கூப்பிட்டு வெச்சு அசிங்கப்படுத்திட்டாங்க – பவர்ஸ்டார் சீனிவாசன்




கடந்த ஞாயிற்றுக்கிழமை விஜய் டிவியின் நீயா நானாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் பவர் ஸ்டார். இதில் கிறுக்குத் தனமான கேள்விகளையே தொடர்ந்து கோபிநாத் பவர்ஸ்டாரிடம் கேட்டுக் கொண்டே இருந்தார் கோபிநாத். இது நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த பலருக்கும் எரிச்சலை வரவழைத்தது. ஒரு கட்டத்தில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த இன்னொருவர் பவர் ஸ்டாரை பார்த்து ‘சினிமா அறிவு கொஞ்சம் கூட இல்லாமல் சினிமா எடுக்க நடிக்க வந்துவிட்டார்’ என்று பேசினார். கோபிநாத்தின் கேள்விகளும்… சிறப்பு விருந்தினரின் இந்த கமென்டும் பவர் ஸ்டாரை ரொம்பவே பாதித்திருந்தாலும் அதையெல்லாம் காட்டிக் கொள்ளாமல் பொறுமையாக ‘வாழ்க்கையில் எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது…’ என்று அமைதியாகவே பதில் அளித்தார். இந்த நிகழ்ச்சி ஒரு பக்கம் சர்ச்சைக்குரியதாக ஆகிவிட்ட போதிலும் பவர் ஸ்டாரின் மீது இருந்த மதிப்பை மேலும் அதிகரித்துவிட்டிருக்கிறது இந்த நீயா நானா நிகழ்ச்சி. இது குறித்து பவர் ஸ்டாரிடம் கேட்ட போது, ‘என்னை கூப்பிட்டு வெச்சு அசிங்கப்படுத்திட்டாங்க… இரவு நடைபெறும் நீயா நானா நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வரவேண்டும் என்று கூப்பிட்டிருந்தார்கள். நானும் ஆர்வத்துடன் பங்கு பெற போனேன். போன இடத்தில் என்னை அவமானப்படுத்தும் விதமாக கேள்விகளைக் கேட்டார் கோபிநாத். இன்னொருவர் நடிப்பு அறிவே இல்லாமல் நடிக்க வந்துவிட்டார் என்று பேசினார்… இந்த சம்பவம் என்னை வெகுவாக பாதித்துவிட்டது… இது போன்று மற்றவர்களை அவமானப்படுத்தும் விதமான கேள்விகளை கேட்பதை நிகழ்ச்சி நடத்துபவர்கள் விட்டுவிட வேண்டும்…’ என்கிறார் பவர் ஸ்டார் கொஞ்சம் வருத்தம் கலந்த ஆதங்கத்துடன்.
hotlinksin

0 Responses to “கூப்பிட்டு வெச்சு அசிங்கப்படுத்திட்டாங்க – பவர்ஸ்டார் சீனிவாசன்”

Post a Comment