பவர் ஸ்டாரை பஞ்சராக்கிய இயக்குநர் பாலா
விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் பவர் ஸ்டாரை குத்தி வலுக்கட்டாயமாக பஞ்சராக்கினார் கோபிநாத். இதைத் தொடர்ந்து பவர் ஸ்டாருக்கு ஏகப்பட்ட அனுதாபங்களும், கோபிநாத்துக்கு கண்டனங்களும் வந்து குவிந்தன. இது ஒருபுறமிருக்க இப்போது இயக்குநர் பாலா பவர் ஸ்டாரை பஞ்சராக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பரதேசி என்னும் படத்தை பிஸியாக இயக்கிவருகிறார் பாலா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதில் எக்குதப்பான ஒரு கேரக்டர். இதில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்த பாலாவிடம் யாரோ இந்த கேரக்டரில் பவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து பவர் ஸ்டாரையே அந்த கேரக்டருக்கு கமிட் செய்திருக்கிறார் பாலா.
சந்தோஷமாக தனது பரிவாங்களுடனே படப்பிடிப்புக்கு போய் இறங்கியிருக்கிறார் பவர் ஸ்டார். பவரின் இந்த மாஸ் கிரியேட்டிங் சீன்ஸ் பாலாவுக்கு பிடிக்காது என்பதால் பவர் ஸ்டாரை பக்கத்தில் வைத்துக் கொண்டே பக்கத்தில் ஒருவரைத் திட்டுவது போல பவர் ஸ்டாரை சாடை மாடையாக திட்டித் தீர்த்துவிட்டாராம். பாலா திட்ட திட்ட பஞ்சரான பவர் ஸ்டார், தப்பித்தால் போதும் என்று அங்கிருந்து எஸ்கேப் ஆகியிருக்கிறார்.

Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “பவர் ஸ்டாரை பஞ்சராக்கிய இயக்குநர் பாலா”
Post a Comment