அட... அந்தமாதிரி படத்தில் அமலாபாலா?
சாமி இயக்கத்தில் வெளியான சிந்து சமவெளி படத்தில் சர்ச்சைக்குரிய வேடத்தில் நடித்திருந்தார் அமலாபால். இந்த படத்திற்கு ரசிகர்கள், பத்திரிகையாளர்கள், சமூக அமைப்பினர் என பல இடங்களில் இருந்தும் சரமாரியான கண்டனங்கள் வந்து குவிந்தன. இந்த படத்திற்குப் பிறகு கொஞ்சகாலம் திரைமறைவு வாழ்க்கையே நடத்தி வந்தார் அமலாபால். அதன் பிறகு மைனா படத்தில் அவர் நடித்து இன்று முன்னணி நடிகைகள் வரிசையில் இடமும் பிடித்துவிட்டார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் தான் நடித்ததிலேயே மிகவும் பிடித்தது சிந்துசமவெளி படம்தான். அந்த படத்தை மீண்டும் யாராவது எடுக்க ஆரம்பித்தால் அதில் நான் நிச்சயம் நடிப்பேன்... என்று சொல்லியிருந்தார் அமலாபால். இதைத் தொடர்ந்து அமலாபாலுக்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ். நான் நீ என ஏகப்பட்ட புதுமுக இயக்குநர்கள் ஒரு மாதிரியான கதையுடன் அமலாபாலை சந்திக்க முயன்று வருகிறார்களாம். விரைவில் சிந்துசமவெளி பாகம் 2 படத்தில் அமலாபால் தோன்றி ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுக்கப் போகிறார் என்பதில் சந்தேகமில்லை.
11:26 by iamvenkatesh · 0
மெரினா - சர்ச்சையை உருவாக்குமா?
பாண்டிராஜ் இயக்கி தயாரித்திருக்கும் மெரினா திரைப்படம் பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாக உள்ளது. முழுக்க முழுக்க மெரினாவில் படம் பிடிக்கப்பட்டிருக்கும் இந்த படம் மெரினாவில் நடக்கும் சின்னஞ்சிறு விஷயங்கள் முதல் பெரிய விஷயங்கள் வரைக்கும் பதிவு செய்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனும் அவருக்கு ஜோடியாக ஓவியாவும் நடித்துள்ளனர். கடந்த சில நாட்களாக தொலைக்காட்சியில் இந்த படத்தின் விளம்பரம் தொடர்ந்து ஒளிபரப்பப்பட படத்திற்கான எதிர்பார்ப்பு சற்றே அதிகரித்துள்ளது. பாண்டிராஜ் இயக்கம், சிவகார்த்திகேயனின் முதல் அறிமுகப்படம், தொடர் விளம்பரங்கள் இப்படி மெரினா படம் பல வகைகளில் நம் கவனத்தை ஈர்த்துள்ளது. மெரினாவில் சர்ச்சைக்குரிய விஷயங்களான அரவாணிகள் மெரினாவில் சுற்றிவருவது மற்றும் மெரினாவின் மறைவான இடங்களில் நடக்கும் இன்ன பிற விஷயங்களும் படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மெரினா படம் மெரினாவின் இன்னொரு முகத்தை பிரதிபலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
00:43 by iamvenkatesh · 0
பகல்கொள்ளையடிக்கும் சினிமா சங்கங்கள் - சேரன் அதிரடி

“சமூகத்தின்
ஏற்றத் தாழ்வுகளை - பாரபட்சமான பொருளாதார நிலைமைகளை மாற்றியமைத்து
உழைப்போர் சுரண்டப்படுவதைத் தடுக்க வேண்டும்” என்ற பெருநோக்கில் ‘உலகத்
தொழிலாளர்களே.. ஒன்று கூடுங்கள்..” என்று சமூக மாற்றத்திற்கான விஞ்ஞானத்தை
விதைத்தவர் மார்க்ஸ். சமூக மறுமலர்ச்சிக்கு, புதிய தலைமுறையின்
விடியலுக்கான அந்தப் பாதையில் விளைந்தது தான் தொழிற்சங்கங்களும், தொழிலாளர்
அமைப்புகளும். பாடுபடும்
தொழிலாளர்களுக்கு நியாயமான, நேர்மையான ஊதியத்தைக் கொடுக்க வேண்டும்
என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், நியாயமான,
நேர்மையான ஊதியம் எது? என்பதில் தான் இப்போது தயாரிப்பாளர் சங்கத்திற்கும் -
தொழிலாளர் சம்மேளனத்திற்கும் இடையே ஏற்பட்டிருக்கும் பிரச்னை. திரைப்படத்
தொழிலாளர் சம்மேளம் முன்வைக்கும் ஊதிய உயர்வை, தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஏன்?
‘லாபத்தில்
பங்கு’ என்பது தான் நியாயம். தொழிலாளர்களைச் சுரண்டி முதலாளிகள்
கொழுத்துத் திரிய, தொழிலாளர்களோ, கஷ்டத்திலும், வறுமையிலும்
வாடிச்செத்ததைக் கண்டுதான் சோஷலிசம் - கம்யூனிசமாக உருப்பெற்றது.
மிகப்பெரும் லாபமீட்டும் முதலாளிகள், தொழிலாளர்களுக்கு மிகச்சொற்பத் தொகையை
ஊதியமாகக் கொடுத்தால், அதை எதிர்க்கும் முதலணியில் முதல் ஆளாக நிற்பது என்
கடமையும், உரிமையும்.
இன்றைய
இந்தியா முதலாளிகளின் கைப்பாவையாகத்தான் இருக்கிறது. பன்னாட்டு, உள்நாட்டு
முதலாளிகளின் ஊதுகுழலாகத்தான் சமூகத்தின் ஒட்டு மொத்த அமைப்பும்
விளங்குகிறது. தொழிலாளிகள் அற்ப - சொற்ப சம்பளத்துக்கு தங்களது
வியர்வையையும், உதிரத்தையும் சிந்தி முதலாளிகளை, பெரு முதலாளிகளாகவும்,
பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும் ஆக்கிக் கொண்டிருக்கின்றனர்.
கண்டிப்பாக இது மாற வேண்டும்.
கடந்த
ஐந்தாண்டுகளில் புற்றீசல் போல பெருகி நிறைந்திருக்கும் அயல்நாட்டு
நிறுவனங்களுக்கு இன்றைய நம் வாழ்க்கையை அடகு வைத்துக் கொண்டிருக்கிறோம்.
நாம் என்ன சாப்பிட வேண்டும்? என்ன குடிக்க வேண்டும்? எப்போது தூங்க
வேண்டும்? எங்கு வசிக்க வேண்டும்? என்று சகலத்தையும் பன்னாட்டு நிறுவனங்களே
தீர்மானித்துக் கொண்டிருக்கின்றன. அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள்
குறைந்த ஊதியம் பெற்றுக் கொண்டு உழைக்க, அவர்களோ கொள்ளை லாபத்தில் கொழிக்கிறார்கள். இதெல்லாம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
ஆனால்,
இன்றைய திரைப்படத்துறை குறிப்பாகத் தமிழ் சினிமா என்ன நிலைமையில்
இருக்கிறது? திரைப்படத் தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் லாபம்
சம்பாதித்துக் கொண்டு, தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியத்தைக்
கொடுக்கிறார்களா? பெருவாரியான லாபத்தை எடுத்துப் பதுக்கி வைக்கிறார்களா?
கோடிகளில் புரள்கிறார்களா? என்ற கேள்விகளுக்கு, ஒரே பதில்.. இல்லை!
என்பதுதான்.
முன்னொரு
காலத்தில் தமிழ் சினிமா ஆரோக்யமானதாக இருந்தது. திரையரங்கு உரிமையாளர்கள்,
திரைப்பட வினியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் என்று அத்தனை பேரும் லாபம்
சம்பாதித்துக் கொண்டிருந்தனர். சினிமாப்படம் தயாரிக்க நான், நீ என்று
ஆளாளுக்கு ஓடி வந்தனர்.
ஆனால் இன்றென்ன நிலைமை?
ஏராளமான
திரையரங்குகள் திருமண மண்டபங்களாகவும், கொடவுன்களாகவும், வர்த்தக
நிறுவனங்களாகவும் மாறி விட்டன. திரையரங்குக்கு உரிமையாளராக ஆக வேண்டும்
என்ற நிலைமை மாறி, இருக்கிற தியேட்டரை விற்றால் போதும் என்றிருக்கிறது.
திரைப்படங்களை வாங்கி, விற்கும் வினியோகஸ்தர்களும் அருகி விட்டனர். சரி..
திரைப்படங்களைத் தயாரிக்கவாவது யாரேனும் வருகிறார்களா என்றால், அதுவும் இல்லை.
பல
முன்னணித் தயாரிப்பாளர்கள் திரைப்படம் எடுப்பதையே கைவிட்டு விட்டு அஞ்சிக்
கொண்டிருக்கின்றனர். படமெடுக்கும் மிகக் குறைந்த சிலரும், நஷ்டத்தை
மட்டுமே சம்பாதிக்கின்றனர். கடந்த ஆண்டில் முதல் படத்தைத் தயாரித்த எத்தனை
தயாரிப்பாளர்கள் மீண்டும் தயாரித்தார்கள்?
அப்படித்
தயாரித்த எத்தனை தயாரிப்பாளர்கள் வெற்றியை அல்லது லாபத்தைக் கண்டார்கள்?
கடந்த ஆண்டில் புதிதாகத் துவங்கப்பட்ட திரையரங்குகள் எத்தனை? என்று
கணக்கெடுத்தாலே போதும், இதற்கெல்லாம் நமக்கு விடை கிடைத்து விடும்.
புவி வெப்பமயமாதல் அதிகரித்து, μசோன் மண்டலத்தில் துளை பெரிதாகிக்
கொண்டிருப்பதைப் போல இன்னொரு உண்மை; தமிழ் சினிமா நசிந்து கொண்டிருக்கிறது.
கோமாஸ்டேஜுக்கு சென்று கொண்டிருக்கிறது. திருட்டு வி.சி.டி.,க்கள்
தொடங்கி, சாட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை, வினியோக உரிமை என்று சகல
விஷயங்களிலும் ஒவ்வொரு தயாரிப்பாளரும் நசுக்கப்பட்டு, செத்துப் பிழைத்துக்
கொண்டிருக்கின்றனர். தற்கொலை முயற்சிக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப்பட்டுக்
கொண்டிருக்கின்றனர்.
இன்றைக்கு
ஒரு சினிமாவைத் தயாரிப்பது லாபமான செயலா? என்று ஒரு குழந்தையைக் கேட்டால்
கூட அது மறுத்து விடும். ஒரு ஆண்டில் ஏறத்தாழ நூறு திரைப்படங்கள்
வெளியாகின்றன. அதிகபட்சம் பத்து படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் இதே நிலைமைதான். அதாவது, ஒவ்வொரு ஆண்டும் தொன்னூறு சதவீத
தயாரிப்பாளர்கள் தங்களது வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கின்றனர். மேலும்,
வெளியாகும் நூறு படங்களில் தொன்னூறு சதவீத படங்கள் சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்கள் தான். பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, பெரிய அளவில்
லாபம் சம்பாதிக்கும் படங்கள் பத்து சதவீதத்திற்கும் குறைவுதான். லாபத்தில்
தானே பங்கு கொடுக்க முடியும்? நஷ்டத்தில் பங்கேற்க யாரும் தயாராக இல்லை.
ஒரு படம் தோல்வியடைந்து விட்டது; போட்ட பணத்தை எடுக்க முடியவில்லை என்று
கூறி கொடுத்த சம்பளத்தைத் திருப்பிக் கேட்க முடியுமா?
அதாவது, சினிமா -
மற்றைய தொழில்களைப் போலல்லாது ஒரு சூதாட்டமாகிவிட்ட இன்றைய சூழலில்
தொழிலாளர்கள் தங்களது சம்பளத்தை நூறு சதவீதம் உயர்த்திக் கேட்பது எந்த
நியாயம்?
தமிழ்நாடு
திரைப்படத் தயாரிப்பாளர் சம்மேளனத்தில் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள்
சங்கமும், தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கமும் அங்கம்
வகிக்கின்றன. தற்போதைய தொழிலாளர் விதிப்படி மேற்படி சங்கங்களைச்
சேர்ந்தவர்களும் ஒரு நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தையே பெற வேண்டும். ஆனால்,
எதார்த்தம் என்ன? ஒரு படம் μடினால் மட்டுமே ஒரு இயக்குனர் தன்னுடைய
சம்பளத்தை உயர்த்திக் கொள்ள முடியும். ஒளிப்பதிவாளர்களும், படத்தின்
பட்ஜெட்டிற்கேற்ப மட்டுமே சம்பளத்தை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு
பெரிய பட்ஜெட் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ஒருவர், அடுத்ததாக சிறிய
பட்ஜெட் படத்தில் பணியாற்ற நேர்ந்தால், தன்னுடைய சம்பளத்தைக்
குறைத்துத்தான் வாங்குகிறார். இந்த நியாய, தர்மங்கள் - தொழிலாளர்களுக்கும்
பொருந்த வேண்டும் அல்லவா!
நூறு
கோடி, ஐம்பது கோடியில் எடுக்கப்படும் பெரிய பட்ஜெட் படங்களாக இருந்தாலும்
சரி.. ஒரு கோடி, இரண்டு கோடிகளில் எடுக்கப்படும் சிறிய பட்ஜெட் படமாக
இருந்தாலும் சரி.. அவர்களுக்கு ஒரே ஊதியம் தான். எடுக்கப்படும் பெரிய
பட்ஜெட் படங்களோ பத்து சதவீதம் தான். இது பாரபட்சமான அணுகுமுறை. பெரிய
பட்ஜெட் படங்களில் தொழிலாளர்கள் சம்பளத்தை உயர்த்தி வாங்கிக் கொள்ளட்டும்.
அதுபோல, சிறிய பட்ஜெட் படங்களில் அவர்கள் தங்களது சம்பளத்தைக் குறைத்து
வாங்கிக் கொள்ளட்டும் என்பதுதான் ஒரு இயக்குனராக, ஒரு தயாரிப்பாளராக நான் முன் வைக்கும் கருத்து.
சினிமா
நலிந்து வரும் இன்றைய காலகட்டத்தில் அதை மேலும் நலியச்செய்து
திரைப்படங்களைத் தயாரிக்கவே யாரும் முன்வராத ஒரு சூழலை திரைப்படத்
தொழிலார்களே ஏன் செய்ய வேண்டும்? திரைப்படம் எடுக்காத ஊரில் அவர்கள் என்ன
வேலை செய்ய முடியும்? இன்றைக்கு ஒரு சிறிய பட்ஜெட் படத்தை ஒருவர்
தயாரித்தால், பட்ஜெட்டில் பாதியைத் தொழிலாளர்களுக்குத் தான்
தரவேண்டியிருக்கிறது. அதாவது, ஐம்பது லட்சத்தில் எடுத்து முடிக்க வேண்டிய
ஒரு படத்தை, தொழிலாளர் சம்மேளன விதிகளுக்கு உட்பட்டு எடுத்தால் ஒரு கோடி
ரூபாயில் தான் முடிக்க முடியும். அத்தனை நெருக்கடிகளை, சட்ட விதிகளை
சம்மேளனம் முன்வைக்கிறது.
அதாவது,
படத்துக்கு தேவைப்பட்டாலும், படாவிட்டாலும் ·பெப்சியின் 24 துறைகளைச்
சேர்ந்த அனைவரையும் வேலைக்கு வைக்க வேண்டும். குறைந்தது இத்தனை பேரை
வேலைக்கு வைக்க வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுகிறது. இப்படி காசு
கொடுத்து தயாரிப்பாளர்கள் அழைத்து வரும் தொழிலாளர்கள், படப்பிடிப்பில்
ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இது தான் நியாயமா? இதுதான் தொழில்
தர்மமா? வேலைக்கே ஆள் தேவைப்படாத போது, வேலைக்கு ஆள் வைக்கக்
கட்டாயப்படுத்தி, அவர்களுக்குச் சம்பளம் வாங்கித்தருவது வழிப்பறிக்
கொள்ளையாகத் தெரியவில்லையா?
தெரிந்தே
நசுக்கும் இதுமாதிரியான சட்டங்கள், தயாரிப்பாளர்களை மட்டுமல்ல,
படைப்பாளியான இயக்குனர்களையும் விட்டுவிடுவதில்லை. அவர்களுடைய சிந்தனைக்கு
இடையூறு செய்வதின் மூலம், படத்தின் தன்மையும் பாதிக்கப்படுகிறது. ‘என்னிடம்
இருக்கும் ஒரு ஐம்பது லட்சத்தில் ஒரு திரைப்படம் எடுத்து விட முடியும்,’
என்று எந்த இயக்குனரும் நினைக்க முடியாது.
பெப்ஸி
தொழிலாளர்களை வைத்து பணிசெய்யாவிட்டால், அந்தப் படமே திரைக்கு வரமுடியாது.
இதுபோன்ற நெருக்கடிகளால், ஏகாதிபத்தியச் சிந்தனைகளால் தமிழ்த்
திரையுலகமும், தமிழ் சினிமா ரசிகர்களும் இழந்து விட்ட சிறந்த படைப்புகள்
ஏராளம்.. சிறந்த இயக்குனர்கள் ஏராளம். சினிமாவின் காட்சித்தன்மை இன்று
மாறிவிட்டது. திரையரங்கிற்குச் சென்று மட்டுமே ஒரு திரைப்படத்தைப் பார்க்க
வேண்டும் என்ற நிலைமை இன்று இல்லை.
டிஜிட்டல்
சினிமா விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. ஒரு லட்ச ரூபாய்க்கும் குறைந்த
செலவில் டிஜிட்டல் கேமராவை வாங்கிவிட்டால் யார் வேண்டுமானாலும், படத்தை
எடுத்துவிட முடியும். தொழிலாளர் நலன் என்ற போர்வையில் நிலவும்
ஏகாதிபத்தியச் சட்டங்கள் ஒழிந்து விட்டால், ஆண்டொன்றுக்கு ஆயிரம் படங்கள்
வெளியாகும். அதில் ஐந்நூறுக்கும் மேற்பட்டவை வெற்றி பெறும். அப்படி ஒரு
சூழல் உருவாகும் போது, இப்போது சம்மேளனத்தில் இருக்கும் அனைத்து
உறுப்பினர்களுக்கும் தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைக்கவும்
வாய்ப்பிருக்கிறது.
திறமை
இருந்து, தொழில்நுட்பம் தெரிந்திருந்தால் சில லட்சங்களில் ஒரு
திரைப்படத்தை யார் வேண்டுமானாலும் தயாரிக்கலாம். ஆனால், அதுவே, ·பெப்ஸி
சட்ட - திட்டங்களுக்கு உட்பட்டு படமெடுக்க வேண்டுமென்றால் அது ஒரு கோடி
ரூபாய்க்குச் சற்றும் குறையாது. இது போன்ற எதேச்சதிகார, எதார்த்த
நிலைமைகளுக்கு முற்றிலும் மாறான, தமிழ்த்திரையில் பல நல்ல படைப்புகளும்,
இயக்குனர்களும் உருப்பெற்று விடாமல் தடுக்கும் அரண்களைத் தகர்க்க வேண்டிய
நேரமிது!.
படைப்பாளிகளையும்,
படைப்புகளையும் சிறை வைக்காதீர்கள். சினிமாவை ஒரு குடத்தில் மூடி
வைக்காதீர்கள். அதைத் எல்லோருக்கும் திறந்து விடுங்கள். அது கங்கையாகப்
பெருகி ஓடும். தேசத்தின் தாகத்தைத் தீர்க்கும். உலகெங்கும் தமிழகத்தைத்
திரும்பிப் பார்க்கும். தமிழ் சினிமா பீடுநடை போட்டு, இழந்த பெருமையை
மீட்டெடுக்கும்.
இயக்குனர் சேரன்,
(எந்த நிலையிலும் ஒரு இயக்குனராக - என்றும் கனவுகளோடும் வாழும் தொழிலாளி)
(எந்த நிலையிலும் ஒரு இயக்குனராக - என்றும் கனவுகளோடும் வாழும் தொழிலாளி)
-------------------------------------------------------------------------------------
நண்பர்களே... http://www.hotlinksin.com திரட்டி இணையதளத்தில் இணைந்துவிட்டீர்களா...?
-------------------------------------------------------------------------------------
15:05 by iamvenkatesh · 0
நடிகையை வலைவீசி தேடும் இயக்குநர் - பரபரப்பான காரணங்கள்
சமீபத்தில் பாவி என்னும் தலைப்பில் கில்மா படம் ஒன்று வெளியானது. ஆங்காங்கே ஒன்றிரண்டு தியேட்டர்களில் மட்டுமே இந்த படம் ரிலீஸ் ஆகியிருந்தது. ரிலீஸ் ஆன இடங்களில் எல்லாம் நல்ல வசூலை வாரிக் குவித்திருந்தது இந்த படம். இந்த படத்தில் நான்கைந்து நடிகைகள் நடித்திருந்தார்கள். இதில் ஒரு நடிகை மட்டும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார். மற்ற நடிகைகள் எல்லாம் சுமார் ரகம்தான்.
பாவி படத்தில் இந்த அழகான நடிகை நன்றாகவே தன் திறமையைக் காட்டியிருந்தார். இந்த படத்தைப் பார்த்த மீடியாவில் பணியாற்றும் நபர் ஒருவர் தன் நண்பரான முன்னணி இயக்குநருக்கு போனைப் போட்டு, ‘பாவி படத்தில் அந்த பொண்ணு நடிப்பைப் பாரு... சும்மா பிச்சு உதறியிருக்கு... ஏன் இந்த பொண்ணு இப்படி ஒரு கிளாமர் படத்தில் நடிச்சுது? கூப்பிட்டு உன் படத்தில ஒரு நல்ல கேரக்டர் கொடுப்பா...’ என்று சொல்லியிருக்கிறார்.
உடனே தன் உதவியாளர்களிடம் சொல்லி பாவி படத்தின் டிவிடி கிடைக்குமா என்று அலசி வரச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். டிவிடி கிடைக்காமல் வெறுங்கையுடன் திரும்பி வந்திருக்கிறார்கள் இயக்குரின் உதவியாளர்கள். அந்த படத்தின் டிரைலர் மற்றும் ஸ்டில்ஸ்களையாவது பார்க்கலாம் என்று கூகிளில் தேடி ஒரு வழியாக நடிகையின் படத்தைப் பார்த்திருக்கிறார்.
பார்த்ததுமே தனது அடுத்த படத்தில் நடிகையை பயன்படுத்திக் கொள்வது என்று முடிவு செய்த இயக்குநர் தன் உதவியாளர்களிடம் அந்த நடிகையிடம் தனது அடுத்த படத்தில் நடிக்க முடியுமா என்று கேட்க சொல்லியிருக்கிறார். உதவியாளர்களோ உடனே பாவி படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு போன் பண்ணியிருக்கிறார்கள். விஷயத்தை அவர்களிடம் சொன்ன போது தொடர்பு எண்ணை தர மறுத்துவிட்டார்களாம் அவர்கள்.
பின்பு, ‘எங்களிடம் அவங்க எண் இல்லை... அவங்க போன் நம்பரை மாற்றிவிட்டார்கள்...’ என்று மாற்றி மாற்றி சொல்லியிருக்கிறார்கள். வெறுத்துப் போன உதவி இயக்குநர்களோ, ‘சரி... அந்த நடிகை உங்களைத் தொடர்பு கொண்டால், உடனே எங்களைத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள்...’ என்று சொல்லி இயக்குநரின் மொபைல் எண்ணைக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்கள். அன்றிலிருந்து சுமார் ஒரு மாதமாக அந்த நடிகையை தேடிக் கொண்டுதான் இருக்கிறார் அந்த முன்னணி இயக்குநர்.
கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாம போச்சுன்னு சொல்வாங்களே... அது இதுதானோ...!
------------------------------------------------------------------------------------------
என்ன நண்பர்களே... http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைந்துவிட்டீர்களா? இல்லையெனில் உடனே இணைந்திடுங்கள். உங்கள் பதிவுகளுக்கு ஏராளமான ஹிட்ஸ்களை பெற்றிடுங்கள்.
-------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------
என்ன நண்பர்களே... http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைந்துவிட்டீர்களா? இல்லையெனில் உடனே இணைந்திடுங்கள். உங்கள் பதிவுகளுக்கு ஏராளமான ஹிட்ஸ்களை பெற்றிடுங்கள்.
-------------------------------------------------------------------------------------------
00:53 by iamvenkatesh · 0
நான் ரசித்த விளம்பரம்
இந்த விளம்பரத்தை பார்க்கும் போது கொஞ்சம் காமெடியாகத்தான் இருக்கிறது. எம்.எஸ். பாஸ்ககரும் லொள்ளுசபா சாமிநாதனும் அதற்கு காரணமாக இருக்கலாம். இந்த விளம்பரம் எனக்கு ரொம்பவே பிடிக்கக் காரணம் நிச்சயமா அந்த பொண்ணுதான். என்ன ஒரு க்யுட். எம்.எஸ். பாஸ்கர், தம்பி, ‘ஷு வாங்கும் போது கிடைக்கிற பேக்கை கோகிகிட்ட கொடுத்திடு’ என்று சொல்லும் போது அந்த பொண்ணு முகத்தை ஒரு மாதிரி இழுத்துட்டு பண்ணுதே...சே... என்ன ஒரு அழகு. அப்புறம், ‘வரன் தேடுறதுதான்டி முதல் செலவு, முக்கியமான செலவு...’ என்று எம்.எஸ். பாஸ்கர் சொன்னவுடனேயே அந்த பொண்ணு அப்படியே தலையை குனிகிறதே... அடடா இதுதான் நாணம் என்பதோ... செம பீல் பண்ணின நடிப்பு. இந்த இரண்டு காட்சிகளுக்காவுமே எப்ப வேண்டுமானாலும் இந்த விளம்பரத்தைப் பார்த்துட்டே இருக்கலாம் போல தோணுது...
என்ன நண்பர்களே... http://www.hotlinksin.com/ ல் உங்கள் பதிவுகளை இணைத்துவிட்டீர்களா...?
15:54 by iamvenkatesh · 0
நடிகை சங்கவிக்கு விரைவில் திருமணம்
அமராவதி என்னும் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சங்கவி. அதன்பிறகு விஜய்யின் ஆஸ்தான நாயகியாக திகழ்ந்தார் சங்கவி. சங்கவியும் விஜய்யும் இணைந்து ரசிகன், விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை போன்ற சில படங்களில் நடித்தனர். இந்த படங்களில் சில காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டன. ஒரு காலகட்டத்தில் முன்னணி நாயகியாக திகழ்ந்த சங்கவி பின்பு வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் சினிமாவில் இருந்து மெல்ல மெல்ல ஒதுங்கினார். இப்போது சங்கவிக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த மருத்துவரை திருமணம் செய்ய உள்ளார் சங்கவி. இவர்களது திருமணம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது.
பதிவர்களே... http://www.hotlinksin.com/ ல் உங்கள் பதிவுகளை இணைத்துவிட்டீர்களா...
பதிவர்களே... http://www.hotlinksin.com/ ல் உங்கள் பதிவுகளை இணைத்துவிட்டீர்களா...
15:19 by iamvenkatesh · 0
பாரதிராஜா படத்திலிருந்து அமீர் நீக்கம்
பாரதிராஜாவின்
கனவுப்படம்தான் அன்னக்கொடியும் கொடிவீரனும். இந்தப் படத்திற்கு பிரமாண்டமான
முறையில் தனது சொந்த ஊரிலேயே பட பூஜையும் நடத்தினார் பாரதிராஜா. அமீர்
இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க இனியாவும், கார்த்திகாவும் கதாநாயகிகளாக
நடிக்கிறார்கள். படப்பிடிப்பு துவங்கி நடந்து வந்த நிலையில் முல்லைப்
பெரியாறு பிரச்சினை பூதாகரமாக வெடிக்க படப்பிடிப்புக்கு கொஞ்ச நாளைக்கு
பேக்அப் சொன்னார்கள். இப்போது படப்பிடிப்பை மீண்டும் தொடரலாம் என்றால்
மீண்டும் தடைபட்டு நிற்கிறது அன்னக்கொடியும் கொடிவீரனும். இதற்கு காரணம்
அமீர் என்கிறார்கள். அமீரை படத்தில் இருந்து நீக்கிவிட்டதாகவும் அவருக்கு
பதிலாக புதுமுகம் ஒருவரை நடிக்க வைக்கப் போகிறார்களாம்.
பதிவர்களே... http://www.hotlinksin.com/ ல் உங்கள் பதிவுகளை இணைத்துவிட்டீர்களா...
பதிவர்களே... http://www.hotlinksin.com/ ல் உங்கள் பதிவுகளை இணைத்துவிட்டீர்களா...
11:11 by iamvenkatesh · 0
அந்த மாதிரி காட்சியில் சரண்யா - அதிரவைக்கும் பின்னணி
சமீபகாலமாக கோலிவுட்டில் ஒரே பரபரப்பு. என்ன... அந்த நடிகை நிர்வாணமாக நடித்துள்ளாராமே... என்ற பேச்சுதான் மீடியாக்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் காரணம் காதல், பேராண்மை படங்களில் நடித்த சரண்யா மழைக்காலம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் நிர்வாண காட்சியில் சரண்யா நடித்திருக்கிறார் என்ற செய்தி எங்கும் பரவிக் கிடக்கிறது. இதற்காக சரண்யாவுக்கு பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டது என்ற செய்தியும் உலா வந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில், சரண்யா நிர்வாணமாக போஸ் கொடுக்கவில்லை, படத்தின் பப்ளிசிட்டிக்காக திட்டமிட்டு இப்படி ஒரு செய்தியை கிளப்பி விட்டிருக்கிறார்கள் என்னும் செய்தியும் இப்போது மெல்ல கசிய ஆரம்பித்திருக்கிறது.
பதிவர்களே... http://www.hotlinksin.com/ ல் உங்கள் பதிவுகளை இணைத்துவிட்டீர்களா...
01:00 by iamvenkatesh · 0
கிசுகிசுவை விரும்பும் வித்தியாசமான நடிகை
கொள்ளைக்காரன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சஞ்சிதா. தில்லாலங்கடி
படத்தில் தமன்னாவுக்கு தங்கையாக நடித்தவர் அதன்பிறகு கொள்ளைக்காரன்
படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். பொங்கல் படங்களில்
கொள்ளைக்காரன் ஏதோ ஓரளவுக்கு ஓடினாலும் சஞ்சிதாவுக்கு இன்னமும் படங்கள்
ஏதும் புக் ஆகவில்லை. இவரைப் பற்றி இதுவரைக்கும் சிங்கிள் பிட் கிசுகிசு
கூட வந்ததில்லை. ஆனால், சஞ்சிதாவோ கிசுகிசு பற்றி பெரிய விரிவுரையே
கொடுக்கிறார். ‘கிசுகிசு வருவது நடிகர் நடிகைகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு
பிளஸ்ஸான விஷயம்தான். ஆனால் கிசுகிசு என்பதில் கொஞ்சமாவது உண்மை இருக்க
வேண்டும். வெறுமனே பரபரப்பை உருவாக்குவதற்காக கிசுகிசு எழுதக்கூடாது…’
என்று சொல்கிறார் சஞ்சிதா.
12:00 by iamvenkatesh · 0
Subscribe to:
Posts (Atom)







