ராஜபாட்டை விமர்சனம்



சுசீந்திரன் வெண்ணிலா கபடி குழு படத்தைப் பண்ணிய போது, அந்த படம் பெரிய அளவுக்கு வசூல் செய்யாவிட்டாலும், படம் பார்க்கிறப்ப ஏதோ ஒரு திருப்தி இருக்கும். அவரோட அடுத்தடுத்த படங்களில் அது மட்டும் மிஸ்ஸிங். ராஜபாட்டையும் இந்த வரிசையில நிரந்தர இடத்தைப் பிடித்திருக்கிறது.

ஜிம்பாய் அனல் முருகன் (விக்ரம்) படங்களிலே சண்டைக்காட்சிகளில் நடித்தாலும் பெரிய வில்லன் நடிகராக வரணும்ங்கிறதுதான் அவரது ஆசை. ஒரு நாள் ஒரு பெரியவரை சிலர் துரத்த அவர்களிடமிருந்து காப்பாற்றுகிறான் அனல் முருகன். அந்த அடியாட்களை அனுப்பியது தன் மகன் என்பதையும், தன் பெயர்ல இருக்கிற அனாதை இல்லத்தை அவனுக்கு எழுதிக் கொடுக்கலைன்னுதான் இப்படி எல்லாம் பண்ணுகிறான் என்று அனல் முருகனிடம் அந்த பெரியவர் சொல்ல தன்னுடன் அவர் இருந்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று அவருடன் அழைத்துப் போகிறான். தீக்க்ஷா சேத்தைக் காதலிக்க ஐடியா சொல்லிக் கொடுக்கிறார் அந்த பெரியவர். ஒரு கட்டத்தில் அனல் முருகனை தவறாக புரிந்து கொண்டு தன் மகனுடன் போகிறார் அவர். அந்த கும்பலிடமிருந்து அந்த பெரியவரையும் அனாதை இல்லத்தையும் அனல் காப்பாற்றினானா என்பது க்ளைமேக்ஸ்.
Rajapattai-Poster-Stills-003
ஜிம்பாய் கேரக்டரில் நடித்திருக்கிறார் விக்ரம். ஜிம் பாய் என்பதாலேயே உடம்பை அடிக்கடி காட்டிக் கொண்டு வருகிறார். சண்டைக்காட்சிகள் வந்துவிட்டால் விக்ரமை இன்ச் பை இஞ்சாக கேமரா காட்டிக் கொண்டே இருக்கிறது. கை நரம்புகள் புடைக்க… அய்யோ… அய்யோ… இதுக்கே ரொம்ப பிலிமை வேஸ்ட் பண்ணியிருக்காங்க போலிருக்கிறது. தீக்க்ஷா சேத் பேசுவதற்கு காட்சிகளே இல்லை. ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசுகிறார். நைட் பேன்ட்டோடு அவரை பல இடங்களில் அலையவிட்டிருக்கிறார் இயக்குநர். படத்தில் ஒரு சின்ன ஆறுதல் தம்பி ராமையா இவர் காமெடி என்று நினைத்து பண்ணும் இடங்கள் சிரிப்பை வரவழைக்காவிட்டாலும்… அத்திப் பூத்தா மாதிரி ஏதோ ஓரிரு இடங்களில் சிரிப்பு வந்து தொலைக்கிறது.

பெரியவர் விக்ரமுக்கு காதலிக்க சொல்லிக் கொடுக்கும் ஐடியாக்கள் ரசிக்கவைக்கின்றன. படம் பெரியவரையே மையப்படுத்தி நகர்வதால் படத்தின் ஹீரோ ரேஞ்சுக்கு தெரிகிறார் அந்த பெரியவர். அவர் தீக்க்ஷா சேத்திடம் ‘காதலிப்பீங்க… அப்புறம் அப்பா ஒத்துக்கலை… அம்மா ஒத்துக்கலைன்னு… கழற்றி விட்ருவீங்க…’ என்று சொல்லும் காட்சியில் ரசிகர்கள் நிஜமாகவே பீல் பண்ணி கைத்தட்டுகிறார்கள். அந்த பெரியவரே ‘பசிக்கும் போது சாப்பிட்ரணும்… இல்லேனா சாப்பாடும் வேஸ்ட் வயிறும் வேஸ்ட்…’ என்று சில இடங்களில் தத்துவத்தையும் கொட்டிவிட்டுப் போகிறார். அவர் போய் தீக்க்ஷா சேத்தை படத்துக்கு வரச்சொல்லுகிற காட்சி இருக்கிறதே… அப்பா செம அலப்பறை.
இயக்குநர் கதைக்கு பெரிய அளவுக்கு மெனக்கெடவில்லை போலிருக்கிறது. நிலத்தைச் சுருட்டும் கும்பல் அது சம்பந்தமான நெட் ஒர்க் என அங்குலம் அங்குலமாக நுழைந்து கதை சொல்லும் சுசீந்திரன் பல காட்சிகளில் நம்மைக் கடுப்படிக்க வைத்துவிடுகிறார். குறிப்பாக சண்டைக்காட்சிகள். சண்டைக்காட்சிகளில் நன்றாகவே ரிஸ்க் எடுத்திருக்கிறார்கள். ஆனால் சதா சண்டையையே காட்டிக் கொண்டும் இருக்கிறார்கள்.
படம் முடிந்த பின்பு விக்ரமுடன் ஆட்டம் போடும் ரீமாசென்னையும் ஸ்ரேயாவையும் பார்ப்பதற்கு கூட முடியாமல் ரசிகர்கள் வேகேவேகமாக வெளியேறுகிறார்கள். பேசாம அந்த பாடலை வைக்காமலே இருந்திருக்கலாம்.
hotlinksin

0 Responses to “ராஜபாட்டை விமர்சனம்”

Post a Comment