விஜய் தந்த வாய்ப்பு - தவறவிட்ட இயக்குநர்



விஜய்யை வைத்து துள்ளாத மனமும் துள்ளும் என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்தவர் இயக்குநர் எழில். ஜெயம் ரவியை வைத்து தீபாவளி என்னும் படத்தை இயக்கியவர் அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது சிவகார்த்திகேயனை வைத்து மனம்கொத்திப் பறவை என்னும் படத்தை இயக்கியிருக்கிறார். துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் இவரைக் கூப்பிட்டு இரண்டு தெலுங்கு படங்களைக் குறிப்பிட்டு அவற்றை ரீமேக் பண்ணலாம். என்னை வைத்து இயக்குங்கள்... என்று சொல்லியிருக்கிறார். ஆனால் ரீமேக் படம் பண்ணினால் அது கௌரவக் குறைச்சலை ஏற்படுத்தும் என்ற எண்ணத்தில் அந்த வாய்ப்பை விட்டுவிட்டாராம் எழில். இது குறித்து இப்போதும் ஃபீல் பண்ணுகிறார் எழில். விஜய் தந்த வாய்ப்பை பயன்படுத்தியிருந்தால் இன்னும் மிகப்பெரிய உயரத்திற்கு எழில் போயிருந்திருப்பாரோ!

hotlinksin

0 Responses to “விஜய் தந்த வாய்ப்பு - தவறவிட்ட இயக்குநர்”

Post a Comment