன்றில் மரணமடைந்து விட்டார். இந்த சம்பவம் அறிந்த திரையுலைகைச் சேர்ந்தவர்களும் மற்ற நண்பர்களும் அவரைத் தேடி வந்து இது பற்றி விசாரித்த போது விஜயகாந்த் மட்டும் அவரை இதுவரை போனில் கூட தொடர்பு கொண்டு விசாரிக்கவில்லையாம். ‘என்னதான் பேரும் புகழும் வந்தாலும் அரசியலில் குதித்துவிட்டாலும் பழசை எல்லாம் அதற்குள் மறந்துவிடுவார்களா?’ என்று தனக்குத் தானே சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார் ஆர்.சுந்தர்ராஜன்
hotlinksin

0 Responses to “விஜயகாந்த் நீங்களா இப்படி? நம்பவே முடியலை...”

Post a Comment