கேபிள் சங்கரின் ‘ஈகோ’




கலகலப்பு படத்திற்கு உதவி வசனகர்த்தாவாக பணியாற்றினார் கேபிள் சங்கர். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஏகப்பட்ட படங்களுக்கு வசனம் எழுத வாய்ப்புகள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. வந்த வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுக் கொள்ளாமல் கதை பிடித்திருந்தால் மட்டுமே வசனம் எழுத ஒப்புக் கொள்ளும் கேபிள்சங்கர் இப்போது ஈகோ என்னும் படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார். ஈஸ்வர் கோமதி என்னும் பெயர்களின் சுருக்கமான ஈகோ என்பதையே படத்தின் டைட்டிலாக வைத்திருக்கிறார்கள். நகுலை வைத்து கந்தக் கோட்டை படத்தை இயக்கிய சக்திவேல்தான் ஈகோ படத்தை இயக்குகிறார். புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தின் கதையை சக்திவேல் சொன்ன போது கேபிள்சங்கருக்கு கதை ரொம்பவே பிடித்துப் போய்விட்டதாம். இவரது வசனங்கள் இயக்குநர் சக்திவேலுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டதாம். ஈகோ படத்திற்குப் பிறகு முன்னணி வசனகர்த்தாக்களின் வரிசையில் கேபிள் சங்கர் இடம் பிடிப்பார் என்பதில் சந்தேகமேயில்லை என்கிறார்கள் ஈகோ பட டீமினர்.
hotlinksin

0 Responses to “கேபிள் சங்கரின் ‘ஈகோ’”

Post a Comment