சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த கிரான்ட் ஓப்பனிங்



சின்னத்திரையில் அறிமுகமாகி ஒரு ரவுண்டு வந்த சிவகார்த்திகேயனைக் கூப்பிட்டு பசங்க படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் தனது சொந்த படமான மெரினாவில் நடிக்க வைத்தார். மெரினா படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதற்கிடையில் சிவகார்த்திகேயனுக்கு பெரிய திரையில் நடிப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இவர் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் மரம் கொத்திப் பறவை. இந்த படத்தை வெற்றிப்பட இயக்குநர் எழில் இயக்கியிருக்கிறார். தனுஷின் 3 படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். வேறு சில இயக்குநர்களும் அவரை கதாநாயகனாக நடிக்க வைக்கும் முயற்சியில் களம் இறங்கியிருக்கிறார்கள்.
hotlinksin

0 Responses to “சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த கிரான்ட் ஓப்பனிங்”

Post a Comment