அடிடா அவளை... உதைடா அவளை... வெட்ரா அவளை...


மயக்கம் என்ன படத்தில் வரும் இந்த பாடல் வரிகளை இந்த கட்டுரைக்குத் தலைப்பாக வைத்திருப்பது ஏன் என்பது இந்த கட்டுரையை படித்து முடிக்கும் போது உங்களுக்குப் புரியும். அதே நேரத்தில் இந்த பாடலை நீங்களும் என் நண்பனுக்காக பாடுவீர்கள் என்றே நினைக்கிறேன்.

சமீபத்தில் ஒருநாள், மாலை நேரத்தில் இசையருவி பார்த்துக் கொண்டே டீக்கடையில் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருந்த போது என் நண்பனிடம் இருந்து என் மொபைலுக்கு அழைப்பு வந்தது. என்னைப் பார்க்க வேண்டும் என்னிடம் பேச வேண்டும் என்று அவன் அழைத்ததும் வண்டியில் நண்பனைப் பார்க்கக் கிளம்பினேன். பீச் போலாமாடா... கொஞ்சம் ப்ரீயா பேசணும்... என்றான். ம்... அதனால என்ன? தாராளமாகப் போகலாம்.

மெரினா கடற்கரைக்கு பயணப்பட்டோம். வண்டியை பார்க்கிங் பண்ணிவிட்டு ஒரு ஓரமாய் இருந்த சுவரில் அமர்ந்தோம் இருவரும். என் நண்பன் வெறுமனே கடலைப் பார்த்துக் கொண்டே இருந்தான். என்னடா ஆச்சு? ஏன் பேசாம இருக்கே... என்றேன். ஏன்டா... எல்லா பொண்ணுகளுமே இப்படித்தான் இருப்பாங்களா? என்று அவன் கேட்க, அவனை நிமிர்ந்து பார்த்தேன். அவன் கண்கள் கலங்கியிருப்பதை அப்போதுதான் கவனித்தேன். என்ன ஆச்சு? என்றேன்.

அவ, என்ன மறந்துருன்னு சொல்லிட்டாடா... என்ற என் நண்பன் கேவி கேவி அழ ஆரம்பித்தான். என் வாழ்க்கையில் ஒரு இளைஞன் அழுவதை அப்போதுதான் முதன் முதலில் நான் பார்க்கிறேன். அவன் அழுத போது அவனை நெருங்கி உட்கார்ந்து கொண்டு அவன் தோளில் கை போட்டுக் கொண்டு அழாதடா... என்றேன். அவன் விம்மல் இன்னும் அதிகமாயிற்று. நண்பன் அழும்போது தேற்ற வேண்டிய எனக்கும் மனதுக்குள் கொஞ்சம் வேதனைதான் அவன் அழுகையைப் பார்த்த போது.

ஒரு சின்ன ப்ளாஷ்பேக்கை இந்த நேரத்தில் நான் உங்களுக்குச் சொல்லியாக வேண்டும். 

என் நண்பன் அவன் உறவுக்கார பெண்ணை சில மாதங்களாக காதலித்துக் கொண்டிருந்தான். அந்த பெண்ணின் வீட்டில் நல்ல வசதி. அவன் வீடடிலோ கொஞ்சம் சுமாரான வசதிதான். அந்த பெண் அவன் மீது உயிரையே வைத்திருந்தாள். அவன் மனதில் அந்த பெண்ணை இழந்து விடுவோமோ என்ற எண்ணம் அடிக்கடி வந்து கொண்டே இருக்கும். 

இதனாலேயே அவள் அவனிடம் போனில் பேசும் போதெல்லாம் ‘உங்க வீட்ல உன்ன எனக்கு கல்யாணம் பண்ணித் தரமாட்டாங்க...’ என்று சொல்லிக் கொண்டே இருப்பான். ஒரு கட்டத்தில் அவளும் எரிச்சலாகி ‘என் அப்பா அம்மா விருப்பப்படிதான் என் கல்யாணம் நடக்கும். இனிமேல் என்னிடம் பேசாதே... என்னை மறந்துரு...’ என்று சொல்லியிருக்கிறாள். 

ஏதோ விளையாட்டாக சொல்கிறாள் என்று நினைத்தவனுக்கு அவள் போன் நம்பரையும் மாற்றிவிட்ட பிறகுதான் நிஜமாகவே சொல்லியிருக்கிறாள் என்பது புரிந்திருக்கிறது. போகிற போக்கில் என் நண்பனையும் அவன் காதலையும் தூக்கிப் போட்டுவிட்டுப் போய்விட்டாள். சில நாட்களாகவே மனதுக்குள்ளேயே குமைந்த என் நண்பன் ஆட்டோகிராப் சேரன் மாதிரி சில நாட்கள் ஆகிவிட்டான்.

இந்த ப்ளாஷ் பேக்கில் அவன் காதலிப்பது வரைதான் எனக்குத் தெரியும். மீதி எல்லாவற்றையும் அன்று பீச்சில் வைத்து அவன் சொன்னபோதுதான் எனக்கு தெரியும். அவனை அவள் தூக்கி எறிந்துவிட்டுப் போய்விட்டாள் என்பதை நான் கேட்ட போது மிகவும் அதிர்ச்சியானேன்.

சரியான காரணம் ஏதும் சொல்லாமலே அவனை அந்த பெண் வேண்டாம் என்று சொன்னது என் நண்பன் மனதை கொஞ்சம் கொஞ்சமாக அறுத்துவிட்டது. வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டான். அன்று அவன் என்னை சந்தித்திருக்காவிட்டாலோ என் பிஸியான வேலைகளுக்கிடையே அவனை சந்திப்பதை அன்று நான் தவிர்த்திருநதாலோ ஒருவேளை என் நல்ல நண்பர்களில் ஒருவனை நான் நிச்சயம் இழந்திருப்பேன்.

அவனை நார்மல் நிலைமைக்கு கொண்டு வர நான் படாதபாடுபட்டேன். ஒருவழியாக ஏதேதோ பேசி சகஜ நிலைக்கு கொண்டு வந்ததேன். என்னிடம் சொன்னதில் அழுததில் அவன் மனதின் பாரம் கொஞ்சமாவது குறைந்திருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அவன் தங்கியிருக்கும் மேன்ஷ்னில் அவனை ட்ராப் பண்ணிவிட்டு வீட்டுக்குப் பயணமானேன். 

வண்டி ஓட்டும் போது எனக்கு அவன் நினைப்பாகவே இருந்தது. தன்னை உயிருக்கு உயிராக காதலிக்கும் ஒருவனை எப்படி இவ்வளவு ஈஸியாக இந்த பெண்களால் கழற்றி விட முடிகிறது...? நினைக்கும் போது மயக்கம் என்ன படத்தின் பாடலில் வரும் ‘அடிடா அவளை... உதைடா அவளை... வெட்ரா அவளை...’ வார்த்தைகள் என் மனதில் வந்து போயின.
hotlinksin

2 comments:

  1. வெட்றா அவளை அல்ல அது விட்ரா.. விடுடா அவளை என்பதே அப்பாடலின் வரி. வீட்டில் தெலுங்கும் வெளியில் தமிங்கிலமும் பேசித்திரியும் செல்வராகவன் நாவில் அவ்வார்த்தை விழுகையில் வெட்றா என்பது போல் ஒலிக்கிறது போலும்!

    ReplyDelete
  2. மிகவும் நன்றாக இருக்கிறது
    வாழ்த்துக்கள்

    ரத்த தானம் பெறுவதற்க்கும் கொடுப்பதற்கும் அணுகவும்
    www.shareblood.in


    இந்த தளத்தைப்பற்றியும் கட்டுரை எழுதலாமே!
    பலருக்கும் பேருதவியாக இருக்கும்
    www.shareblood.in

    ReplyDelete