த்ரிஷா, இலியானா வேண்டாம்... - கடுப்பான இளம் இயக்குநர்




த்ரிஷா, இலியானா போன்ற நடிகைகளை தமிழில் அறிமுகப்படுத்திய இயக்குநர் ஜோதிகிருஷ்ணா. பிரமாண்ட செலவில் உருவான உனக்கு 20 எனக்கு 18, கேடி போன்ற படங்களை இவர் இயக்கியிருக்கிறார். இப்போது ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் ஊலலலா. இந்தப் படத்தில் ஹீரோவும் அவரே. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தைப் பற்றி பேசிய அத்தனை பேருமே படத்தைப் பற்றிய செய்திகளை பகிர்ந்து கொண்டார்கள். ‘படம் முழுக்க முழுக்க காமடியாக இருக்கும் என்றும் பேருக்கு சும்மா கொஞ்சமா சென்டிமென்டையும் வெச்சிருக்கோம்... இந்த படம் நிச்சயம் நூறு நாட்களை கடந்து ஓடும்’ என்று பேசினார்கள். இதைத் தொடர்ந்து பேச வந்த ஜோதி கிருஷ்ணா, ‘இன்றைய சூழ்நிலையில் ஒரு படம் 100 நாட்கள் ஓடுவது எல்லாம் சாத்தியமே இல்லை... ரெண்டு வாரம் ஓடுவதே பெரிய விஷயமாக இருக்கிறது. என்னுடைய முதல் படத்தில் கத்துக்கிட்ட நிறைய விஷயங்களை எடுத்துத் தள்ளியிருந்தேன். இதனாலேயே படம் முழுக்க பேன்டஸியாக இருந்தது. ஆனால் இந்த ஊலலலா படத்தைப் பொறுத்தவரை கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் தான் வெச்சிருக்கோம். பார்க்கிற ஒவ்வொரு ரசிகனுக்கும் இந்த படம் பிடிக்கும். அந்த அளவுக்கு படத்தில காமெடி இருக்கிறது...’ என்று மிகவும் எதார்த்தமாக பேசினார் ஜோதி கிருஷ்ணா. அவரது அமைதியான பேச்சே அவரது படத்தில் ஏதோ விஷயம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தியது.

நீங்கள் அறிமுகப்படுத்திய த்ரிஷா, இலியானா போன்றவர்களிடம் கால்ஷீட் கேட்டீர்களா...? என்று கேட்டதற்கு அவர்கள் பிஸியான நடிகைகளாக இருக்கிறார்கள். அவர்களிடம் கேட்டால் ஆளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக கால்ஷீட் கொடுப்பார்கள். படம் முடிய இன்னும் காலதாமதம் ஆகும் என்பதால்தான் அவர்களிடம் கேட்கவில்லை... இந்த படத்தில் ப்ரீத்தி பாண்டாரியை அறிமுகப்படுத்துகிறேன். அவரும் மிகப்பெரிய அளவுக்கு முன்னணி நடிகைகள் இடத்தைப் பிடிப்பார்...’ என்கிறார் ஜோதிகிருஷ்ணா.

00:33 by iamvenkatesh · 0

hotlinksin

தமிழகத்தில் தினந்தோறும் காணாமல் போகும் இளம் பெண்கள் - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!


தமிழகத்தில் நாள்தோறும் 10 முதல் 20 வயதுவரையுள்ள பெண் குழந்தைகள் பருவப் பெண்கள் காணமால் போயுள்ளனர். இத்தகவல் மாநில குற்றப்புலனாய்வுப் புள்ளி விவரம் சென்ற ஆண்டு சேகரித்தது.

2010 ஆம் ஆண்டை விட 2011 ஆம் ஆண்டில் இப்படி காணாமல் போனவர்கள் எண்ணிக்கை கூடுதல் தான்.

சொத்துக்காக, பாலியல் வக்ரங்களுக்காக, விபச்சாரக்  கும்பலிடம் விற்க, கட்டாயத் தாலிகட்ட, குடும்பச் சூழலில் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு ஓடுவது, ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி ஓடுவது, காதல் விவகாரம். போன்ற காரணங்களுக்கு காணாமல் போகின்றனர். குறிப்பாக விபச்சாரத்தை தொழிலாக நடத்தும் கும்பல்கள் வாலிபர்கள் சிலரை வேலைக்கு அமர்த்தியுள்ளது போல் தோன்றுகிறது?! இவர்கள் பலகீனமான சிறுமிகளுக்கு காதல்வலைவீசி அவர்களைக் கடத்தி இந்த கும்பலுக்கு விற்றுவிடுவதும் சில இடங்களில் நடப்பதாக தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன.

பெண் குழந்தைகள் பருவப் பெண்கள் மட்டுமல்லாமல் பையன்களும் பெருமளவு காணமால் போவதும் நடக்கிறது. இவர்கள் தொழிலகங்களில் வேலை செய்யவும், எடுபிடி வேலை பார்க்கவும் அமர்த்தப்படுகின்றனர்.

ஓர் இடத்திலிருந்து இதுபோன்ற வயதுள்ளவர்கள் ஆண்டுதோறும் காணாமல் போவது சமூகப் பிரச்சனையாகும். காவல்துறை, தொண்டு நிறுவனங்கள், இதர சமூக நல அமைப்புகள் விழிப்போடு கண்காணிப்பை அதிகப்படுத்தினால் தவிர இது போன்றவை கூடுதலாக நிகழ்வதை தடுக்க இயலாது. “தனக்கு உடன்பாடான ஒன்று இல்லாத நிலையில்தான் இதுபோன்ற காணாமல் போகும் மனநிலை உருவாகிறது. சிலர் தாமாகவே திரும்புவதும் உண்டு சிலர் திரும்பச் சென்றால் எண்ணாகுமோ என்ற அச்சத்தில் வேறு நிலைக்கு தங்களை உட்படுத்திக் கொள்கின்றனர். இதில் பெரும்பாலும் உரிய விழிப்புணர்வு இல்லாமல் அப்பாவிகளாக இருப்போர், உரிய குடும்பப் பராமரிப்பு குறைவானவர்கள், உறவுகளின் உதாசீனம், புறக்கணிப்பு, அவமரியாதை, அடி – உதைகள் போன்றவைகளால்  ஓடிப் போகும் மனநிலைக்கு ஆளாகின்றனர்.

பல சமயங்களில் மக்கள் அதிகம் கூடும் இடமான ரயில்நிலையம், பேருந்து நிலையங்களில் காவல் துறையினர் சந்தேகம் வரும் இந்த வயதுள்ளவர்களைக் கண்டறிந்து ஒப்படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இது எதனால் நிகழ்கிறது ஏன் நடக்கிறது. இடம் விட்டு இடம் பெயரும் இந்த சம்பவங்கள் எதற்காக தொடர்ந்து அதிகரிக்கிறது என்பதெல்லாம். தீவிரமாக ஆராய வேண்டிய சமூகப் பிரச்சணையாகும்.

முன்பெல்லாம் பெரியவர்கள் புதிதாக தங்கள் பகுதியில் புதிய நபர்கள் தென்பட்டால் யார் இவர் என விசாரிப்பார்கள். இன்று சென்னை போன்ற பெருநகருக்கு மக்கள் அதிக எண்ணிக்கையில் வருவதால். விசாரிப்பு குறைந்து விட்டது. அத்துடன் நமக்கேன் வம்பு, தலைக்கு மேல் வேலை உள்ளது என்ற அவசர கதியில் நகரமும் நகரத்தின் மக்கள் போக்கும் மாறிவிட்டதால் அண்டை  அயலில் கூட நட்பு கொள்வது குறைந்து விட்டது. பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் பற்றிய விவரங்கள் கூட தெரிவதில்லை. இன்னும்  இது போன்ற சமூக காரணிகள் காணாமல் போகிற சம்பவங்களுக்குக் காரணமாகிறது.

14:28 by iamvenkatesh · 0

hotlinksin

இந்த அரசு பள்ளியிடம் தனியார் பள்ளிகள் பிச்சைதான் எடுக்கணும்...



"அரசுப் பள்ளி ஒன்று தமிழ்நாட்டில் இருக்கும் மற்ற தனியார் பள்ளிகளுக்கே சவால் விடும் பள்ளியாக இருந்து வருகிறது..." - கேட்பதற்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. அந்த பள்ளிக்கூடத்திற்கு நேரடியாக விசிட் அடித்த போது இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருந்தன.



 கோவை மாவட்டம், காரமடை ஒன்றியம், ஜடையம் பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் இந்த பள்ளி இயங்கி வருகிறது.  இந்த ஆரம்ப பள்ளி 1930 ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.  இராமபாளையம் மட்டுமில்லாமல் சுற்றுபுற பகுதிகளை சேர்ந்த  34 குழந்தைகள் இப்பள்ளியில் படித்து வருகிறார்கள்.  இந்த பள்ளியானது ஒரு தரம் வாய்ந்த ஆங்கில பள்ளிக்கு இணையாக இருக்கிறது.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு ஏற்ற இயல்பான கிராம சூழல், போதுமான கட்டிட அமைப்பு, நவீன பளிங்கு கல்லால் ஆன மாதிரி வகுப்பறைகள்.  இன்றைய வாழ்க்கைக்கு தேவையான அவசியமான கணினி பயிற்சி வகுப்புகள்.  குழந்தைகள் குழுவாக அமர்ந்து உரையாட வட்ட மேஜை வசதிகள்.  குழந்தைகள் நாட்டு நடப்பை தெரிந்து கொள்ள ஆங்கில, தமிழ் நாளிதழின் தினசரி வாசிப்புகள்.  மாணவ மாணவியரை பராமரிக்கும் சிறப்பு பதிவேடுகள், வண்ண சீருடைகள், கழுத்தணி அடையாள அட்டை என எதை எடுத்தாலும் பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம் வியப்பான சங்கதிகளே !
நூலகத்தில் ஆரம்ப பள்ளி கல்வியிலிருந்தே கற்ற நவீன மின்னணு வசதியுடன் கூடிய நூலக வசதி, கணினி தொலைக்காட்சி, அறிவியல் ஆய்வு உபகரணங்கள், செய்வழி கற்றல், அட்டைகளை சிறப்பாக வைக்க வடிவமைக்கப்பட்ட பலகைகள் என பார்த்தாலே பரவசமூட்டுகிறது.

இப்பள்ளியில் சுத்தமான சுத்திகரிக்கப்பட்ட வெந்நீர், குடிநீர், காற்று, மாசுக்களை தடுத்து குழந்தை நோயிலிருந்து காக்கும் பொருட்டு தடுப்பு கண்ணாடி ஜன்னல்கள்.  இந்தபள்ளியில் படிக்கும் குழந்தைகள் ஆரோக்கியமான சூழலில், சிறந்த கல்வியினை கற்கின்றனர்.  விரும்பி வந்தும் சேருகிறார்கள்.  சென்ற ஆண்டு மெட்ரிக் பள்ளியிலிருந்து 4 குழந்தைகள் இந்தப் பள்ளிக்கு வந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

    
குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் கல்வியினை வரமாய், தவமாய் போதித்து கொண்டிருக்கிறார்கள்.  இந்தப் பள்ளி சிறந்து வளர்ச்சியடைய பொதுமக்கள் தாராளமாய் நன்கொடைகளை அளித்து வருகிறார்கள்.  அந்த நன்கொடைகளை ஆசிரியர்கள் சரியாய் பயன்படுத்தி கொள்கிறார்கள். இந்த பள்ளியின் ஆசிரியர் கூறும்போது "தமிழகத்தில் இதுபோன்ற பள்ளி இது மட்டுமே என்று சொல்லலாம் சார்.  தமிழ்நாட்டில் இருக்கிற ஒவ்வொரு அரசுப் பள்ளியும் பிறர் உதவியை நம்பாமல் மக்கள் உதவியை மட்டுமே நம்பினால் சிறப்பாய் வளரும்" என்கிறார்.

னியார் பள்ளிகளை நோக்கி ஓடும் பெற்றோர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும். நம் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளையும் இது போன்று தத்தெடுத்து மேம்படுத்தினால் எல்லா அரசு பள்ளிகளும் இந்த பள்ளி போன்று சிறப்புடன் விளங்கும் என்பதில் ஐயமில்லை. தனியார் பள்ளிகளுக்கு வாரி வழங்கும் பணத்தில் பாதியையாவது இது போன்ற அரசு பள்ளிகளுக்கு கொடுத்து அந்த பள்ளிகளில் கவனம் செலுத்தினோமால் அரசு பள்ளி தனியார் பள்ளியை விட பல மடங்கு மேம்பட்டதாக விளங்கும்...

19:56 by iamvenkatesh · 0

hotlinksin

மழைக்காலம் - விமர்சனம் (ரசிகர்களுக்கு இது போராத காலம்...)




இயக்குநர்கள் ஹீரோவை நம்பி படம் எடுப்பார்கள்... கதையை நம்புவார்கள்... இல்ல திரைக்கதையை நம்பி... அதுவும் இல்லன்னா படத்தில் ஏதோ ஒன்றை கண்டிப்பாக நம்பி படம் எடுப்பார்கள். மழைக்காலம் படத்தின் இயக்குநர் க்ளைமேக்ஸை நம்பி படம் எடுத்திருக்கிறார். ஒருத்தனை ரூம் போட்டு 2 மணி நேரம் அடிச்சு துவச்சிட்டு அப்புறமா கையில ஒரு சாக்லேட்டைக் கொடுத்து அனுப்புறது மாதிரிதான் இருக்கிறது இந்த மழைக்காலம் ட்ரீட்மென்ட்.

விஜய், கவின் கலைக் கல்லூரி மாணவியான ஷோபியாவை (சரண்யா) எதேச்சையாக சாலையில் பார்க்கிறான். அது பின்னர் ஆழமான நட்பாக உருவெடுக்கிறது. அவள் தன் அப்பாவையும் அண்ணனையும் ஒரு விபத்தில் இழந்ததை விஜய்யிடம் சொல்ல, அவள் மீது அவனுக்கு அனுதாபம் பிறக்கிறது. அவளுடன் வாழ வேண்டும் என்று ஆசைப்படும் விஜய் தன் அண்ணன் அண்ணியிடம் சொல்லி அவளை பொண்ணு கேட்க சொல்கிறான். அண்ணனும் அண்ணியும் ஷோபியா வீட்டில் போய் பெண் கேட்க, அவர்களிடம் தனக்கு திருமணமே தேவையில்லை... என்று கத்திவிடுகிறாள் ஷோபியா. இதன் காரணத்தையும் அவனிடம் சொல்ல மறுக்கிறாள் சோபியா. காரணத்தை சொல்லாவிட்டால் செத்து விடுவேன் என்று சொல்கிற விஜய்யிடம், திருமணத்தை மறுப்பதற்கான காரணத்தை சொல்லாமல் செய்தே காட்டுகிறாள் ஷோபியா. அதன் பிறகு அவன் காதல் என்னவாகிறது என்பது க்ளைமேக்ஸ்.

என்ன படிக்கும் போதே சப் என்று இருக்கிறதா...? பார்க்கும் போதும் அப்படித்தான் இருக்கிறது. படத்தில் க்ளைமேக்ஸ் ஸ்ட்ராங்கா இருக்கிறது என்ற காரணத்தால் மற்ற விஷயங்கள் எல்லாவற்றிலும் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குநர். திரைக்கதை என்றால் என்ன என்று கேட்கிற மாதிரி இருக்கிறது படம் துவக்கத்தில் இருந்து க்ளைமேக்ஸ் வரை. ஒவ்வொரு காட்சியும் பிட் பிட்டாக வந்து போகிறது. பிட்டு படத்தில கூட இதைவிட நல்லா சீன் சீக்வென்ஸ் வெச்சிருப்பாங்க... சொதப்பலான காட்சிகள் நம்மை வசப்படுத்துவற்கு பதிலாக எரிச்சலையும் சலிப்பையும் வர வைக்கின்றன.

காதாநாயகனாக புதுமுகம். இவருக்கு ஜோடியாக காதல் சரண்யா. இரண்டு பேரையும் பார்க்கும் போது சரண்யாவை அக்கா என்றும் ஹீரோவை தம்பி என்றும் சொல்லலாம் அந்த அளவுக்கு சரண்யா முகத்தில் முதிர்ச்சி ஓங்கி ஒலிக்கிறது. அதே நேரத்தில் தம்பி நடிகரை... சாரி... ஹீரோவைப் பார்க்கும் போது நடுநிலைப் பள்ளி மாணவன் போல இருக்கிறார். நடிப்பதற்கு பெரிய அளவுக்கு ஸ்கோப் இல்லாத கேரக்டர் என்பதால் யாருமே மெனக்கெடாமல் நடித்துவிட்டுப் போகிறார். அந்த அண்ணி கேரக்டரில் வருகிற நடிகை மட்டும் அண்ணியாக நடிக்கச் சொன்னால் அம்மாவாகவே நடித்துவிடுவார் போலிருக்கிறது. அந்த அளவுக்கு நடிப்பை அள்ளித் தெளிக்கிறார்.

பின்னணி இசை தேவையே இல்லை என்று நினைத்துவிட்டார் இசையமைப்பாளர். சண்டைக்காட்சி, பாடல்கள் தவிர மற்ற இடங்களில் பெரும்பாலும் மியூட்தான். சர்ச்சில் ஹீரோவும்  ஹீரோயினும் போகிற போது, காரில் போகும் போது என அவ்வப்போது வந்து போகும் ஒரு மெல்லிய இசை மனதை வருடிவிட்டுப் போகிறது. காமெடிக்கு என கஞ்சா கருப்பு வந்து ரசிகர்களை சாகடிக்கிறார். காமெடி என்றால் பார்க்கிறவங்க சிரிக்கணும்... ஆனால் கஞ்சா கருப்புவோட காமெடியைப் பார்த்தால்... அழுகையே வருகிறது.

நல்ல காதல் கதை... ஸ்ட்ராங்கான க்ளைமேக்சுடன்... கைவசம் இருந்தால் அதை எப்படி திரைக்கதை அமைத்து பின்னி பெடலெடுக்கலாம்... ஆனால், மழைக்காலம் படத்தின் இயக்குநர் ரசிகர்களை பின்னி பெடல் எடுக்கிறார்.

16:02 by iamvenkatesh · 0

hotlinksin

கேபிள்சங்கர் சொன்ன கதை... ஆடிப்போன தயாரிப்பாளர்...





கேபிள்சங்கர் பற்றி ‘கேபிள்சங்கருக்கு வலை வீசும் இயக்குநர்கள்’ என்னும் தலைப்பில் சமீபத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தோம். அந்த செய்திக்குப் பிறகு சுந்தர் சி படத்திற்கு வசனம் எழுதி முடித்த கையோடு மேலும் இரண்டு படங்களுக்கு வசனம் எழுதிக் கொண்டிருக்கிறார் கேபிள்சங்கர். திரைக்கதை, வசனம் எழுதும் போது, கைவசம் இருக்கும் எக்கச்சக்க ஐடியாக்களை எடுத்துக் கொடுக்கும் திறமை கேபிள் சங்கரின் ஸ்பெஷல். நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வந்த போதிலும் அவற்றை மென்மையாக மறுத்தே வருகிறார் இவர். இதற்கு காரணம் அடுத்து இவர் படம் இயக்கப் போவதால்தான். கனா காணும் காலங்கள் தொடரில் இயக்குநர் அதில் நடிக்கும் நடிகர்களின் வற்புறுத்தலின் பேரில் நடித்து வருகிறார். இதெல்லாம் சராசரி செய்தி என்றாலும் இனி சொல்லப் போவதுதான் முக்கிய செய்தி. முன்னணி தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஒருவரை சமீபத்தில் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்திருக்கிறார் கேபிள். தன் பட இயக்கம் பற்றி அவரிடம் பேச உங்கள் கதையின் ஒன்லைன் சொல்ல முடியுமா என்று தயாரிப்பாளர் கேட்டிருக்கிறார். ஒருவரியில் கேபிள் கதையைச் சொல்லி முடிக்க, முழுக்கதையை கேட்காவிட்டால் தலையே வெடித்துவிடும் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் தயாரிப்பாளர். ‘நெக்ஸ்ட் வீக்ல டைம் ஃப்ரீ பண்ணிட்டு சொல்றேன்... அப்போ வந்து முழுக் கதையையும் சொல்லுங்க... ஓ.கே.னா உடனே ஸ்டார்ட் பண்ணிடலாம்...’ என்று சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர். அந்த கதை படமாக உருவாகும் பட்சத்தில் என்ன தலைப்பு வைத்தால் கமர்ஷியலாக செட் ஆகும் என்று கேபிள்சங்கர் தீவிரமாக ஆலோசித்து வருகிறாராம்.

02:10 by iamvenkatesh · 0

hotlinksin

IPL 5 கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு LIVE


20:16 by iamvenkatesh · 0

hotlinksin

துள்ளுவதோ இளமை + மயக்கம் என்ன = '3' - விமர்சனம்






இரண்டு படங்களிலிருந்து கதைகளை எடுத்து ஒரு படம்தானே பண்ண முடியும்; ஆனால் 3 படம் பண்ண  முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். துள்ளுவதோ இளமை, மயக்கம் என்ன இந்த இரண்டு படங்களையும் நீங்கள் பார்த்திருந்தால், துள்ளுவதோ இளமை படத்தின் முதல் பாதியையும் மயக்கம் என்ன படத்தின் இரண்டாவது பாதியையும் சேர்த்துப் பாருங்கள்... அடடே... அதுதான் 3 படத்தின் கதை... 3 படத்தை இயக்குவதற்கு முன்பு செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார் சவுந்தர்யா. அந்த நேரத்தில் பேசாமல் செல்வராகவனின் மற்ற படங்களையும் பார்த்திருந்தால் இன்னும் கொஞ்சம் கலவையாக கிடைத்திருக்கும் 3.

இனி 3 படத்தின் கதையைப் பார்ப்போம். ராம், +2 படிக்கும் வசதியான வீட்டுப் பையன். ஒருநாள் மழையில் நனைந்து கொண்டே பைக்கில் பள்ளிக்கூடம் போகும் போது, கதாநாயகி ஜனனியைப் பார்க்கிறான். சைக்கிள் செயின் மாட்டிக் கொள்ள அதை சரி செய்ய அவள் படாத பாடுபடுகிறாள். இதைப் பார்க்கும் ராம், ஹீரோவாச்சே... உடனே ஓடிப்போய் உதவி பண்ணுகிறார். அதன்பிறகு அவள் பள்ளி சீருடையை வைத்தே எந்த பள்ளிக்கூடம் என்பதை கண்டறிந்து அங்கிருந்து அவள் ட்டியூசன் போகும் வழியில் மட்டுமின்றி வீடு வரும் வரை காவல்காரன் வேலை பார்க்கிறார் ராம். தான் காதலிப்பதை ராம் ஜனனியிடம் சொல்ல, அப்புறம் அவளும் காதலை ஏற்றுக் கொள்கிறாள். கல்யாணம்... தனிக்குடித்தனம் என்று போகும் ராம் - ஜனனி, வாழ்க்கையில் ராமிடம் திடீரென வந்து குடி கொள்கிறது மனவியாதி. அதன்பிறகு அவர்கள் வாழ்க்கையில் எப்படியெல்லாம் சூறாவளி வீசுகிறது என்பது கதை.

இப்ப புரிஞ்சிருக்குமே... ஏன் துள்ளுவதோ இளமை படத்தையும் மயக்கம் என்ன படத்தையும் வம்புக்கு இழுத்தோம் என்று. 

இயக்குநர் ஐஸ்வர்யாவை ஒரு விஷயத்தில் கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். படத்தின் க்ளைமேக்ஸை முதலிலேயே வைத்துவிட்டார். அதாவது தனுஷ் தற்கொலை செய்து கொள்வதை. இதற்கு என்ன காரணம் என்றால், படத்தின் முற்பகுதி கலகலப்பாக போனாலும் அடுத்த பாதியில் படம் அடித்து தூக்கி நிறுத்தினாலும், படுத்துவிடுகிறது. இந்த மாதிரி போர் அடிக்கிற நேரத்தில் வெறுப்பில் சிலர் தியேட்டரை விட்டு வெளியேறி விடுவார்கள். ஒருவேளை அப்படி யாராவது போய்விட்டால் படம் பார்க்கும் யாருக்கும் க்ளைமேக்ஸ் பார்க்கவில்லையே என்ற எண்ணம் வரக்கூடாது அல்லவா... அதனால் முன்னெச்சரிக்கையாக ஐஸ்வர்யா க்ளைமேக்ஸை முதலிலேயே வைத்துவிட்டார்.

பள்ளி மாணவனாக வரும் தனுஷ் அவருடன் நண்பனாக வரும் சிவகார்த்திகேயன் இருவருமே படத்தின் இடைவேளை வரை செம கலாட்டா பண்ணுகிறார்கள். சிவகார்த்திகேயன் அவ்வப்போது அடிக்கும் டைமிங் காமெடிக்கு திரையரங்கமே அதிருகிறது. இதனால் இடைவேளை வரை படம் நகர்வதே தெரியவில்லை. ஆனால், இடைவேளைக்கு அப்புறம்தான் சனி தியேட்டர் திரையில் வந்து உட்கார்ந்து விடுகிறது. மனவியாதியால் பாதிக்கப்பட்ட தனுஷை அவர் நண்பர் மருத்துவமனைக்கு அழைப்பதும், தனுஷ் மறுப்பதும், பின்பு மருத்துவமனைக்கு போவதும் இப்படியே காட்சிகள் கடந்து கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட டிராமா மாதிரி. இதைவிட்டால் ஸ்ருதி அழுவதை காட்டுகிறார்கள். அதுவும் க்ளோஸ் ஷாட்டில் அழுகை அழுகை... ஒரே அழுகையாக அழுகிறது பொண்ணு. நிஜ வாழ்க்கையில் புருஷன் செத்தா கூட இப்படி அழமாட்டங்க. அதை விட ஓவராக அழுகிறார். படம் முடியும் போது இவர் அழும் காட்சிகளில் தியேட்டரில் ரசிகர்கள் பீல் பண்ணுவதற்கு பதிலாக சிரிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

ஸ்ருதி நடிப்பில் நன்றாகவே இம்ப்ரஸ் பண்ணுகிறார். இவர் ராம் ராம் என்று தனுஷை கூப்பிடும் காட்சிகள் அவ்வளவு அழகு. தியேட்டரை விட்டு வெளியே வந்தாலும் இவர் கூப்பிடும் ராம் ராம்... என்பது மட்டும் மனதுக்குள்ளே கேட்டுக் கொண்டே இருப்பது போல் ஒரு ஃபீல். என்ன... ஸ்ருதியை கொஞ்சம் கண்ணீர் குறைச்சலா சிந்த விட்டிருக்கலாம்.

தனுஷின் அப்பாவாக வரும் பிரபு. எப்போது பார்த்தாலும் ஃபைலில் ஏதோ எழுதியபடியே இருக்கிறார். அம்மாவாக வருகிறார் பானுப்ரியா. 


மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிய கொலைவெறி பாடலை கடற்கரையில் தனுஷ் டீமை ஆடவிட்டு ஒப்பேத்தியிருக்கிறார்கள்.

படத்தின் இடைவேளை வரைக்கும் கொஞ்சம் வேலை பார்த்திருக்கிறார் எடிட்டார். இடைவேளைக்கு பிறகு அவருக்கு தெரியாமல் வேறு யாரோ எடிட்டிங் வேலை பார்த்துவிட்டார்கள் போலும்.

கார் பார்க்கிங் ஏரியாவில் வைத்து நடைபெறும் அந்த சண்டை காட்சி பலே ரகம். சபாஷ் போட வைக்கிறது. அதுவும் தனுஷின் தலையை ஒருவன் பிடித்து கார் பேனட்டில் அடிக்க திருப்பி தனுஷே அதை போன்று அடித்துக் காட்டும் போது... சூப்பர் சீன். இது போன்று சின்ன சின்ன ஆனால் ரசிக்கிற மாதிரியான காட்சிகள் எக்கச்சக்கமாக இருந்த போதிலும் இடைவேளைக்கு பின்னர் வரும் தனுஷின் மனவியாதி சம்பந்தப்பட்ட வழ வழ காட்சிகள் படத்தை ஒரு திருப்தியில்லாமல் செய்துவிடுகின்றன.


படத்தை ஒரு தடவை பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வருகிற நமக்கே தனுசுக்கு வந்தது போன்ற மனவியாதி வந்துவிடும் போல் இருக்கிறது... அப்படி இருக்கும் போது, இந்த படத்தை வெளியிடுவதற்கு முன்பு படத்தின் இயக்குநர், எடிட்டர், இசையமைப்பாளர் இவர்கள் எல்லாம் படத்தை எத்தனை தடவை பார்த்திருப்பார்கள்... அவர்கள் நிலைமை... நினைக்கும் போதே... கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கிறது.

17:37 by iamvenkatesh · 0

hotlinksin

கோபிநாத்... நாங்க... நீயா நானா பார்க்கணுமா? வேண்டாமா?



கடந்த ஞாயிற்றுக்கிழமை நீயா நானா பார்ப்பதற்காக ஆர்வமுடன் வந்து பார்த்தால் பேரதிர்ச்சி காத்திருந்தது. டிவியில் கொஞ்சம் விரும்பிப் பார்க்கிற நிகழ்ச்சியே இது ஒன்றுதான். அதையும் இனிமேல் நீ பார்ப்பியா...? என்பது போல் அன்றைய நிகழ்ச்சி அமைந்திருந்தது. முதலில் டாப்பிக்கின் டைட்டிலை கேளுங்க... அப்புறம் உங்களுக்கே கோபம் வரும்... அதிகமாக சீன் போடுவது யார்...? ஆண்களா? பெண்களா? என்பதுதான் டைட்டில். நாலு பேரு நாலு விஷயங்களைப் பத்திப் பேசுவாங்க... கொஞ்சம் ஆவர்மாக பார்க்கலாம் என்று பார்த்தால்... கொஞ்சம் ஆண்கள் இந்த பக்கமும் கொஞ்சம் பெண்கள் அந்த பக்கமும் உட்கார்ந்து கொண்டு நீயா நானாவில் சீன் போடுவது பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

அதுவும் கோபிநாத் அவர்களிடம் வளைத்து வளைத்து கேள்வி கேட்கிறார். நீங்க எப்படி சீன் போடுவீங்க என்று... ஒவ்வொருவரும் அவரவருக்கு தோன்றியதை சொல்லி ஒப்பேத்துகிறார்கள். ஐந்து நிமிடம் பார்ப்பதற்குள் கடுப்பாகிவிட்டது.

வாரத்தில் ஒரு நாள் வருகிற நிகழ்ச்சி இந்த நீயா நானா. அதுவும் இந்த நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே டான் என நீயா நானா துவங்கும் நேரத்திற்கு ஆஜராகவிடுவார்கள். இது போன்ற டைட்டில்களை வைத்துக் கொண்டு விவாதிப்பது அவர்கள் அத்தனை பேருக்கும் ஏமாற்றத்தை அளிப்பதோடு மட்டுமில்லாமல் அவர்களது நேரங்களையும் திருடுவதற்கு சமமாகும். 
விவாதிப்பதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்க, இது போன்ற மொக்கையான விஷயங்களை ஏன் நீயா நானா டீம் எடுத்துக் கொள்கிறது என்று தெரியவில்லை. உங்களுக்கு ஐடியா இல்லை என்றால் ஒரு சிறிய விளம்பரம் ஒன்றை நிகழ்ச்சின் இடைவெளியில் கொடுங்கள். வந்து குவியும் ஆயிரம் டைட்டில்கள். அதைவிட்டுவிட்டு இது போன்று சப்பை கட்டு கட்டும் விவாதங்களை கண்டிப்பாக தவிருங்கள். இவை நீயா நானா நிகழ்ச்சியைப் பார்க்க வைப்பதற்கு பதிலாக... நிரந்தரமாக பார்க்க விடாமல் செய்துவிடும்...

03:50 by iamvenkatesh · 0

hotlinksin

வெங்காயம் தந்த மவுசு... - சந்தோஷத்தில் நடிகை



வெங்காயம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் பவினா. முதல் தடவை வெங்காயம் ரீலீஸ் ஆன போது வந்த வேகத்திலேயே படம் ரிட்டன் ஆனால் தவித்துப் போய்விட்டார் பவினா. இத்தனைக்கும் நடிப்பில் தூள் கிளப்பியிருந்தார் பவினா.  படம் ஓடாவிட்டால் சாதாரண ரசிகனே திரும்பிப் பார்க்க மாட்டான். அப்படி இருக்கும்போது இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் மட்டும் திரும்பிப் பார்த்துவிடுவார்களா என்ன? ஆனாலும் இவருக்கு சிறிய படங்கள் சில கமிட் ஆகின. அத்தனையும் கிளாமரான வேடங்கள். வந்தவரைக்கும் என்று அதிலும் நடித்துத் தொலைத்தார் பவினா. அதுவும் ‘ஒரு சந்திப்பில்’ படத்தில் இவரை அப்படியே வெங்காயத்தை உரிப்பது போல் உரித்துக் காட்டிவிட்டார்களாம். ஏறக்குறைய சூழ்நிலை படத்திலும் இப்படிப் பட்ட கேரக்டர்தானாம். ஆனால் சமீபத்தில் சேரன் வெங்காயம் படத்தை ரிலீஸ் செய்ய படத்திற்கு ஏகப்பட்ட மவுசு கூடியிருக்கிறது. படத்திற்கு மட்டுமல்ல படத்தில் நடித்த நடிகை பவினாவுக்கும்தான். பொண்ணு நல்லா நடிக்குதேப்பா என்று கோடம்பாக்க இயக்குநர்களே வாய்விட்டு சொல்லியிருக்கிறார்களாம். இதைக் கேட்ட சந்தோஷத்தில் பவினாவுக்கு கண்ணீரே வந்துவிட்டதாம். இதைத் தொடர்ந்து வேறு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் இப்போதைக்கு பவினாவின் வீட்டுக் கதவைத் தட்ட ஆரம்பித்திருக்கிறது.

03:11 by iamvenkatesh · 0

hotlinksin

இளம் நடிகை தலையில் நரைமுடி - டென்ஷனில் இயக்குநர்




நெடுஞ்சாலை படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் ஷிவதா. மலையாள கரையேரத்தில் இருந்து தமிழ் சினிமாவில் நடிப்பதற்காக அழைத்து வந்திருக்கிறார்கள் அம்மணியை. கேரள நடிகைகள் என்றாலே கொஞ்சம் கொழுக் மொழுக் என்று இருப்பார்கள். ஷிவதா அதற்கு கொஞ்சம் நேர் மாறாக இருக்கிறார். நெடுஞ்சாலை படத்தில் இவரை நடிக்க வைக்க முதலில் போட்டோ செஷன் படங்களை எடுத்திருக்கிறார்கள். படங்களை எடுத்து முடித்ததும் மீடியாக்களுக்கு செய்திகளையும் படங்களையும் கொடுத்திருக்கிறார்கள். அதுவரையிலும் ஏதும் தெரியவில்லை. அவர்கள் கொடுத்த படங்களை இணையதளங்கள் வெளியிட்டிருக்கின்றன. அதைப் பார்த்த நெடுஞ்சலை படத்தைச் சேர்ந்தவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. காரணம் நடிகை ஷிவதாவின் தலையில் நரை முடிகள் ஆங்காங்கே தலைகாட்டிக் கொண்டிருந்தன. போட்டோ செஷன் எடுத்து முடியும் வரை இதை கவனிக்காமலே இருந்திருக்கிறோமே என்று மேக்அப் மேன்களிடம் டென்ஷனாகியிருக்கிறார் இயக்குநர். ஆனாலும், ஒட்டு மொத்த மீடியாவுக்கும் கொடுத்து அவர்களும் வெளியிட்டுவிட்டார்கள். சரி... இருந்துவிட்டு போகட்டும் என்று படப்பிடிப்பு வேலைகளில் இறங்கிவிட்டாகளாம் நெடுஞ்சாலை டீமினர்.

00:59 by iamvenkatesh · 0

hotlinksin