விஜய் மீது வீசப்படும் விமர்சனக் கணைகள் – ரசிகர்களின் பதிலடி





உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு இரண்டு பக்கம் அடி என்று சொல்லுவார்கள். ஆனால் நடிகர் விஜய்க்கோ பல இடங்களில் இருந்து இடியும் அடியுமாக விமர்சனங்கள் வந்து விழுகின்றன.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் ‘ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள டெல்லிக்கு போய்விட்டு வந்த ஒரு கலைஞனால் பக்கத்தில் இருக்கும் தேனிக்கு போக முடியாதா?’ என்று பாரதிராஜா சீறினார். சமீபத்தில் சென்னை வந்தார் அன்னா ஹசாரே. நடிகர் அர்ஜூன் அப்போது அவரை சந்தித்தார். ஆனால் விஜய் அவரைப் போய் சந்திக்கவில்லை. ‘அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த போது, டெல்லிக்கு போய் அவரை சந்தித்த விஜய், சென்னை வந்த போது அவரை சந்திக்கவில்லை’ என்று பொருமுகிறார்கள் அன்னா ஹசாரே ஆதரவாளர்கள்.

இது பற்றி விஜய் ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள். ‘சீறுவதற்கும் பொருமுவதற்கும் முன்பு ஒன்றை யோசித்தால் நல்லது, அன்னா ஹசாரேவை விஜய் சென்னை வந்த போது போய் பார்க்க வேண்டும் என்று ஏதும் கட்டாயம் இருக்கிறதா என்ன? அவருக்கு முக்கிய வேலை ஏதாவது இருந்திருக்கலாம். டெல்லி போய் பார்த்தவருக்கு சென்னை வந்த போது பார்க்க முடியாத சூழ்நிலை இருந்திருக்கலாம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொண்டால் சரி. முல்லை பெரியாறு விஷயத்தில் விஜய் தேனி போய்வந்தால் மட்டும் எல்லாம் சரியாகிவிடுமா என்ன…? விஜய் மீது மட்டும் ஏன் தொடர்ந்து விமர்சனக் கணைகளை ஏவிக் கொண்டிருக்கிறார்கள்…?’ என்று பதிலும் கொடுத்து கேள்வியும் எழுப்புகிறார்கள் விஜய் ரசிகர்கள்.


hotlinksin

1 comment: