நீயா நானா - பவர் ஸ்டாரை கடுப்பாக்கிய கோபிநாத்




நேற்றைய நீயா நானாவில், போலி கவுரவத்தை விரும்புகிறவர்கள் அதை விரும்பாதவர்கள் என இரு பிரிவாக மோதிக் கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் பவர் ஸ்டார் சீனிவாசன். அவரிடம் சில கேள்விகள் கேட்பதாக ஆரம்பித்த கோபிநாத் ஒரே கேள்வியைத் திரும்பத் திரும்ப கேட்டார். அதுவும் பவர் ஸ்டார் போலி கவுரவத்தை விரும்புகிறவர் என்கிற ரீதியில். நடுத்தர குடும்பத்தின் மக்களே போலி கவுரவத்திற்காக பல செயல்களைச் செய்து கொண்டிருக்கும் போது பவர் ஸ்டார் ஒரு சினிமா நடிகர் போலி கவுரவத்தை மெயின்டெயின் செய்வதில் தவறு ஒன்றும் இல்லையே. 

‘எந்த ஒரு பேட்டியிலும் சரி நீங்கள் ஏன் சீரியசாக இருப்பதில்லை... எல்லா விஷயங்களையும் ஏன் நீங்கள் காமெடியாக... சீரியஸ் இல்லாமல் எடுத்துக் கொள்கிறீர்கள்...?’ என்பதுதான் கோபிநாத் அவரிடம் தொடர்ந்து பல முறை கேட்ட கேள்வி. இதே கேள்வியை கோபிநாத் மீண்டும் மீண்டும் கேட்ட போதும் பவர் ஸ்டார் சீனிவாசன் ‘ஒருவர் எல்லா விஷயங்களையும் சீரியசாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டுமா...? காமெடியாக எடுத்துக் கொள்ளக் கூடாதா...?’ என்னும் பதிலை திரும்ப கோபிநாத்தைப் பார்த்து வைத்தார். அதற்கு கோபிநாத்தோ உங்கள் நிஜ முகத்தை வெளிக் கொண்டு வருவதற்காகத்தான் நான் அப்படி திரும்ப திரும்ப கேட்டேன் என்றார்.

கோபிநாத் உண்மை முகத்தை கொண்டு வருகிறாரோ இல்லையோ தொடர்ந்து இதே கேள்வியை அப்படிக் கேட்பது ஒருவரை குற்றவாளி மனநிலையில் நிச்சயம் தள்ளிவிடும். அது மட்டுமின்றி வழக்கறிஞரைப் போன்று குறுக்கு கேள்வி கேட்பது கோபிநாத்துக்கு ஆதரவாக இருக்காமல் நிகழ்ச்சி மேலேயே வெறுப்பு வர வைத்துவிடும் வாய்ப்பு உள்ளது.

பவர் ஸ்டாரிடம் என்று இல்லை.. பேச வருபவர்களிடமும் சில நேரங்களில் இது போன்று கேட்டு அவர்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்திவிடுவதும் உண்டு.

நல்ல வேளை கோபிநாத் கேட்ட கேள்விகளுக்கு உள்ளே கோபம் இருந்தாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் சமாளித்துக் கொண்டே பதில் சொன்னார் பவர் ஸ்டார்.
hotlinksin

0 Responses to “நீயா நானா - பவர் ஸ்டாரை கடுப்பாக்கிய கோபிநாத்”

Post a Comment